பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்45

ணிற வொளியினால், நெஞ்சினில்-மனத்திலுள்ள, இருளினை -
அஜ்ஞானமாகிய இருட்டை, அகற்றி-போக்கி, மாறுபட்டிடும் - (நல்வழியிற்
செல்லவொட்டாது)மாறுபடுந்தன்மையுள்ள, ஐம்புலன்கள்உம் ஒடுக்கும் -
ஐம்பொறிகளையும் ஐம்புலன்களின்மேற் செல்லவொட்டாது
ஒடுங்கச்செய்கின்ற, மா தவன்-பெருந்தவசியாகிய அருச்சுனன், வளர்த்த -
(நாற்புறத்திலும்)மூட்டிக் கொழுந்துவிட்டெரியச் செய்த, செந் தழலால் -
செந்நிறமுள்ள அக்கினிகளால், கூறு பட்டு உமையோடு ஒரு வடிவு
ஆனோன் - (தனது)பாகமாகப் பொருந்தி உமாதேவியுடனே ஒருவடிவு
ஆன சிவபெருமானுடைய, குன்று - கைலாசமலையிலே, சூழ் - சூழ்ந்துள்ள,
அறை-பாறைகளும், பொறை-துறுகல்லுமாகிய, அனைத்துஉம் - எல்லாம்,
மாறுபட்டு-முன்னையநிலை [கெட்டியாயிருந்தநிலை] வேறாகி, உருகி-,
பெருகி ஓடின -:(ஏனெனில்),அம்மலை வெள்ளி ஆதலினால்-; (எ-று.)

     வெள்ளிமலை நெருப்பினாலுருகுதல், இயல்பு என்க.  திருநீற்றினால்
மனத்தின் மாசுபோமென்பதை, திருநீற்றுப்பதிகத்தாலும் அறிக.  நிலவினால்
இருள் நீங்குமென்ற இயல்பு, இங்குக் கருதத்தக்கது.                (58)

59. - அருச்சுனன்தவத்தைக்குலைப்போமென்றுவந்த
தேவமங்கையர் பஞ்சாக்கினிமத்தியில் தவம்புரியும்
அருச்சுனனைக்காணுதல்.

அலைத்தடங்கடலிலமுதொடுற்பவித்தாங்கமரர்வாழ்பதிகுடி
                                    புகுந் தோர்,
குலைத்துமென்றெண்ணியொருவருக்குக்கொருவர்கொடியிடை
                                  நுடங்கவந்தந்த,
மலைத்தடநெருங்கப்புகுந்தனர்குயிலும் மயூரமு
                                மானுமேயனையார்,
நிலைத்தவம்புரிவோனைவகைநெருப்பி னடுவுற
                                நின்றவாகண்டார்.

     (இ-ள்.)அலை - அலைகளையுடைய, தட கடலில்-பெரிய
சமுத்திரத்திலே, அமுதொடு-அமிருதத்துடனே, உற்பவித்து-தோன்றி, அமரர்
வாழ் பதி - தேவர்கள் வாழும் ஊரான அமராவதியிலே, குடிபுகுந்தோர்-குடி
புகுந்தவரான, குயில்உம் மயூரம்உம் மான்உம் ஏ அனையார் - (குரலாற்)
குயிலையும் (சாயலால்)மயிலையும் (நோக்கினால்)மானையுமே
யொப்பவரான தேவமாதர், - 'குலைத்தும்- (இவ்வருச்சுனனுடையதவத்தை)
அழிப்போம்',என்று எண்ணி-என்று நினைத்து,-ஒருவருக்கு ஒருவர் -
ஒருத்தரினும் ஒருத்தர், (முற்பட்டு),கொடி இடை நுடங்க - (தமது)கொடி
போன்ற இடை துவள, வந்து-,-அந்த மலை தடம் நெருங்க புகுந்தனர்-அந்த
மலைச்சாரலை நெருங்கப் புகுந்தவர்களாய், நிலை தவம் புரிவோன்-
நிலையான தவத்தைச் செய்பவனான அருச்சுனன், ஐவகை நெருப்பின் நடு
உற-பஞ்சாக்கினிமத்தியிலே பொருந்த, நின்ற ஆ-நின்ற வகையை, கண்டார்-
(எ-று.)

     புகுந்தனர் - முற்றெச்சம்.  ஆங்கு - அசை.                (59)