மில்லாதஎனது பிறப்பின் பெருமையையும்,- உணராமலோ-, சபையில்-, இந்த வாசகம் இயம்பினாய்-(நீ) இவ்வார்த்தைகளைச் சொன்னாய்;(எ- று.) மறவாமலும் அறிந்தும் இருப்பாயாயின் இங்ஙனங் கூறாயென்பதாம். கோவியரென்ற சொல்லில் - கோபஸ்திரீக ளென்ற பொருள் மாத்திரமேயன்றி, கோபமுடையவ ரென்ற பொருளுந் தோன்றுமாறு அறிக; "மாறுகொண்டேயொருகோபிபற்றி, யடிக்கும் பொழுதில்" என்றார் திருவரங்கத்துமாலையிலும். (181) 122. | ஏவிலங்குசிலையைவர்வந்தணுகின்யானயர்ந்தெளி திருப்பனோ, கோவிலங்குபொரவஞ்சுமோகரட குஞ்சரங்கள்பகைகொண்ட கான், மேவிலங்குமுன்மலைத்தல்கையறைய வேண்டுமென்றது நின் மேன்மையோ, நாவிலங்குமெனவெண்ணியோ மிகவுநன்றுநன்றரசர் ஞாயமே. |
(இ -ள்.) ஏ - அம்புகள், இலங்கு - விளங்கப்பெற்ற, சிலை - வில்லையுடைய, ஐவர் - பஞ்சபாண்டவர், வந்து அணுகின் - (போருக்கு) வந்துநெருங்கினால், யான் அயர்ந்து எளிது இருப்பனோ - நான் சோர்வடைந்துஎளிமையாக இருந்திடுவேனோ? கரடகுஞ்சரங்கள் பகை கொண்ட கால் -மதயானைகள் விரோதித்து எதிர்த்தலைச் செய்த காலத்து, கோவிலங்கு - இராசமிருகமாகிய சிங்கம், பொர அஞ்சுமோ - (அவற்றுடன்) போர்செய்தற்குப்பயப்படுமோ? 'அங்கு மலைத்தல் மேவில் - அவ்விடத்துப் போர்செய்வதைஉடன்பட்டால், முன் கை அறையவேண்டும் - முன்னே கையடித்துத்தரவேண்டும்', என்றது- என்று (நீ) கூறினது, நின் மேன்மையோ - உனதுசெருக்கினாலோ? நா விலங்கும் என எண்ணியோ - (எனது) சொல் தவறுமென்று கருதியோ? அரசர் ஞாயம் மிகவும் நன்று நன்று - அரசர்களது நீதிமிக அழகிது! அழகிது!! (எ - று.) அரசனாகிய என்னை அரசனாகிய நீ இங்ஙனம் மதித்தது சிறிதுந் தகாதென்றவாறு. மிருகேந்திரனான சிங்கமொன்று மதயானைகள் பலவற்றிற்குப்பயப்படாமல் அவற்றை எளிதில் அழித்தல்போல, ராஜராஜனான நான்செருக்குக்கொண்ட பாண்டவரைவர்க்கு அஞ்சாமல் அவர்களை அழித்திடுவேனென்பதாம். முன்னிரண்டடி எடுத்துக்காட்டுவமை: முதலடி -உபமேயமும், இரண்டாமடி - உபமானமுமாம். ஏ + இலங்கு = ஏவிலங்கு;தனிமொழி யாகிய பெயர்ச்சொல் ஏகாரத்தின்முன் வகரவுடம்படுமெய்தோன்றிற்று. குஞ்சரம் - காட்டுப்புதர்களிற் சஞ்சரிப்பதென்று பொருள்;குஞ்சம் - புதர். நா - சொல்லுக்குக் கருவியாகுபெயர். நன்று நன்று -அடுக்கு, இகழ்ச்சி பற்றினது; மிகவும் நன்று நன்று - எதிர்மறையிலக்கணை. ஞாயம் - ந்யாயமென்பதன் திரிபு. (182) 123. | அளிவருங் குழல்பிடித்து மன்னவையிலைவருக்குமுரி யாளைநான், எளிவருந்துகிலுரிந்தபோ தருகிருந்துகண்டவர்களல்ல |
|