பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 223

வீசுகிற ஏழுகடல்களையும், தாவு இயல் உழையும் - தாவிப்பாயுந்
தன்மையையுடைய மான்களையும், காதல் சகோரமும் - (நிலாவில்)
விருப்பத்தையுடைய சகோர பட்சிகளையும், போன்ற - ஒத்தன; (எ - று.) -
மாது, ஓ - ஈற்றசை.

    இச்செய்யுள், நிலாத்தோற்றத்தில் விரகிகளுக்குத் துன்பமும்,
மற்றையோர்க்கு இன்பமும் உண்டாதலைக் கூறியது.  'துணைவரைப்
பிரிந்தோர்' என்ற சொல்லில் நாயகியரைப்பிரிந்த நாயகரும்
அடங்குவராயினும்,பின்வாக்கியத்தில் 'மேவியமகளிர்' என வந்ததை நோக்கி,
தலைவரைப்பிரிந்ததலைவியரென்று உரைக்கப்பட்டது. சகோரம் - நிலவை
உணவாகக்கொள்வதொரு பறவை விசேஷம்; தூ வியல் நிலவு எனப்பிரித்து,
வியல் - பரந்த என்றுமாம்; "வியலென்கிளவி யகலப்பொருட்டே,' என்பர்
தொல்காப்பியனார்; அது - உரிச்சொல்.  உழையென்றது, சந்திரனிடத்துள்ள
மானையாகலாம்.                                         (227)

168.-இது - கவிக்கூற்று.

அரவியலல்குலாருமகிழ்நருமன்புகூர
விரவியவமளியெய்திவீதிமாநகரியெங்கும்
பரவையினிமிர்ந்தவோதையமர்ந்தபின் பரித்தேர்வேந்தன்
இரவிடைச்சூழ்ந்தவண்ணமின்னதென்றியம்புகின்றாம்.

     (இ -ள்.) அரவு இயல் அல்குலாரும் - பாம்பின் படம்போன்ற
அல்குலையுடைய மகளிர்களும், மகிழ்நரும் - கணவர்களும், அன்பு கூர -
அன்பு மிக, விரவிய அமளி எய்தி - பொருந்தினசயனத்தை யடைந்து, வீதி
மாநகரி எங்கும் - நெடுந்தெருக்களையுடைய பெரிய அப்பட்டண
முழுவதிலும்,பரவையின் நிமிர்ந்த ஓதை - கடலொலிபோல மிகுந்துள்ளதாகிய
ஓசைஅமர்ந்த பின் - அடங்கியபின்பு, - இரவு இடை - நடுராத்திரியிலே,
பரிதேர்வேந்தன் - குதிரைகளைப் பூட்டுந் தேரையுடைய துரியோதனராசன்,
சூழ்ந்தவண்ணம் - ஆலோசித்த விதத்தை, இன்னது என்று இயம்புகின்றாம் -
இத்தன்மையதென்று கூறத்தொடங்குகிறோம்; (எ - று.)

    மகிழ்நர் - மகிழ்ச்சியுள்ளவர்; ந் - பெயரிடைநிலை.  எய்தி -
எய்தவெனச் செயவெனெச்சமாத் திரிக்க.  நள்ளிரவில் ஜனங்கள் ஒலி
யடங்குதல், இயல்பு.                                     (228)

169.- துரியோதனன்முதலியோர் இரவிற்செய்த
சதியாலோசனை.

[துரியோதனன் முதலியோர் ஆலோசனைசெய்யச் சபாமண்டபமடைதல்.]

தந்தையும்தம்பிமாருங்கன்னனுஞ்சகுனிதானும்
சிந்தையிற்றெளிந்தகல்விச்செழுமதியமைச்சர்தாமு
முந்தரவுயர்த்தகோமானேவலான்முழுதுமெண்ணி
மந்திரமிருப்பான்வந்தோர்மண்டபங்குறுகினாரே.