துரியோதனனைநோக்கியதென்றாவது கொள்க. இது - பூத்து எரி எனப்பிரிந்து, அமங்கலப் பொருள் தருமாறுங் காண்க. (233) 174. | பழியுடைப்பகைஞரேனுந்தன்பெரும்பதியில்வந்தால் அழிவுறக்கோறல்பாவமாண்மையுமன்றாமென்பார் கழிகடற்சேனைசூழக்கங்குலின்வளைந்திட்டாலும் எழிலுடைக்கொண்டல்வண்ணனகப்படானெவர்க்குமென்றான். |
(இ -ள்.) (இன்னும் அவ்விகர்ணன்), 'பழி உடை பகைஞர் ஏனும் - (தன்னைப்) பழித்தலையுடைய பகைவர்களாயிருப்பினும், தன் பெரு பதியில் வந்தால் - (அவர்கள்) தனது பெரிய ஊருக்கு வந்தால், அழிவு உற கோறல்- (அவர்களை) அழிவையடையும்படி கொல்லுதல், பாவம் - தீவினையாம்; (அது), ஆண்மையும் அன்று ஆம் - ஆண்தன்மைக்கு உரியதும் ஆகாது; என்பார்- என்று (அறிவுடைய பெரியோர்கள்) கூறுவார்கள்; கழி கடல் சேனை சூழ - மிகுந்த கடல் போற் பெரிய சேனைகள் வந்து சுற்றிலும் நிற்க, கங்குலின் வளைந்திட்டாலும், - இராத்திரிகாலத்தில் சென்று சூழ்ந்திட்டாலும், எழில் உடைகொண்டல் வண்ணன் - அழகையுடைய மேகம் போன்ற நிறமுடையவனான கண்ணன், எவர்க்கும் அகப்படான் - எப்படிப்பட்ட வலிமையுடை யோர்க்கும் (கொல்லக்) கிடைக்கமாட்டான்', என்றான் -;(எ-று.) பழிஉடை - எல்லாராலும் பழிக்கப்படுதலையுடைய என்றும் பொருள் கொள்ளலாம். கழிகடல், கழி - மிகுதியுணர்த்தும் உரிச்சொல்; ஆனது பற்றியே,வருமொழிமுதல்வலி இயல்பாயிற்று; [நன் - மெய் - 36.] கீழ்த்திருதராட்டிரன்'மாயன் தன்னைக்கரும்பொழுதகலு முன்னே கொல்வது' எனக் கரியோனைக்காரிருளிலேயே கொல்ல வேண்டுமென்பது படக் கூறியதனை மறுத்து, இவன்'கங்குலின் வளைந்திட்டாலு மெழிலுடைக் கொண்டல் வண்ணனகப்படான்'என்றதனால், கறுத்தவனைக் கரிய இருளிற் கண்டுபிடிப்பது கஷ்டமென்பதுபடக்கூறி, கண்ணனது வெல்லுதற்கரிய மாயை நிலையை வெளியிட்டவாறு.பகைஞர், ஞ் - பெயரிடைநிலை. (234) 175.-இதுவும், அடுத்தகவியும்- துச்சாதனன் வார்த்தை. வெம்புயவலியான்மாதைவிரிதுகிலுரிந்தவீரன் தம்பியைமுனிந்துசீறித்தமையனைநோக்கிச்சொல்வான் வம்பவிழலங்கன்மார்பமந்தணமுரைக்கலுற்றால் இம்பர்மற்றியாதுசொல்லவிளைஞரையழைத்ததென்றான். |
(இ -ள்.) (இங்ஙனம் விகர்ணன் சொல்லக் கேட்டவளவில்),- வெம் புயம்வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன் - கொடிய தோள்களின் வலிமையால் அழகிய திரௌபதியினது பெரிய ஆடையை அவிழ்க்கலுற்ற துச்சாதனன்,- தம்பியை முனிந்து சீறி - தம்பியாகிய அவ்விகர்ணனை மிகக்கோபித்து, தமையனை நோக்கி சொல்வான் - தமையனான துரியோதனனைப்பார்த்துச் சொல்பவனாய், |