பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 181

                                       செயாத்,
தூதனாகிவருதன்மைசொல்லுகென மன்னர் மன்னனிது
                                  சொன்னபின்,
வேதநாறுமல ருந்திவண்டுளப விரைசெய் தாரவனு
                                முரைசெய்வான்.

     (இ -ள்.) சீதம் - குளிர்ச்சியான, நாள் - புதிய, மலர் - தாமரைப்பூவில்
வாழ்கின்ற, மடந்தை - சிறந்தமகளான இலக்குமிக்கு, கேள்வன் - கணவனான
கண்ணபிரான், இவை - இவ்வார்த்தைகளை, தெரிய செப்பவும் - விளக்கமாகச்
சொன்னவளவிலே,- மன்னர் மன்னன் - துரியோதனன், ஒப்புஇலா நாத
நாயகன் முகத்தில் வைத்த இரு நயனன் ஆகி - (தனக்கு) உவமை பெறாத
தலைமைத்தேவர்களுக்குந் தலைவனாகிய அக்கண்ணனது முகத்திற்செலுத்தின
இரண்டுகண்களை யுமுடையவனாய், மிகநகை செயா - (இகழ்ச்சிதோன்ற)
மிகுதியாகச் சிரித்தல்செய்து, தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என - 'நீ
தூதனாய்வந்த தன்மையைச் சொல்வாயாக' என்று, இது சொன்ன பின் -
இவ்வார்த்தையைச் சொன்னபின்பு, வேதம் நாறும் மலர் உந்தி வள் துளபம்
விரைசெய் தாரவனும் - வேதங்கள் பரிமளிக்கிற திருநாபித்தாமரை மலரையும்
அழகிய திருத்துழாயினாலாகிய வாசனையைச் செய்கின்ற மாலையையும்
உடைய கண்ணபிரான், உரைசெய்வான் - சொல்லுபவனானான்; (எ - று.) -
அதனை, மேலிரண்டு கவிகளிற் காண்க.

    திருமாலின் உந்திக்கமல மலரில் எப்பொழுதும் பிரமன் வேதத்தை
ஓதிக்கொண்டிருத்தலால், 'வேதநாறு மலருந்தி' என்றார்.  வேதம் நாறும் -
வேதம் ஒலிக்கும்.  ஒரு புலன் மற்றொரு புலனாக உபசரிக்கப்பட்டது:  இனி
'வேதனாறும் என்ற பாடத்துக்கு, வேதன் - பிரமன், நாறும் - தோன்றுமென்க.
நாறு என்னும் பகுதி இவ்விரு பொருளு முடையதாதலை, நாற்றம், நாற்று
என்றசொற்களிற் காண்க.  மடந்தை - இங்கே பருவப்பெயராகாமல்
பெண்ணென்றமாத்திரமாய் நின்றது; அப்பருவத்திற்கு வயதெல்லை -
பதினான்கு முதல்பத்தொன்பது அளவுமாம்.  கேண்மையையுடையவன்,
கேள்வன்; கேண்மை -நண்பும், உறவும், அன்பும்.  நாதநாயகன் - நாதர்
நாயகன் எனப்பிரித்துப்புணர்க்க; "சிலவிகாரமா முயர்திணை". வேதம் என்ற
வடசொல்லுக்கு -(நன்மை தீமைகளைத்) தெரிவிப்பதென்று பொருள்;
அறிவித்தலென்னும்பொருளுள்ள 'வித்' என்ற வினையடியினின்று
பிறந்தது.                                                 (170)

111.-இதுவும், அடுத்தகவியும்- பாண்டவர்க்கு
நாடுகொடுக்கும்படி கண்ணபிரான் துரியோதனனுக்குக்
கூறுதல்.

சூதினாலரசிழந்துநின்றுணைவர் சொன்னசொல்லும்வழுவாதுபோய்
ஏதிலார்களெனநொந்து தண்ணிழலிலாதகானினிடையெய்தியுந்
தீதிலாவகை குறித்தநாள்பல கழித்துவந்தனர் செகத்தினிற்
கோதிலாதகுருகுலமகீபவவருரிமைநண்பொடுகொடுத்தியே.