யையும்,விதுரனுக்குத் துரியோதனனிடத்தில் வெறுப்பையும் உண்டாக்குவதை மேலே காண்க. முதலடி- முற்றுமோனை. வந்துவந்து - அடுக்கு, மிகுதிப் பொருளது. பரமன் - தனக்குமிக்காரை யில்லாதவனென்றும், சிறந்த இலக்குமியையுடையவனென்றும் பொருள்படும். கண்மலர் = மலர்க்கண்; முன்பின்னாகத் தொக்க உவமைத்தொகை. கண்ணன் உட்புகுதற்கேற்ற பாக்கியத்தைப் பெற்றதனால், 'வாழ்வளமனை' எனப்பட்டது. (135) 76.-கண்ணன் விதுரன்மாளிகையிலே சிங்காதனத்தில் வீற்றிருத்தல். வேந்தர்யாரையும்விடைகொடுத்தகன்றபின்விமலன் வாய்ந்தமாளிகைநடுவணோர்மண்டபங்குறுகி ஆய்ந்துவல்லவர்நவமணியழுத்தியவரியே றேந்துமாசனமிடப்பொலிந்ததன்மிசையிருந்தான். |
(இ -ள்.) வேந்தர் யாரையும் - (எதிர்கொண்ட) அரசரெல்லா ரையும், விடை கொடுத்து - (இன்சொற் சொல்லிச்) செலவு கொடுத்தனுப்பிவிட்டு,- அகன்றபின் - (அவர்கள்) நீங்கினபின்பு,- விமலன் - குற்றமற்ற பரிசுத்த மூர்த்தியான கண்ணன்,- வாய்ந்த மாளிகை நடுவண் - பொருந்திய (விதுரனது) கிருகத்தின் நடுவிலுள்ள, ஓர் மண்டபம் - ஒரு மண்டபத்தை, குறுகி - அடைந்து,- ஆய்ந்து வல்லவர் நவ மணி அழுத்திய - (சிற்ப நூல்களை) ஆராய்ந்து வல்லவர்களால் நவரத்தினங்களையும் பதித்துச் செய்யப்பட்ட, அரி ஏறு ஏந்தும் ஆசனம் - ஆண்சிங்கந் தாங்குவது போலமைந்த ஆசனமொன்றை, இட - (விதுரன் கொண்டுவந்து) சமர்ப்பிக்க, அதன் மிசை பொலிந்து இருந்தான் - அத்திவ்விய சிங்காதனத்தின்மீது விளக்கமாக எழுந்தருளியிருந்தான்; (எ -று.) (136) 77.-விதுரன்கண்ணபிரானைவணங்கி உஜ்ஜீவித்தல். இருந்துவந்தருளிறைவனையிறைஞ்சினானிறைஞ்சிப் பெருந்துவந்தனைப்பிறப்பையுமிறப்பையும்பிரித்தான் மருந்துவந்தனையமரருக்கருளியமாயோன் விருந்துவந்தனனென்றுளமுருகியவிதுரன். |
(இ -ள்.) 'வந்தனை அமரருக்கு - (தன்னை) வணங்குதலைச் செய்த தேவர்கட்கு, மருந்து - (திருப்பாற்கடலினின்று உண்டான) அமிருதத்தை, அருளிய - பகிர்ந்துகொடுத்தருளிய, மாயோன் - ஆச்சரியசக்தியுள்ளவனான திருமால், விருந்துவந்தனன் - (எனதுகுடிசைக்கு) விருந்தினனாக எழுந்தருளினான்,' என்று - என்று கருதி, உளம் உருகிய - (மிக்ககளிப்பால்) மனங்கரைந்த, விதுரன் -,- இருந்து உவந்தருள் இறைவனை - (சிங்காதனத்தில்) வீற்றிருந்து திருவுள்ளமுகந்தருளுகிற கண்ணபிரானை, இறைஞ்சினான் - வணங்கினான்; இறைஞ்சி - (அங்ஙனம்) வணங்கி, (அம்மாத்திரத்தால்), |