பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 117

பட்டன. இங்குக் கூறிய இக்காரியங்களெல்லாம் செய்து முடிக்கக்
கூடாதனவாதலால், பாரதப் போர் வாராமற்காத்தலும் முடியாதெனக்
குறிப்பித்தபடி.

     அணங்கு- தேவமகளும், திருமகளும், மோகினி யென்னும் பெண்
தெய்வமுமாம்; இங்கே திரௌபதிக்கு உவமவாகுபெயர்.  கன்னன் கர்ண
குண்டலங்களோடு பிறந்தமை பற்றியது; காதின் வழியே பிறந்ததனால் வந்த
பெயரென்றுங் கூறுவர்; கர்ணம் - காது.  பாண்டவர்கள் தாயான குந்திதேவி
கன்னிகையா யிருந்தபொழுது தனக்குத் துருவாசமுனிவ ருபதேசித்த
மந்திரத்தைப் பரீட்சித்தறியும் பொருட்டுச் சூரியனை நினைத்து அம்மந்திரத்தை
உச்சரிக்க, உடனே அத்தேவன் வந்து அவளுக்கு அநுக்கிரகித்ததனால்,
அவளிடம் பிறந்த புத்திரன் இவன்; இவனைப் பிறந்தபொழுதே குந்தி பழிக்கு
அஞ்சி மிதக்கும் மரப்பெட்டியொன்றில் வைத்துப் பூட்டிக் கங்கையாற்றில்
விட்டிட, அதனைத் திருதராட்டிரனது தேர்ப்பாகனான அதிரதனென்பவன்
கண்டு எடுத்துத் திறந்து பார்த்துக் கொண்டுபோய்த் தன் மனைவியான
ராதையும் தானுமாக வசுசேனனென்று பெயரிட்டு வளர்த்தான்; இவனுக்குக்
கர்ணனென்ற பெயர் ஆகாசவாணி யிட்டது.  இவன் துரியோதனனுக்குப்
பிராணசினேகிதனாகி அவனருளால் அங்கதேசத்திற்கு அரசனாயினான்.  கார்
ஆர் குழல் - மேகத்தை யொத்த கூந்தலுமாம்; ஆர் - உவமவுருபு.  ஏல் -
என்னில்; மரூஉ. ("குற்றமே காக்க பொருளாக," "அரும்பண்பினாற்றீமைகாக்க,"
"செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்" என்ற விடங்களிற்போல) இங்கே,
காத்தல் தடுத்தற் பொருளதாயிற்று.  நின்னையும், உம் - இறந்தது தழுவிய
எச்சத்தோடு உயர்வுசிறப்பு.  'கன்னன் பாராள' என்றது - துரியோதனனது
தீச்செயல்க ளெல்லாவற்றிற்கும் அவனே பெரிய உதவியாய் நிற்பதனாலும்,
பாண்டவதுரியோதனாதியர் அனைவரிலும் மூத்தவனாதலாலும்,
துரியோதனனுக்கு மிக நண்பனும் பாண்டவர்க்கு மிகப்பகைவனு மாதலாலும்,
ஈகைக் குணமுடைய அரசனாதலாலுமென்க.  'காலில் தளைபூட்டி' என்பதற்கு
திரௌபதியின் காலிலே விலங்கைப் பூட்டி யென்று உரைப்பாருமுளர்; அதற்கு
இங்கே இயைபின்று.                                         (95)

36.-கண்ணன் சகதேவனதுதிறத்தைப் பரீக்ஷித்தல்.         

முன்னநீ கூறியவை யெல்லாமுடித்தாலும்
என்னைநீ கட்டுமாறெவ்வா றெனமாயன்
உன்னைநீ தானு முணராதாயுன்வடிவந்
தன்னைநீ காட்டத்தளைந்திடுவன் யானென்றான்.

     (இ -ள்.) (இங்ஙனங்கூறிய சகதேவனைநோக்கி),- மாயன் - விசித்திர
சக்தியை யுடையவனான கண்ணன்,- 'நீ முன்னம் கூறியவை எல்லாம்
முடித்தாலும் - நீ முன்னே சொன்ன காரியங்களையெல்லாம்
நிறைவேற்றினாலும், நீ என்னை கட்டும் ஆறு எ ஆறு -
(இறுதியிற்சொன்னபடி) நீ என்னைக்கட்டும் வகை எப்படி?' என - என்று
வினாவ,- (அதற்குச் சகதேவன்),- 'உன்னை நீதானும் உண