60.-தேவமாதர் பந்தடித்தல்முதலிய விளையாடல்களை அங்குச் செய்தல். அந்தரத்தமரர்துந்துபிமுழங்க வநங்கதுந்துபியெதிர்முழங்க, வந்துபொற்சிலம்புமேகலைவிதமுமலர்க்கைவெள்வளைகளு முழங்கப், பந்தடித்திடுவாரம்மனையெறிவார் பயில்கழங்காடுவார்நெற்றிச், சிந்துரத்திலகந்தீட்டுவாராகித்தனித்தனிதிசைதொறுஞ்சூழ்ந்தார். |
(இ-ள்.) அந்தரத்து-வானத்திலே, அமரர் துந்துபி-தேவர்களின் துந்துபி யென்னும் பறை, முழங்க-ஒலிக்கவும், எதிர்-(அதற்கு) நேராக, அநங்க துந்துபி-மன்மதனது பேரிகை, முழங்க-ஒலிக்கவும், வந்து-, பொன் சிலம்புஉம்-பொன்னாலாகிய சிலம்பென்னுங் காலணியும், மேகலை விதம்உம்-இடையணிவகைகளும், மலர் கை வெள் வளைகள்உம்- தாமரைமலர்போன்ற கைகளிலணிந்த வெள்ளிய சங்குவளையல்களும், முழங்க-ஒலிக்கவும், பந்து அடித்திடுவார்-; அம்மனை எறிவார்- அம்மானையை உயரவெறிந்து விளையாடுவார்:பயில் கழங்கு ஆடுவார்- (தாம்) பழகிய கழற்சிக் காயை யாடுவார்:நெற்றி-நெற்றியிலே, சிந்துரம் திலகம்-சிந்துரமென்கிற செம்பொடியினாலான திலகத்தை, தீட்டுவார் ஆகி- அணிவாருமாய், தனித்தனி-, திசைதொறுஉம்- திக்குக்களிலெல்லாம், சூழ்ந்தார்-சூழ்ந்துகொண்டார்கள்; (எ-று.) தேவமாதர் அருச்சுனன் தவம்புரியும் மலைச்சாரலில், அவன் மனத்தைத் தவத்தினின்றும் கலைக்கப் பந்தடித்தல் முதலிய விளையாடல் செய்தலையும் திலகந் தீட்டுதல் முதலிய அலங்காரத்தொழில் செய்தலையும் மேற்கொண்டா ரென்பதாம். (60) 61.-இதுமுதல் மூன்றுகவிகள் - பின்னுந் தேவமாதர் புரிந்த பல்வகை இங்கிதச் செயல்களைக் கூறும். குயிலொடுகூவிக்கிஞ்சுகமலர்ந்து கொஞ்சுபைங்கிளிகளை யழைப்பார், மயிலினநடிக்கத்தாமும்வண்கலாப மணியணியொளி யெழநடிப்பார், வெயில்விடுபரிதிமதியுடன்வலஞ்செய்விடரக முழுவதுமொலிப்பக், கயிலையங்கிரியின்சாரலோவெம்மூர்க் கடவுளா லயமெனக்களிப்பார். |
(இ-ள்.) கிஞ்சுகம் மலர்ந்து - முருக்கமலர்போன்ற (தம்) வாயைத் திறந்து, குயிலொடுகூவி-குயிலுடனே மாறுபட்டுக்கூவி, கொஞ்சு- கொஞ்சுந்தன்மையுள்ள, பைங் கிளிகளை - பசியநிறமுள்ள கிளிகளை, அழைப்பார்-; மயில்இனம் நடிக்க-மயிலின்திரள் நடனஞ் செய்யாநின்க, தாமும்-, வள் கலாபம் - வளப்பமுள்ள கலாபமென்னும் இடையணியினின்றும், மணி அணி ஒளி எழ - மணியினது அழகியஒளி எங்கும் வீசுமாறு, நடிப்பார் - நடனஞ் செய்வார்:வெயில் விடு பரிதி- வெயிலைவீசுகின்ற சூரியன், மதியுடன் - சந்திரனுடனே, வலம்செய்- பிரதட்சிணஞ் செய்கின்ற, விடர் அகம் முழுவதுஉம்-மலைமுழையினிடம் முழுதும், ஒலிப்ப-ஒலிபெறுமாறு, |