கிடக்க -(நமக்குள்) இருத்தலால் என உரைப்பாருமுளர். "தீராக்கோபம் போராய்முடியும்" என்பது நீதியாதலால், பலநாளாயுள்ள பகைமை சமாதானமாய் முடியாது என்றான். நாவலம்பூதலம், அம்-சாரியை யெனினுமாம். இந்தத்துவீபத்தின் மத்தியிலுள்ள மகாமேருமலையின் தென்புறத்தி லிருக்கின்றதொரு மிகப்பெரிய நாவல் மரத்தைப் பற்றித்தான் ஜம்பூத்வீப மென்கிற பெயர் இதற்கு உண்டாயிற்று; ஜம்பூ - நாவல். கோவலன் - கோபாலன் என்னும் வடசொல்லின் விகாரம்: பசுக்களைக் காப்பவனென்றும், உயிர்களைக்காப்பவனென்றும், பூமியைக் காப்பவனென்றும் பொருள்படும். இனி, தமிழ்மொழியாகவே, கோவலன் எனப்பிரித்து, பசுக்களைக் காத்தலில் வல்லவன் எனப் பொருள்கொள்ளினுமாம். காவலன் - எனப் பிரிந்து காத்தற்றொழிலையுடையவ னென்றும் பொருள்படும். நாவலந்தீவைக் கூறியது - மற்றைத் தீவுகட்கும் உபலக்ஷண மென்றலும் ஒன்று. அருகிலுள்ளவராதலின், இத்தீவினரசரை மாத்திரம் எடுத்துக் கூறினான். உம்மைகள் ஐந்தனுள், முதலது சிறப்பு, மற்றவை - எண்ணுப்பொருளன. (87) 28. | அன்னநடை யரம்பைதனையவுணர்கவர்ந்திட விமையோரரசுக்காக, முன்னமவருடன் பொருதுசிறை மீட்டானங்குலத்து முதல்வனன்றோ, மன்னவையில் யாங்காணமடவரலைத்துகிலுரிந்த வலியோன்றன்பால், இன்னமிரந்தவன்குடைக்கீ ழிருந்தக் கானம்மையுலகென் சொலாதே. |
(இ - ள்.) நம் குலத்து முதல்வன் - நாம்பிறந்த குலத்தில் தோன்றிய பழையஅரசனாகிய புரூரவனென்பவன், முன்னம் - ஆதி காலத்திலே, அன்னம் நடைஅரம்பைதனை - அன்னப்பறவையின் நடைபோன்ற நடையையுடைய (ஊர்வசியென்னுந்) தேவமகளை, அவுணர் கவர்ந்திட - அசுரர்கள் (பலாத்காரமாக)எடுத்துச்செல்ல, இமையோர் அரசுக்கு ஆக - தேவர்களுக்கு அரசனானஇந்திரன் பொருட்டாக, அவருடன் பொருது - அவ்வசுரரோடு போர்செய்து,சிறை மீட்டான் அன்றோ - (அவளை அவ்வசுரரது) காவலில் நின்றும்விடுவித்தானன்றோ? (அவ்வாறிருக்க), மடவரலை - (நம் ஐவர்க்கும்பத்தினியான) இளமைப்பருவத்தின் வருகையையுடைய திரௌபதியை, மன்அவையில் - இராச சபையிலே, யாம் காண - (கொழுநராகிய) நாமெல்லோரும்பார்க்க, துகில் உரிந்த - (துச்சாதனனால்) வஸ்திராபஹரணஞ் செய்த,வலியோன்தன்பால் - நெஞ்சுறுதியுள்ள துரியோதனனிடத்து, இன்னம் -இன்னமும், இரந்து - (இராச்சியத்தை) யாசித்து, அவன் குடை கீழ்இருந்தக்கால் - அவனது அரசாட்சியின்கீழே வாழ்ந்திருந்தால், உலகு நம்மைஎன்சொலாது - உலகத்தவர் நம்மை யாதுதான் சொல்லமாட்டார்கள்?[பெரும்பழி கூறுவ ரென்றபடி]; (எ - று.) சந்திரனது மைந்தனாகிய புதன் இளையினிடத்துப் பெற்ற புத்திரனாகிய புரூரவனென்பவன், நிலவுலகத்தில் ஒரு பூஞ்சோலையில் வந்து விளையாடிக்கொண்டிருந்த தேவலோகத்து மாதர்களுள் |