'வம்புஅவிழ் அலங்கல் மார்ப - வாசனை வீசுகிற பூமாலையை யணிந்த மார்பையுடையவனே! மந்தணம் உரைக்கல் உற்றால் - இரகசியமான ஆலோசனை சொல்லத் தொடங்கினால், இம்பர் - (அதற்குரிய) இவ்விடத்தில், யாது சொல்ல - எந்த ஆலோசனையைச் சொல்லும்பொருட்டு, இளைஞரை அழைத்தது - சிறியோர்களைக் கூப்பிட்டது', என்றான் - என்று சொன்னான்; (எ - று.) - மற்று - அசை. இப்பாட்டின் முதலடி - இவனது தோள்வலிமை, போர் முதலிய ஆற்றல்தொழில்களுக்கு அமைந்ததன்று; ஒரு பெண்ணைத் துகிலூரியும் இழிதொழிலுக்கே அமைந்ததுபோலும் எனக்கவி இகழ்ந்தவாறு. இங்கே வீரனென்றது, இகழ்ச்சி. விரிதுகில் - எதிர்கால வினைத்தொகையாக, (கண்ணன் திருவருளால்) விரிவதாகுஞ்சேலை யென்றும் பொருள்படும். இதனால், அந்த அற்பச் செய்கையையும் இவன்செய்து முடிக்கமாட்டாத இழி தகைமை தோன்றும். முனிந்து சீறி - ஒருபொருட்பன்மொழி. (235) 176. | அதிரதர்முதலாவுள்ளவவனிபர்வளைந்துநிற்ப எதிர்முகிறவழுங்கோயிலெரியினையெங்குமூட்டி விதுரனுமவனுஞ்சேரவெந்திடமலைவதல்லான் மதிபிறிதில்லையின்னேவல்விரைந்தெழுமினென்றான். |
(இ -ள்.) (இன்னும் அத்துச்சாதனன்), 'அதிரதர் முதல்ஆ உள்ள அவனிபர் எதிர் வளைந்து நிற்ப - அதிரதர் முதலாக இருக்கிற அரசர்கள் (பலர் நம்முடன்) எதிரிலே வளைந்துகொண்டு நிற்க; முகில் தவழும் கோயில் எங்கும் எரியினை மூட்டி - மேகங்கள் தவழப்பெற்ற (மிகவுயர்ந்த விதுரனது) சிறந்த வீட்டிலே எல்லாப் பக்கத்தும் நெருப்பைப்பற்றவைத்து, விதுரனும் அவனும் சேர வெந்திட மலைவது அல்லால் - விதுரனும் அக்கண்ணனும் ஒருசேர வெந்திறக்கும்படி அழிப்பதல்லாமல், பிறிது மதி இல்லை - வேறு ஆலோசனை யில்லை; (ஆதலால்), இன்னே - இப்பொழுதே, வல்விரைந்து - மிகத்துரிதப்பட்டு, எழுமின் - புறப்படுங்கள்,' என்றான் - என்று கூறினான்; (எ- று.)
தேர்வீரர் - அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் என நால்வகைப்படுவர். அதிரதர் - முழுத்தேரரசர்; அவராவார் தாம் ஒரு தேரில்ஏறிநின்று தம் தேர் குதிரை சாரதிகளுக்கு அழிவுவராமற் காத்துப்பலவாயிரந்தேர்வீரரோடு வேறுதுணையில்லாமலே போர் செய்து வெல்லும்வல்லமையுடையார். அவரிற் சிறிதுதாழ்ந்தவர் - மகாரதர்: இவர், பதினோராயிரந் தேர்வீரரோடு வேறுதுணையில்லாமலே போர்செய்து வெல்லும்வல்லமையுடையார். சமரதர் - ஒரு தேர்வீரனோடு தாமும் ஒருவராய்எதிர்க்கவல்லவர். அவ்வாறு எதிர்த்துப் போர்செய்யுமளவில் தமது தேர்முதலியவற்றை இழந்துபோம்படியானவர், அர்த்தரதர்; இவர்கள் இருவர்சேர்ந்தால் ஒரு சமரதனுக்கு ஒப்பாவார். இந்நால்வகையாருள்ளும் அதிரதர்சிறந்தவராதலால், அவர்களையே தலைமையாகக் கூறினது. முகில் |