பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 183

கொள்ளலாம்.  வல்லவாறு - நீதிக்கு உரியபடி; அல்லது, உனக்கு
விருப்பமானபடியென்றவாறு.  நண்பு கொண்டு என்பதை, வாழ்தியென்ப
தனோடுங் கூட்டலாம்.  உரிய - அரசுக்கு உரிய சுதந்திரமுள்ள எனலுமாம்.
முன் வாக்கியத்தில் அறமும் புகழும் ஆண்மையுமாம் என்பதும், பின்
வாக்கியத்தில் - புகழார் என்பதும் எதிர்மறைவகையால் தாமே ஏற்படும்.                                           (172)

113.-இதுவும், அடுத்தகவியும்- துரியோதனன் வார்த்தை:
'பாண்டவர்க்குப் பாகங்கொடேன்' என்று கூறுதல்.

என்றுகேசவனியம்பவங்கெதிரிராசராசனுமியம்புவான்
அன்றுசூதுபொருதுரிமையாவையுமிழந்துபோயினர்களைவரும்
இன்றுநீவிரகின்மீளவுங்கவரவெண்ணினானவரிலெளியனோ
சென்றுகானிலவரின்னமுந்திரிவதுறுதியென்றுநனிசீறியே.

     (இ -ள்.) என்று-, கேசவன் - கண்ணன், இயம்ப - சொல்ல, அங்கு
எதிர் - அவ்வார்த்தைக்கு எதிராக, இராசராசனும் - துரியோதனனும்,
இயம்புவான் - சொல்லுபவனாய்,- 'ஐவரும் - பஞ்சபாண்டவர்கள், அன்று -
அக்காலத்தில், சூதுபொருது - சூதாட்டமாடி, (அதில் தோற்று),
உரிமையாவையும் இழந்துபோயினர்கள் - (தங்களுக்கு) உரிய
பொருள்களையெல்லாம் கைவிட்டுச் சென்றார்கள்: இன்று - இப்பொழுது, நீ -,
விரகின் - தந்திரமாக, மீளவும் - மறுபடி, கவர - (அப்பொருள்களை
என்னிடத்தினின்று) பறிக்க, எண்ணின் - நினைத்தால், நான் அவரில்
எளியனோ - நான் அவர்களைக் காட்டிலும் (வலிமை முதலியவற்றிற்)
குறைந்தவனோ? அவர் - அப்பாண்டவர், இன்னமும் - இனிமேலும், கானில்
சென்று - காட்டிற்போய், திரிவது -  அலைய வேண்டுவதே, உறுதி -
(அவர்களுக்கு) நன்மை தருவதாம்', என்று - என்று சொல்லி, நனி சீறி -
மிகக்கோபித்து,- (எ - று.) - 'கழற' என மேல் 115 - ஆங் கவியோடு
குளகமாகத் தொடரும்.

     அங்கு- அப்பொழுது என்றும், அவ்விடத்தில் என்றும், அவரில்
எளியனோ - அவர்கள்போல எளிதிற் கவர்ந்துகொள்ளத் தக்கவனோ?
என்றும் உரைப்பாரும், நனி சீறி என்று இயம்புவான் என இயைத்து
முடிப்பாரும் உளர்.  இரண்டாம் அடியில் நன்று எனப் பிரித்தல் மோனைத்
தொடைக்குப் பொருந்தாது.                                   (173)

114.நீவெறுக்கிலெ னிருந்த மன்னவர் திகைக்கிலென் பல
                             நினைக்கிலென்,
போய்நகைக்கி லெனுரைத்தவுண்மைமொழிபொய்த்த
                       தென்றமரர்புகலிலென்,
வேய்மலர்த் தொடையலைவரென்னுடன்மிகைத்துவெஞ்சமர்
                             விளைக்கிலென்,
ஈயிருக்குமிடமெனினு மிப்புவியில்யானவர்க்கரசினிக்
                                   கொடேன்.

     (இ -ள்.) நீ வெறுக்கில் என் - நீ (என்னை) வெறுத்தாலென்ன? இருந்த
மன்னவர் திகைக்கில் என் - இங்கிருந்த அரசர்கள் (இது என்னவென்று)
பிரமித்தாலென்ன? பல நினைக்கில் என் - (நீயும்