பக்கம் எண் :

168பாரதம்உத்தியோக பருவம்

95.-கண்ணன் 'அரசுகொடாமைஉலகவியல்பே' என்றல்.

விரைந்துபாய்பரிமன்னவரிதம்படமெலிவுற்
றிரந்துவேண்டினுங்கிளைஞருக்கொருபொருளீயார்
பரந்தபோரினிலெதிர்த்தவர்படப்படப்பகழி
துரந்தபோதவர்க்குதவுவர்சொன்னவையெல்லாம்.

     (இ -ள்.) விரைந்து பாய் பரி மன்னவர் - துரிதப்பட்டுப் பாய்ந்து
செல்லுகிற குதிரைகளையுடைய அரசர்கள்,- மெலிவுஉற்று இதம்பட இரந்து
வேண்டினும் - (உறவினர்) தளர்ச்சியடைந்து இனிமைபொருந்த (த் தம்மை)
யாசித்துப் பிரார்த்தித்துக்கேட்டாலும், கிளைஞருக்கு - அவ்வுறவினர்க்கு, ஒரு
பொருள் ஈயார் - சிறிது பொருளையுங் கொடுக்கமாட்டார்கள்; அவர் -
அவ்வுறவினர்களே, எதிர்த்து - (தம்மை) எதிரிட்டு, பரந்த போரினில் - மிக்க
யுத்தத்திலே, பட பட - (தம்மீது) மேன்மேற் படும்படி, பகழி - அம்புகளை,
துரந்தபோது - பிரயோகித்தபொழுது, அவர்க்கு - அவர்களுக்கு, சொன்னவை
எல்லாம் - (அவர்கள்) சொன்ன பொருள்களை யெல்லாம், உதவுவர் -
கொடுத்திடுவார்கள்; (எ - று.) - இதுவும், அடுத்த கவியும் - ஒரு தொடர்.

     இதுஉலகத்திற் பெரும்பான்மையான இயற்கையை மன்னவர் மேல்
ஏற்றிக்கூறியது.  உறவினர்கள் இரந்துகேட்டால் கொடுப்பதில்லை; அவர்கள்
தங்கட்கு அம்புகளால் இரணங்கொடுத்தால் கேட்டவை கொடுப்பார்கள் என்ற
இக்கருத்தில் மாற்றுநிலையணிகாண்க.  "பெற்றார் பிறந்தார் பெருநாட்டார்
பேருலகில், உற்றா ருகந்தாரென வேண்டார் - மற்றோர், இரணங்
கொடுத்தாலிடுவ ரிடாரே, சரணங் கொடுத்தாலுந் தாம்" என்ற செய்யுளும்
இக்கருத்துக் கொண்டதே.  படப்பட - அடுக்கு.  இடைவிடாமைப் பொருளது.
எதிர்த்தவர் படப்பட - எதிர்த்தவர்கள் மிகுதியாக அழியும்படி யென்றுமாம்.
இனி, எதிர்த்தவர் துரந்தபோது என இயைத்து உரைத்தலுமாம்.     (155)

96.-கண்ணபிரான்கண்வளர்தல்.

என்றுபாரினிலியற்கையும்விதுரனுக்கியம்பி
வென்றுபோர்கெழுநேமியான்விடைகொடுத்தருளிக்
குன்றுபோற்புயக்காவலர்கொடுந்துடிகறங்க
மன்றனாண்மலர்ப்பாயலின்மீதுகண்வளர்ந்தான்.

     (இ -ள்.) என்று பாரினில் இயற்கையும் விதுரனுக்கு இயம்பி என்று
இவ்வாறு உலகத்திலுள்ள இயல்பையும் விதுரனுக்குக் கூறி,- போர் வென்று
கெழு நேமியான் - வெற்றிகொண்டு விளங்குகிற சக்கராயுதத்தை யுடையவனான
கண்ணபிரான்,- விடை கொடுத்து அருளி - (அவ்விதுரனுக்குச்) செலவு
கொடுத்தனுப்பி விட்டு,- குன்று போல் புயம் காவலர் கொடுந்துடி கறங்க -
மலைகள் போன்ற தோள்களையுடைய காவலாளர்கள் கொடிய (ஒலியையுடைய)
துடியென்னும் வாத்தியத்தை ஒலிக்க, மன்றல் நாள் மலர் பாயலின்