பக்கம் எண் :

212பாரதம்உத்தியோக பருவம்

எழுத்துப்பேறுஎன்றும், து-சாரியை, உகரம்கெட்ட தென்றுங் கூறுவர். (209)

150.- கண்ணன் குந்திக்குநடந்த வரலாறு கூறுதல்.

நின்பெரும்புதல்வர்சொல்லநெடும்புனனாடுவேண்டி
வன்புடையரசர்கோமான்மனக்கருத்தறியவந்தேன்
றென்புலவேந்தன்வெஃகச்செருத்தொழில்புரிவனென்றான்
என்பலசொல்லினாளையெதிர்க்கவேயியைந்ததென்றான்.

     இ -ள்.) (அதுகேட்டுக் கண்ணன் குந்தியை நோக்கி), 'நின்
பெரும்புதல்வர் சொல்ல-உனது சிறந்த புத்திரர்கள் சொல்லியனுப்ப,
நெடும்புனல் நாடு வேண்டி - மிக்க நீர்வளமுள்ள குருநாட்டின் பாகத்தைப்
பெற விரும்பி, வன்பு உடை அரசர் கோமான் மனம் கருத்து அறிய -
வலிமையுடைய ராஜராஜனான துரியோதனனது உள்ளத்தின் எண்ணத்தை
அறியும் பொருட்டு, வந்தேன் - (யான் இங்கு) வந்தேன்; (அதற்கு அவன்),
தென் புலம் வேந்தன் வெஃக - தெற்குத் திக்குக்குத் தலைவனான யமன்
(உயிர்களை) விரும்பும்படி, செரு தொழில் புரிவன் என்றான் -
போர்த்தொழிலைச் செய்வே னென்று சொன்னான்; பல சொல்லின் என் -
பலவார்த்தைகளைச் சொன்னதனால் என்ன பயன்? [ஒன்றுமில்லை
யென்றபடி]:நாளை எதிர்க்கவே இயைந்தது - இனி விரைவில்
(இருதிறத்தாரும்) எதிர்த்துப்போர்செய்யவே நேர்ந்தது,' என்றான் - என்று
கூறியருளினான்;  (எ - று.)

     வன்பு- சிறிதுங் கருணையில்லாமல் அநீதியிற் செல்லுங் கல் நெஞ்சின்
தன்மையையுங் குறிக்கும். வன்புடை யரசர் - துச்சாதனன் கர்ணன் சகுனி
திரிகர்த்தன் முதலியோராய், அவர்கட்கெல்லாந் தலைவனென்றுமாம்.
அஷ்டதிக்குப் பாலகருள் தெற்குத் திக்குத் தலைவன்; கூற்றுவன். சாமம்
முதலிய முதல்மூன்று உபாயங்களைக் குறித்துப் பலவார்த்தைகளைக் கூறி
ஒன்றும் பயன்படாமற் போனமையும், 'என்பல சொல்லின்'
என்றதிற்பெறப்படும். (210)

151.- அது கேட்டுக் குந்தி வருந்துதல்.

என்றலுங்குந்திசாலவிரங்கினளெதிர்ந்தபோரில்
வென்றிடுவார்கள்யாரோவிதியினாலமர்க்களத்தில்
பொன்றிடுவார்கள்யாரோவென்றுளம்புலர்ந்துநொந்தாள்
அன்றவடன்னைத்தேற்றியாழியானுரைக்கலுற்றான்.

     (இ -ள்.) என்றலும் - என்று (கண்ணன்) அருளிச்செய்த வளவிலே,
குந்தி -, சால இரங்கினள் - மிகவும் இரக்கமுற்றவளாய், 'எதிர்ந்த போரில் -
இனிச் சமீபிக்க இருக்கின்ற யுத்தத்தில், வென்றிடுவார்கள் யாரோ -
சயித்திடுபவர் யாரோ? விதியினால் - ஊழ்வினையால், அமர் களத்தில்
யுத்தகளத்திலே, பொன்றிடுவார்கள் யாரோ - அழிந்திடுபவர்கள் யாரோ?
என்று - என்று சொல்லி, உளம் புலர்ந்து - மனம்வாடி, நொந்தாள் -
வருந்தினாள்; அன்று - அப்பொழுது,