பக்கம் எண் :

120பாரதம்உத்தியோக பருவம்

தேடி காணா -தேடியும் பார்க்கமுடியாத, மலர் அடியோன் - தாமரை
மலர்போன்ற திருவடிகளையுடையவனான கண்ணபிரான்,- நீ தேவன் என்று
அறிந்து நெஞ்சால் தனை கட்டும் சாதேவன் கண்களிக்க - 'நீயே
கடவுளாவாய்' என்று (தனது சொரூபத்தை) உணர்ந்து மனத்தினாலே தன்னைக்
கட்டின சகதேவன் கண்ணாற்கண்டு களிக்கும்படி, தானே ஆய் முன் நின்றான்
மற்றை யுருவங்களை யெல்லாம் மறைத்து (அவற்றிற்குக் காரணமானதும்
சகதேவனாற் கருதப்பட்டதுமான) தனது நிஜரூபமேயாய் அவனெதிரில்
(காட்சிகொடுத்து) நின்றருளினான்; (எ - று.)

    "பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன்" என்ற
இரண்டு தன்மைகளும் இச்செய்யுளால் நன்கு விளக்கப்பட்டன.  தேவன்
என்றசொல்லுக்கு விளங்குபவ னென்றும், வானுலகத்தவ னென்றும் பொருள்.
கனகப்பூங்கா - பொன்மயமான பூக்களையுடைய சோலை யென்றுமாம்.
தேவர்கள் விண்ணுலகத்திற் பஞ்சதருக்களின் நிழலில் வசித்தல், "இன்றளிர்க்
கற்பக நறுந்தேனிடை துளிக்கு நிழலிருக்கை" எனக் கம்பராமாயணத்திற்
கூறியதனாலும் விளங்கும்; அது பற்றியே, 'காநிழல் வைகும் மாதேவர்'
என்றது. பொன்னுலகத்திலுள்ள எல்லாப் பொருளும் பொன்மயமானவை
யாதலால்,'கனகப்பூங்கா' எனப்பட்டது.  காக்கப்பட்டது கா என்று
செயப்படுபொருள்விகுதி புணர்ந்துகெட்ட காரணப்பெயர்.  பூதேவர் -
பூமியில் தேவர் போலச்சிறப்புப்பெற்று விளங்குபவர்.  "நிலத்தேவர்" என்றார்
ஆழ்வாரும்.  இங்கே,'பூதேவரும் மாதேவரும் தேடிக்காணாத அடி' என்றது-
அன்புநிலையிற்குறைவுபட்டார்க்கு அகப்படாத தன்மையை. 
கடவுளையறிதற்கு இடமும்சாதியும் குலமும் முதலியன காரணமல்ல,
மனத்தூய்மையே காரணம் என்பதுஇதில் விளங்கும்.  மலரடி -
உவமத்தொகை.  வினைத்தொகையாய்,(திரிவிக்கிரமாவதார காலத்தில்
உலகமெங்கும்) பரந்த திருவடி யெனினுமாம். திருமாலின் அம்சாவதாரமான
கண்ணபிரான் சகதேவனது பக்தியைஉணர்ந்திருந்தும் இவ்வாறு பரீட்சித்தது-
அதனைத் தான் அனுபவித்துக்களிக்கவும், இச்சகதேவனுக்கு ஓர் சிறப்பை
வெளிப்படுத்தவும் என்க.                               (98)

39.-கண்ணன் 'என்காலைவிடுக' என்று சொல்ல, சகதேவன்
வரம் வேண்டுதல்.

அன்பாலின் றென்னையறிந்தே பிணித்தமைநன்று
என்பா தந்தன்னை யினிவிடுகவென்றுரைப்ப
வன்பார தப்போரில்வந்தடைந்தே மைவரையும்
நின்பார்வை யாற்காக்கவேண்டு நெடுமாலே.

இதுவும், அடுத்த கவியும் - குளகம்.

     (இ -ள்.) (கண்ணன் சகதேவனை நோக்கி), - 'அன்பால் இன்று என்னை
அறிந்து பிணித்தமை நன்று - பக்தியினால் இப்பொழுது எனது சொரூபத்தை
(நீ) உணர்ந்து கட்டியது நன்றாகவுள்ளது,