சிங்கந்தாங்கினதாகச் சித்திரித்துச் செய்யப்பட்ட பெரியபீடத்திலே, அழகுடன் இருந்த - பொலிவோடு எழுந்தருளியிருந்த, புரவலன் தனை - காத்தற்றொழிலில்வல்லவனான கண்ணபிரானை, புண்ணியம் விதுரனும் - நல்வினைகளையுடையவிதுரராசனும், போற்றி - வணங்கி, (எ - று.) - 'என்றான்' என அடுத்தகவியோடு தொடரும்.
புங்கவம் என்பதற்கு ஆண்பசு [எருது] என்று பொருள்; காளை, சிங்கம்,யானை, புலி முதலிய சொற்கள் - உயர்திணையில் வரும்பொழுது சிறப்புப்பொருளைக் குறிப்பன வாகுதலால், தலைவனென்கிற பொருளில் புங்கவனென்றது. உரகம் - (காலில்லாமையால்) மார்பினால் (நகர்ந்து) செல்வது; உரம் - மார்பு. அகல் முதலியவற்றில் எரியும் தீச்சுவாலை ஆதிசேஷனுடைய சிரசிலுள்ள மாணிக்கங்களை யொத்திருக்கு மென்க; உவமையணி.மணிமுடி என்பதை - முடிமணி என மாறுதல் பொருந்தும். 'ஆயிரமாயிரரேந்த' என்றும் பாடம். பரமபாகவதனாதலாலும், கண்ணபிரான் தன்வீட்டுக்கு எழுந்தருளும் பாக்கியமுடைமையாலும், 'புண்ணிய விதுரன்' என்றார். (150) 91. | பொங்கராவணைபொலிவறப்போந்தபின்பொதுவர் தங்கள்பாடியில்வளர்ந்துமாமருதிடைத்தவழ்ந்து கங்கைமாநதிகால்வழிகருணையங்கடலே யிங்குநீதனிநடந்தவாறுரைத்தருளென்றான். |
(இ -ள்.) (பாற்கடலிலே), - பொங்கு - சீறுந்தன்மையுள்ள, அரா - ஆதிசேஷனாகிய, அணை - திருப்பள்ளிமெத்தை, பொலிவு அற - (நீ இவ்வுலகத்தில் எழுந்தருளிவிட்டமையால்) விளக்கத்தை யொழியும்படி, போந்தபின் - (அங்குநின்று இங்குத்) திருவவதரித்த பின்பு, பொதுவர் தங்கள் பாடியில்வளர்ந்து - இடையர்களது சேரியான கோகுலத்திலே வளர்ந்தருளி, மாமருதிடை தவழ்ந்து - பெரிய இரட்டை மருதமரத்தின் நடுவிலே தவழ்ந்துசென்றவனாய், கங்கை மாநதி கால் வழி - சிறந்த கங்காநதி திருவடியினின்றுபெருகப்பெற்ற, கருணை அம் கடலே - அழகிய கிருபா சமுத்திரமே! நீஇங்கு தனி நடந்த ஆறு உரைத்தருள் - நீ இவ்விடத்தில் [இப்பொழுது]தனியே எழுந்தருளின காரணத்தைக் கூறியருள்வாய்,' என்றான் - என்றுகூறினான், (விதுரன்); (எ - று.)
"பாற்கடலில் தங்குகின்ற திருமாலாகிய இந்நாராயணமூர்த்தி, ஆதிசேஷனாகிய பாயலைவிட்டு மதுரைக்கு வந்தானன்றோ!" என்று கூறியுள்ளபடி பாற்கடலிற் பாம்பணையிற் பள்ளிகொள்ளும் பரமனே திருவவதரித்ததனால் 'பொங்கராவணை பொலிவறப்போந்தபின்' என்றார்: இவ்வாறு கூறுவது, கடவுளின் அம்சமுழுவதும் அப்பாற்கடலி லில்லாமையா லென்க. முதல்மூன்று அடிகள் - விதுரன் கண்ணபிரானைப் போற்றியபடி. போந்த - இதில் பகுதியாகிய போ என்பதைப் புகு என்பதன் மரூஉ என்பர். பொதுவர் தங்கள் பாடி - திருவாய்ப்பாடி. திருமால் உலகமளந்த காலத்தில் மேலே சத்தியலோகத்திற்சென்ற அப்பிரா |