பக்கம் எண் :

218பாரதம்உத்தியோக பருவம்

துரியோதனனுடனே (இக்கர்ணனைச்) சேரச் செய்யாதிருப்பேன்; சென்று உயிர்
ஒழிக்கும் ஆறு செருவினை விளைத்து - (போர்க்களத்திற்) போய்
உயிரைமாய்த்துக் கொள்ளும்படி போரை மூட்டிவிட்டு, பின்னை -
அதன்பின்பு,இன்று - இப்பொழுது, எனக்கு -, உரைத்தாய் - (நீ இந்தச்
செய்தியைக்)கூறினாய்; ஐயா - ஐயனே! என் நினைந்து என் செய்தாய் -
என்ன எண்ணமெண்ணி என்ன காரியஞ் செய்தாய்? (எ - று.) இது
தகுதியன்று என்றபடி.

    தெரியல் - விளங்குதல்; விளங்கும் மாலைக்குத் தொழிலாகுபெயர்.
அவனுடன் நணுக என்றும் பதம் பிரிக்கலாம்.  ஐயா என்று மருகனைக்
கூறினது, அன்புபற்றிவந்த மரபுவழுவமைதி.  ஈற்று ஏகாரம் இரக்கம்.(219)

160.

கான்பட்டகனலிற்பாயுங்கடுங்கணைவிலக்கினேனேல்
வான்பட்டபுரவித்தேரோன்மகன்படுமகவான்மைந்தன்
தான்பட்டுமடியுஞ்சென்றுதடாதினியிருந்தேனாகில்
யான்பட்டகொடுமைநன்றென்றென்பட்டாளிரங்கிவீழ்ந்தாள்.

     (இ -ள்.) கான் - காண்டவவனத்திலே, பட்ட - பற்றின, கனலின் -
அக்கினியினின்றும், பாயும் - (வெளிப்பட்டுச்) செல்லலுற்ற, கடுங்கணை -
கொடிய நாகாஸ்திரத்தை, விலக்கினேன் ஏல் - (மறுபடி அருச்சுனன்மேற்
பிரயோகிக்காதபடி கர்ணனைத்) தடுத்தேனானால், வான்பட்ட புரவி தேரோன்
மகன் படும் - ஆகாயத்திற்செல்லுகின்ற குதிரையைப் பூட்டிய தேரையுடைய
சூரியனது குமாரனான கர்ணன் இறப்பான்; இனி சென்று தடாது இருந்தேன்
ஆகில் - இப்பொழுது போய் (அந்த அஸ்திரத்தை)த்
தடுக்காமலிருந்தேனானால், மகவான் மைந்தன் தான் பட்டு மடியும் -
இந்திரகுமாரனான அருச்சுனன் தான்அந்த அஸ்திரம்பட்டு இறப்பான்;
[இங்ஙனம் இருவகையிலும் எனக்குத் தீதாய்முடிகிறது]; (ஆதலால்), யான்
பட்டகொடுமை - நான் அடைந்த கொடிய நிலைமை, நன்று -
நன்றாயுள்ளது! என்று - என்று சொல்லி, (குந்திதேவி), என்பட்டாள் - என்ன
பாடுபட்டாள்? (எனின்), இரங்கி வீழ்ந்தாள் - புலம்பிக்கொண்டு கீழே
விழுந்திட்டாள்; (எ - று.)

    கான்பட்ட கனலின்பாயும் என்பதற்கு - காட்டுத்தீப்போல உக்கிரமாகப்
பாய்கிற என்றும் உரைக்கலாம்.  என்பட்டாள் என்பது, மிகுந்த
துன்பமடைந்தாள் என்பதை விளக்கும்.  நன்று - தீது என்றபடி : பிறகுறிப்பு.
                                                      (220)

161.-இதுவும், அடுத்தகவியும்- கண்ணன் சிலகூறிக்
குந்தியைத் தேற்றுதல்.

தேக்குந்தியகிலுஞ்சாந்துஞ்சிந்துநீர்நதிசூழ்செல்வக்
கோக்குந்தியரசன்பாவைகுலைந்தழுங்கொடுமைகண்டு
மீக்குந்தியுறிகடோறும்வெண்ணெயுந்தயிருமுண்ட
வாக்குந்திமலரோன்பின்னுமனத்தளர்வகற்றினானே.