இனி என்பாதந்தன்னை விடுக - இனி எனது கால்களை விட்டிடுவாயாக, என்று உரைப்ப - என்று சொல்ல,- (அதற்குச் சகதேவன் கண்ணனைநோக்கி), - நெடுமாலே - பெருமைக்குணமுடையவனான கண்ணனே! - வந்து அடைந்தேம் ஐவரையும் - (உன்னை) வந்து சேர்ந்துள்ளவர்களான எங்கள் ஐந்துபேரையும், வல் பாரதம் போரில் - (இனி நிகழும்) கொடிய பாரத யுத்தத்திலே, நின்பார்வையால் காக்க வேண்டும் - உனது திருவருள் நோக்கத்தாற் பாதுகாத்தருளவேண்டும்; (எ - று.)-'என்று' என, அடுத்த கவியோடு இயையும்.
அடைந்தேம் ஐவர் - தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி; வழாநிலையாயின், 'ஐவேம்' என நிற்கும்; இதில், உம்மை - இனைத்தென்றறி பொருளில் வந்த முற்றும்மை. பார்வை - நோக்கம்: கடாட்சம்; தொழிற்பெயர்: வை - விகுதி. நெடுமால் - மகாவிஷ்ணு; நீண்ட திருமாலுமாம். (99) 40.-கண்ணன் சகதேவனுக்குவரமளித்து, நடந்ததை இரகசியமாக வைக்கும்படி நியமித்தல். என்றென் றிறைஞ்சி யிருதாமரைத்தாளி லொன்றுங் கதிர்முடியாற்கோமென் றுரைத்தருளி யின்றிங் கிருவேமு மிப்போதுரைத்தமொழி யொன்றும் பிறரறிய வோதாதொழிகென்றான். |
(இ - ள்.) என்று என்று-என்று பலதரஞ்சொல்லி, இறைஞ்சி-நமஸ்கரித்து, இருதாமரை தாளில் - (கண்ணனது) தாமரைமலர்போன்றஇரண்டு திருவடிகளிலே,ஒன்றும் - பொருந்திய [சரணமடைந்த], கதிர் முடியாற்கு - ஒளியுள்ளகிரீடத்தை யுடையவனான சகதேவனுக்கு, (கண்ணன்), ஓம் என்று உரைத்தருளி- 'அப்படியேயாகுக' என்று உடன்பாடாகக் கூறியருளி,- 'இன்று இங்குஇருவேமும் இப்போது உரைத்த மொழி ஒன்றும்-இன்றைத்தினம் இவ்விடத்தில்நாமிரண்டுபேரும் இப்போது (தனியே) பேசிக்கொண்ட வார்த்தைகளுள்ஒன்றையும், பிறர் அறிய ஓதாது ஒழிக - எவரும் அறியச் சொல்லாமல்விடுவாயாக,' என்றான் - என்று கூறினான்;
என்று என்று-அடுக்கு, பன்மைப்பொருளது; இது, சகதேவனது அன்பு மிகுதியை விளக்கும். ஓம் - அங்கீகாரப் பொருளை யுணர்த்தும் வடமொழி யிடைச்சொல்; (வடமொழி மகா காவியத்தினுரையில் மல்லிநாதசூரி உரைத்தவாறும் காண்க.) இருவேம் - இரண்டு என்னும் எண்ணினடியாப் பிறந்த தன்மைப் பன்மைப் பெயர்; (முன்னிலை - இருவீர், படர்க்கை - இருவர்.) 'ஓதா தொழிக' என்றது, அவதாரத்தின் மெய்ப்பாட்டால். ஓதா தொழிக-ஒருசொல்தன்மையது; 'ஒழி' - துணிவுப்பொருளுணர்த்தும். (100) 41.- சகதேவன் திரௌபதியைநோக்கித் தனது அபிப்பிராயங் கூறுதல். ஆண்டிருந்த வவைநீங்கியறிவுடையோ ரிருவோரும் பாண்டவர்கண் முன்னெய்திப்பழுதில்புகழ்ப் பாஞ்சாலி |
|