அல்ல -(ஒருவனுக்கு உரியவரல்லாமல் பொருள் கொடுப்பவரெல் லோர்க்கும்)பொதுப்பட்ட விலைமகளிர்க்கு உலகத்தில் இவ் வியல்புகள் புதிதானவையல்ல[தொன்று தொட்டுள்ளவை]; (ஆதலால்), அவர் புதல்வன் ஆம் விதுரன் -அப்படிப்பட்டவர்களுள் ஒருதாசியினது புத்திரனாகிய விதுரன், இன்று -இப்பொழுது, அவனொடு - (புதிதாய் வந்த) கண்ணனுடனே, உறவு கொண்டது- (பழையவனான என்னிடம் அன்பைவிட்டு) நண்பு பாராட்டினதாகிய, ஓர்வியப்பை - ஒரு அதிசயத்தை, என் சொலி வெறுப்பதே - என்னசொற்சொல்லி வெறுக்கவேண்டுவது? (எ - று.)- இது, அல்ல - ஒருமைப்பன்மை மயக்கம். வெறுக்கக் காரணமில்லை; தாயின் குணம் மகனைத் தொடர்ந்தது எனப் பழித்தான். பாண்டவர்க்கு இராச்சியம் வந்தால் தனக்கு அதிக செல்வாக்கு இருக்குமென்று இங்ஙனஞ் செய்தான்போலுமெனக் கருதினான். (188) 129.- இதுமுதல் மூன்றுகவிகள்- குளகம்: விதுரன் தக்க மறுமொழி கூறி வில்லை முறித்துப் போகடுதல். இன்னவாறிவனுரைத்த போதவனெழுந்திருந்துவசையென்னைநீ, சொன்னவாய்குருதிசோரவாள்கொடு துளைத்துநின் முடிதுணிப்பன் யான், மன்னவாகுருகுலத்திலேயொருவன் மைந்தனாருயிரை வௌவினான், என்னவானவர் நகைப்பரே யெனையுரைத்த நாவுடனிருத்தியோ. |
(இ -.ள்.), இன்ன ஆறு - இந்தப்படி, இவன் - துரியோதனன், உரைத்தபோது - சொன்னபொழுது, அவன் - விதுரன், எழுந்திருந்து- வருத்தத்தோடு)எழுந்துநின்று, நீ என்னை வசைசொன்னவாய் - நீ என்னைப் பழிமொழிகூறின வாயில், குருதி சோர - இரத்தம் பெருகும்படி, யான் -, வாள்கொடுதுளைத்து - (அதனை என்) வாளாயுதத்தால் துளை செய்து, நின் முடிதுணிப்பன் - உனது தலையையும் வெட்டிடவல்லேன்; மன்னவா - அரசனே! குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர் உயிரை வௌவினான் என்ன -(சிறந்த) குரு வமிசத்திலே ஒருத்தன் புதல்வனது அருமையான உயிரைக்கவர்ந்தானென்று, வானவர் நகைப்பரே- (இவ்வுலகத்தாரேயன்றித்) தேவர்கள்(பரிகசித்துச்) சிரிப்பார்களே; [அதற்கே ஆலோசிக்கிறே னென்ற படி]; எனைஉரைத்த நாவுடன் இருத்தியோ - (இல்லாவிடின்) என்னை (நிந்தித்து)க் கூறினநாக்கோடு (இன்னும் நீ) வாழ்ந்திருப்பாயோ? (எ - று.)- 'எழுந்திருந்து' என்பதுமேல்131 - ஆங் கவியோடு இயையும்.
'மன்னவாழ்குருகுலம்' என்ற பாடத்துக்கு-(தொன்றுதொட்டு) நிலைபெற வாழுங் குருமர பென்க. உயிரைவௌவுதல் - உடம்பினின்று ஒழித்தல். இவ்வுலகத்தில் பலர் துரியோதனனோடொப்ப நீதியறியாதவராதலால், அவரையொழித்து, வானவரையே கூறினார். மன்னவா என்றது அரசச் செல்வச்செருக்கினாலன்றோ நீ இவ்வாறு குளறினதென உணர்த்தற்கு. (189) |