பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்57

னுக்கு உயிரெனச்சிறந்தோன்'என்றது;"மாலோனுயிர்போல்வான்" எனக்
கன்ன பருவத்து வருமாறும் உணர்க.

     இதுமுதல் ஏழுகவிகள் - 54-ஆங்கவிபோன்ற எழுசீராசிரிய
விருத்தங்கள்.                                             (75)

76.ஆடியானனன்றன்மதலையர்விரகாலாடியசூதினுக்கழிந்து
காடுதாமுறையுங்கடனினரவரிற் கடவுணாயகன்றருகாளை[மை
நீடுபேரமரிற்பகைவரைச்செகுக்குநினைவினானெருப்பிடைநம்
நாடியேயரிதிற்றவம்புரிகின்றானாமிதுமுன்னமேயறிவோம்.

     (இ-ள்.)ஆடி ஆனனன் தன்-கண்ணாடிபோன்றமுகத்தையுடைய
திருதராஷ்டிரனது, மதலையர்-புத்திரர்களாகியதுரியோதனாதியர்,விரகால்-
வஞ்சனையினால்,ஆடிய - ஆடின, சூதினுக்கு-சூதாட்டத்தில், அழிந்து -
தோற்று, காடு தாம் உறையும் கடனினர் அவரில் - காட்டில் தாங்கள்
வாசஞ் செய்யவேண்டும் கடமையை யுடையவர்களாகிய
அப்பாண்டவர்களில், கடவுள் நாயகன் தரு காளை-தேவராஜனான
இந்திரன்பெற்ற புத்திரனாகியஅருச்சுனன், நீடு பேர் அமரில் - நீண்ட
பெரிய யுத்தத்தில், பகைவரை செகுக்கும் நினைவினால்- பகைவர்களாகிய
துரியோதனாதியரைக்கொல்ல வேண்டுமென்னும் எண்ணத்தால், நெருப்பு
இடை - பஞ்சாக்கினி மத்தியில் நின்று, நம்மை நாடிஏ - நம்மைக்குறித்தே,
அரிதின் - (பிறருக்கு)அரிய விதமாக, தவம் புரிகின்றான்- தவஞ்
செய்கின்றான்;இது-இதனை,நாம்-,முன்னம்ஏ -
(நீசொல்வதற்கு)முன்னாகவே,அறிவோம்-;(எ-று.)-இதனால்,அருச்சுனன்
தவம்புரிகின்ற காரணத்தைச் சிவபெருமான் பார்வதீதேவியினிடம்
கூறுகின்றன னென்க.

     ஆடியானனன்என்றது - கண்ணாடிதான் பிறராற் காணப்பட்டுப்
பிறரைத் தான் காணும் உணர்ச்சியில்லாதது போலத் தான் பிறராற்
காணப்பட்டுப் பிறவிக்குருடனாதலாற்பிறரைத்தான் காணாத
முகத்தையுடையவ னென்றவாறு:
 இனி, கண்ணாடி போலவிளக்கமுடைய
முகமுடையவ னென்றுமாம்;அன்றியும், கண்ணாடிபுறங்காட்டாதவாறுபோல
வீரத்தால் முதுகுகாட்டாத முகமுடையவ னென்றுங் கொள்ளலாம்:
"வயக்குறுமண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற, முகத்தவன்"என்றார்,
கலித்தொகையிலும்.  ஆடிய-ஆடுவித்த. கடவுணாயகன்-தேவேந்திரன்;நீடு
அமர்-பலநாள் செய்யும் போர் என்றபடி.  நீடுபேர் -
ஒருபொருட்பன்மொழியுமாம்.  சூதினுக்கு=சூதில்: உருபுமயக்கம்.     (76)    

77. பருகுநீர்துறந்துகாற்றும்வெவ்வெயிலும்பாதவங்களின்
                             சினையுதிர்ந்த,
சருகுமேயொழியக்காய்கனிகிழங்குந் தானினிதருந்து
                             தறவிர்ந்தான்,
உருகுமாமனத்தைநாமுவந்திருத்தற்குறைபதியாக்கி
                              நம்மிடத்தே,
செருகினானுணர்வையாவரேயிவன்போற் செய்தவஞ்
                         சிறந்தவரென்றான்.