பக்கம் எண் :

160பாரதம்உத்தியோக பருவம்

வீசுசாமரமிரட்டவெண்மதிக்குடைநிழற்றக்
கேசவன்மணிக்கேசரித்தவிசிடைக்கிளர்ந்தான்.

     (இ -ள்.) (இங்ஙனம் யாவரும் புசித்தபின்பு), - வாசம் நீரும் -
நறுமணத்தையுடைய பனிநீர் கலவைச்சந்தனக்குழம்பு முதலியவற்றையும், வள்
சுண்ணமும் - அழகியவாசனைப் பொடிகளையும், முறை முறை வழங்க -
ஒன்றன்பின் ஒன்றாக (விதுரன்) கொடுக்க, - (அவற்றை), பூசுறும் தொழில்
பூசினார் - பூசவேண்டிய வகைப்படியே (மார்பு தோள் முதலிய இடங்களிற்)
பூசிக்கொண்டார்கள்; சூடினார் புனைந்தார் - (விதுரனாற் கொடுக்கப்பட்ட
புஷ்பசரம் மாலை முதலியவற்றைத் தலையிற்) சூடிக்கொண்டார்கள் (உடம்பில்)
தரித்துக்கொண்டார்கள்; (அப்பொழுது), - கேசவன் - கண்ணபிரான்,- வீசு
சாமரம் இரட்ட - வீசுதற்கு உரிய சாமரங்களை வீசவும், வெள் மதி குடை
நிழற்ற - வெண்மையான பூரண சந்திரன்போன்ற வெண்கொற்றக் குடை
நிழலைச்செய்யவும்,- மணி கேசரி தவிசு இடை - இரத்தினங்களைப்
பதித்துள்ள சிங்காதனத்தினிடத்திலே, கிளர்ந்தான் - விளக்கமாக
வீற்றிருந்தருளினான்; (எ - று.)

    வாசநீர் - பனிநீர்; இதைக் கூறியது, கலவைச் சந்தனக்குழம்பு
முதலியவற்றிற்கும் உபலக்ஷணம்.   'பூசறுத்துழி' என்ற பாடத்திற்கு,
பூசுதற்கென்று வரையறுக்கப்பட்ட இடங்களி லென்க.  சாமரம் - சமரமென்னும்
மானின் வால்மயிரினாற் செய்யப்பட்டது.  குடைக்குப் பூர்ணசந்திரன் -
வட்டவடிவிலும், வெண்ணிறத்திலும், ஒளியிலும், குளிர்ச்சி செய்தலிலும்
உவமை.  மதி - (யாவராலும்) மதிக்கப்படுவதெனக் காரணப்பெயர்.
கேசவனென்னும் வடமொழித் திருநாமத்துக்கு - பிரமனையும் உருத்திரனையுந்
தன் அங்கத்திற்கொண்டவனென்றும், (க - பிரமன்.  ஈச - சிவன்), அழகிய
தலைமயிர்களையுடையவனென்றும், கேசியென்னும் அசுரனைக்
கொன்றவனென்றும் பொருள்கள் கூறப்படும்.  கேஸரீ -
பிடரிமயிர்களையுடையதென்று பொருள்; ஆண்சிங்கம்: கேஸரம் - பிடரிமயிர்.
                                                       (144)

85.-சூரியாஸ்தமன வருணனை.

ஞானகஞ்சுகவிதுரன்வாழ்மனையினாயகனும்
போனகம்பரிவுடனுகர்ந்திருந்தவப்பொழுதிற்
றானுமேருவுக்கப்புறத்தவ்வமுதருந்தப்
பானுவும்பெருங்குடதிசைப்பரவையிற்படிந்தான்.

     (இ -ள்.) ஞானம் - தத்துவஞானமாகிய, கஞ்சுகம் - கவசத்தைத் தரித்த,
விதுரன் -, வாழ் - வாசஞ்செய்கின்ற, மனையின் - திருமாளிகையிலே,
நாயகனும் - (எல்லாவுயிர்க்குந்) தலைவனான கண்ணபிரானும்,- போனகம் -
உணவை, பரிவுடன் - (விதுரன் பக்கல்) அன்புடனே, நுகர்ந்து - அமுது
செய்து, இருந்த - வீற்றிருந்த, அ பொழுதில் - அந்தச்சமயத்திலே,- பானுவும்
- சூரியனும், - தானும்-, மேருவுக்கு அப்புறத்து அ அமுது அருந்த -
மகாமேருகிரிக்கு அந்தப்புறத்திலே (சென்று) அப்படிப்பட்ட தேவாமிருதத்தை