பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 173

     சோதி- க்ஷத்திரிய தேஜசு; "உறங்குமாயினு மன்னவன் தன்னொளி,
கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்" எனக் கூறியபடி, தாம்
உறங்குகையிலும் உலகத்தைக் காக்கின்ற அரசரது தெய்வத்தன்மையோடு
கூடிய ஒளி யென்க;  இனி, புகழ் என்றுங் கொள்ளலாம்.  வேதம் -
பிறநூல்கள் போல ஒருவராற் செய்யப்படாமல் கடவுளால்
வெளியிடப்படுதல்மாத்திரமாய்க் கடவுளைப்போலவே நித்தியமாய் என்றும்
ஒருபடிப்பட இருத்தலால் 'பழையசுருதி' எனப்பட்டது.  உயிரினும் வியப்புற -
ஒவ்வொருபிராணிக்கும் தன்தன் உயிரினிடத்தில் எவ்வளவு அன்பு
இருக்குமோஅதனினும் அதிகமாகத் துரியோதனனுக்கும் இவ்வரசர்களுக்கும்
ஒருவர்க்கொருவர் அன்பு உள்ள தென்க.ஆறுவகையைந்துபத்
தொடறுபத்தொராயிரவர் - ஐந்து பத்து - ஐந்தாகிய பத்துஎன ஐம்பது;
ஆறுவகை யைந்து பத்து - ஆறினாற் பெருக்கப்பட்ட ஐம்பது
என முந்நூறு.  முந்நூறாயிரவரும், அறுபத்தொராயிரவரும் எனத்
தனித்தனி -இயைக்கவே, மூன்று நூறாயிரத்து அறுபத்தொரு ஆயிர
மென்னுந் தொகையையுடையராயிற்று.  இனி, நீதியாறு வகை - அறுவகை
முறைமைகளையுடைய,ஐந்துபத்தொடு அறுபத்தொராயிரவர் - ஐம்பது
ஆயிரத்தோடு அறுபத்தொருஆயிரங் கூடிய லட்சத்துப் பதினோராயிரம்
பேர் என்று உரைப்பாரு முளர்.மூன்றாமடியின் கருத்து - மிகப்பலரென்பது.
ஆறுவகை நீதி - ஓதல்,வேட்டல், ஈதல், உலகோம்பல், படைபயிற்றல்,
பொருதல் என்னும்அரசரறுதொழி லென்றேனும்; அறநிலையறம்,
மறநிலையறம்;அறநிலைப்பொருள், மறநிலைப் பொருள்; அறநிலையின்பம்,
மறநிலையின்பம்என்னும் அரசிய லாறென்றேனும்; அமைச்சு, நாடு, அரண்,
பொருள், படை,நட்பு என்னும் ஆறு அங்கமென்றேனும் கொள்க. 
திறலுக்குத் தீது - தோல்வி. அநேகர் - ஒன்றல்லாதவர்; எனவே, பலர்; ந +
ஏக எனப் பிரிந்து புணரும். அக்குரோணி - அகௌஹிணி என்னும்
வடசொல்லின் சிதைவு; அது - தேர்இருபத்தோராயிரத்தெண்ணூற்றெழுபது,
யானை - இருபத்தோராயிரத்தெண்ணூற்றெழுபது, குதிரை -
அறுபத்தையாயிரத் தறுநூற்றுப்பத்து, காலாள் -லக்ஷத்தொன்பதினாயிரத்து
முந்நூற்றைம்பது; ஆக இரண்டுலக்ஷத்துப்பதினெண்ணாயிரத் தெழுநூறு
கொண்டது.

    இதுமுதல் நாற்பத்தொருகவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள்
விளங்காய்ச்சீர்களும்,ஏழாவது விளச்சீருமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எழுசீர்ஆசிரியவிருத்தங்கள்.                                  (160)

101.தொக்கவெண்கவரியாலவட்டநிரைசொட்டை வாள்
                             பரிசைதுகிலுடன்,
கைக்களாசியிவைகொண்டுலாவிவரு கன்னி
                        மங்கையர்களனைவரு,
மிக்கவேதியர்கள் வல்லபல்கலைவிதத்திலுள்ளவர்கள்
                                   யாவருந்,
தக்கதம்பியரும் வந்துசூழவுயர்தரணிமேனிருபர் தம்பிரான்.

     (இ -ள்.) தொக்க - (கற்றையாக) அடர்ந்துள்ள, வெள் கவரி -
வெண்ணிறமான சாமரங்களும், ஆலவட்டம் நிரை - ஆலவட்டங்