அன்பர்களுக்கெல்லாம், மெய்யனே - உண்மையாய் நிற்பவனே! எங்குஉம் ஆய் விளங்கும்-எல்லாவிடங்களிலும் பொருந்திவிளங்குகின்ற, சோதியே- தேஜோரூபியே!(எ-று.) மிகுந்தபக்தியுடன் கூறிய தாதலால், மேற்கவிகளோடு கூறியதுகூறலென்னும் குற்றமில்லை: "பத்தர்சொன்னவும் பன்னப்பெறுபவோ" எனக் கம்பர்கூறியவாறு அறிக. (119) 120. | முக்கணுநிலவெழ முகிழ்த்தமூரலும் சக்கரவதனமுந் தயங்குவேணியும் மைக்கயன்மரகத வல்லிவாழ்வுறு செக்கர்மெய்வடிவமுஞ் சிறந்துவாழியே. |
(இ-ள்.)(உன்னுடைய),முக்கண்உம்-மூன்று திருக்கண்களும், நிலவு எழ முகிழ்த்த மூரல்உம்-சந்திரனொளிபோன்றஒளி வெளித்தோன்றும்படியுண்டான புன்சிரிப்பும், சக்கரம் வதனம்உம்- வட்டவடிவமான முகமும், தயங்கு வேணிஉம்-விளங்குகின்ற சடையும், மை கயல் மரகதம் வல்லி வாழ்வுறு செக்கர் மெய்வடிவம்உம்-மையிட்ட கயல்மீன்போற் பிறழ்கிற கண்ணையுடையமரகதமணியாலாகிய கொடிபோலப் பசுநிறமாகவுள்ள பார்வதீதேவி வசிக்கப்பெற்ற சிவப்பான திருமேனியின் உருவமும், சிறந்து வாழி-மேன்மைப்பட்டு வாழக்கடவன; (எ-று.) முக்கண் -இயற்கை யிருகண்ணோடுநெற்றிக்கண். கயல், வல்லி - உவமவாகுபெயர்கள். ஒப்புயர்வில்லாத கடவுளுடைய திருமேனி கண்ணெச்சிற்படாமே காலதத்துவமுள்ளவரையும் ஒரு குறையுமின்றிக்கே நிலைபெறவேண்டுமென்கிறகருத்தோடு கூடிய மிக்க ஆர்வத்தால், 'சிறந்துவாழி'என வாழ்த்தினான். செக்கர் - பண்புப்பெயர். (120) 121. | அன்புறுதருமனுக் கனுசனாயினேன் நன்பரம்பொருளுக்குநண்புமாயினேன் பொன்புரைமேனியாய்போற்றினேனுனை என்பெருந்தவப்பயன்யார்பெற்றார்களே. |
(இ-ள்.)பொன் புரை மேனியாய்-பொன்னையொத்துஅருமையான திருமேனியையுடையவனே!அன்பு உறு தருமனுக்கு-(உயிர்களிடத்து) அன்புமிகுந்த தருமபுத்திரனுக்கு, அனுசன் ஆயினேன்-தம்பியானேன்;நல் பரம் பொருளுக்கு-சிறந்த பரதத்துவமாகிய கண்ணபிரானுக்கு, நண்புஉம் ஆயினேன்-சினேகிதனும் ஆனேன்;உனைபோற்றினேன்-உன்னையும் வணங்கினேன்;என் பெரு தவம் பயன்-எனது சிறந்த தவத்தினது பயன்போன்ற பயனை,யார் பெற்றார்கள்-வேறேயாவர் பெற்றார்? [எவருமிலர் என்றபடி]; அனுசன்=அநுஜன்:பின்பிறந்தவன்: பரம்பொருள்-எல்லாப் பொருள்களுக்கும் மேலான பொருள். நண்பு-ஆகுபெயர். "எஞ்சு பொருட்கிளவி செஞ்சொலாயிற், பிற்படக்கிளவார் முற்படக் |