களாகவுள்ளபூமி முழுவதையும் (தம்மதாகப்) பெற்ற, குருகுலத்தவர் - குருவம்சத்திற் பிறந்த அரசரது, இயற்கை - சுபாவம், நன்று - மிக நன்றாகவுள்ளது! என - என்று, மொழிந்தனன் - கூறினான்; (யாவனெனில்), கரிய கோவலன் - கருநிறமுடைய கண்ணபிரான்; நன்று- சிறிதும் நன்றன்று என்றபடி; பிறகுறிப்பு; எதிர்மறையிலக்கணை. திசைக்களிறு - ஐராவதம், புண்டரீகம், வாமநம், குமுதம், அஞ்சநம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் எனஎட்டு. அவை - கிழக்குமுதலிய திக்குக்களில் முறையே கீழிருந்து பூமியைத் தாங்குவன; இவற்றின் பெண் யானைகள் - அப்பிரமு, கபிலை, பிங்கலை, அநுபமை, தாமிரவர்ணி, சுப்ரதந்தீ,அங்கனை, அஞ்சநாவதி எனப்படும். (178) 119.-துரியோதனன்கோபத்துடன் மறுத்துக் கூறுதல். பேரராவணைதுறந்தமாயனிவைபேசவன்பினொடுபின்னையுஞ் சீரராவினை யுயர்த்தகோவும்விழிதீயெனும்படி செயிர்த்துளே போரராநிருபன்மணிநெடுஞ்சுடிகையாயிரங்கொடுபொறுத்தபார் வீரரானவரதல்லவோவுரிமைவேண்டுமோ வெனவிளம்பினான். |
(இ -ள்.) பேர் - பெரிய, அரா - ஆதிசேஷனாகிய, அணை - சயனத்தை; துறந்த - விட்டு இங்கு வந்து அவதரித்த, மாயன் - கண்ணன், இவைபேச - இவ்வார்த்தைகளைச் சொல்ல,- சீர் அராவினை உயர்த்த கோவும்- சிறந்த பாம்புக்கொடியை உயர எடுத்த துரியோதன ராசனும், வன்பினொடு -கொடுமையுடனே, விழி தீ எனும்படி உளே செயிர்த்து - கண்கள்நெருப்பென்னும்படி மிகச்சிவக்குமாறு மனத்திலே கோபித்து, 'போர் அராநிருபன் - போர் செய்யவல்ல பாம்புகளுக்குத் தலைவனாகிய ஆதிசேஷன்,மணி நெடு ஆயிரம் சுடிகை கொடு - மாணிக்கத்தையுடைய நீண்டஆயிரந்தலைகளால், பொறுத்த - சுமக்கப்பெற்ற, பார் - பூமி, வீரர் ஆனவரதுஅல்லவோ - வீரர்களுடைய பொருளன்றோ? உரிமை வேண்டுமோ -(அதனை அடைவதற்குப்) பாத்தியதை தகுதியோ?' என - என்று,பின்னையும் விளம்பினான் - மறுபடியும் கூறினான்; (எ - று.)
நீசொல்லுகிறபடி பாண்டவர்கள் உரியவராயினும், நாங்கள் வீரர்களாதலால் நாங்களே ஆளத்தக்கவ ரென்பதாம். பேரரா - பாம்புகளுட் பெரிய பாம்பு; தலைமை நாகம். வன்பினொடு பேச என்றும் இயைக்கலாம். அன்பினொடு எனப்பிரித்து, பாண்டவர் பக்கல் அன்புடனே சொல்ல என்றுமாம். கண்கள் மிகச்சிவத்தல் - பெருங்கோபக்குறி. மனிதரைக் காப்பவனென்னும் பொருளை யுணர்த்தும் நிருபனென்ற பெயர் - இங்கே காரணங்கருதாமல், அரசனென்ற மாத்திரமாய் நின்றது. சுடிகை - உச்சிக் கொண்டை. 120.-கண்ணன் இறுதியாகத்துரியோதனனைப் போர் வேண்டுதல். பொய்வளர்ந்த மொழிமன்னன்மற்றிவை புகன்ற பின்பு புயவலியினால் ஐவர்தங்களரசுங்கொடாமலடலாண்மைகொண்டெதிரடர்த்தியேன் |
|