பட்டசூரியனது கைகள்போலுமெனக் குறித்தார்; தன்மைத்தற் குறிப்பேற்றவணி. (147) 88.-அவ்வந்திமாலையிற்குவிந்த தாமரைமலர்களின் வருணனை. நீதியிற்புகல்பகலெலாநீரரமகளிர் மீதுறைத்தெழும்வெவ்வெயில்படாவகைவிரித்துப் போதுபுக்கதென்றினம்படச்சுருக்கியபூம்பட் டாதபத்திரம்போன்றனதாமரையடவி. |
(இ -ள்.) தாமரை அடவி - (மாலைக்காலத்தில் குவிந்த) தாமரை மலர்த் தொகுதிகள்,- நீதியின் புகல் பகல் எலாம் - முறைமையாகச் சொல்லப்படுகிற பகற்பொழுது முழுவதிலும், உறைத்து எழும் வெம் வெயில் - உக்கிரமாக எழுகிற உஷ்ணமாகிய சூரியனொளி, நீர் அரமகளிர்மீது - நீரில்வாழுந் தெய்வமகளிர்மேல், படாவகை - பட வொண்ணாதபடி, விரித்து - பரப்பப்பட்டிருந்து, - போது புக்கது என்று - அப்பகற்பொழுது ஒடுங்கிவிட்டதென்ற காரணத்தால், இனம்பட சுருக்கிய - வரிசையாக மடக்கப்பட்ட, பூ பட்டு ஆதபத்திரம் - அழகிய பட்டுக்குடைகளை, போன்றன - ஒத்தன; (எ - று.) நீரின்மீது பகல்முழுவதும் மலர்ந்திருந்து அப்பகல்கழிகையில் குவிந்த தாமரைமலர்களை, நீர் தன்னிடத்தில் வாழுந் தேவமாதர் மீது சூரியகிரணம் பட்டு உறைக்காதபடி பகல்முழுவதும் மேலே விரித்துப் பிடித்து அப்பகல் கழிகையில் மூடிவிட்ட குடைகளைப் போன்றனவென்று வருணித்தார்; இதுவும், தன்மைத்தற்குறிப்பேற்றவணி.வெண்தாமரை மலர்களை வெண்பட்டுக் குடைகளாகவும், செந்தாமரைமலர்களைச் செம்பட்டுக் குடைகளாகவுங் கொள்க.ஆதபத்ரம் - வெயிலினின்று காப்பதென்று பொருள்; ஆதபம் - வெயில்:நன்றாகத்தபிப்பது. வெம்மையுடையது, வெயில் எனக் காரணக்குறி. நீரரமகளிர் - ஜல தேவதாஸ்திரீகள். அரமகளிர் - அமரமகளிர் என்பதன் மரூஉ; அரம்பைமகளிர் என்பதன் விகாரமுமாம். நீதியின் விரித்து என இயைத்து, தருமமாக மலர்த்திப்பிடித்து என்றுமாம். (148) 89.-இது -அந்திக்காலத்தில் அந்நகரம் இருந்த காட்சி. கலந்துமங்கலமுழவுவெண்சங்கொடுகறங்க மிலைந்தபூங்குழல்வனிதையர்மெய்விளக்கெடுப்பக் கலந்ததாமரைத்தடமெலாங்குவிந்ததுகண்டு மலர்ந்ததாமரைவாவிபோன்றதுநகர்வட்டம். |
(இ -ள்.) (மாலைப்பொழுதில்), மங்கலம்முழவு - மங்கலகரமான பேரிகைகள், வெள் சங்கொடு - வெண்ணிறமான மங்கலச்சங்குகளுடனே, கலந்து - கூடி, கறங்க - ஒலிக்கவும், மிலைந்த பூ குழல் வனிதையர் - சூடின மலர்களையுடைய கூந்தலையுடைய மகளிர், மெய் விளக்கு எடுப்ப - உண்மையான தீபங்களை யேந்தவும், நகர் வட்டம் - |