தியைநோக்கி) இப்பொழுது (சுமக்கலாற்றாது சிதைந்து) இறந்தோமென்று கருதித் துன்பத்தை மிகுதியாக அடையவும், உலகு ஒன்றுபடும்படி நின்று நிமிர்ந்தனன் - எல்லாவுலகங்களிலும் பொருந்தும்படி உயர்ந்து நின்றருளினான்;(எ - று.) - என்றது, விசுவரூபங்கொண்டானென்றதாம்.
அடுக்கு, மிகுதிவிளக்குவது. உயர் அண்டர் - எல்லாப்பிறப்புக்களுள்ளுஞ் சிறந்த தேவருமாம். துஞ்சுதல் - தூங்குதல்; இறத்தலைத் துஞ்சுதலென்பது, மங்கலவழக்கு. கீழ்ப்பாட்டில், 'அடி அதலத்துறமுடி ககனத்துற' என்றதற்கேற்ப, முறைப்படுத்தாது, இப்பாட்டின் முதலிரண்டடிகளை மாறுபட நிறுத்தியது, எதிர்நிரனிறைப்பொருள்கோள். அண்டர் - அண்ட கோளத்தின் மேலிடத்துள்ளவர். வஞ்சநா என்ற வடசொல், ஈறு திரிந்தது. இன்று துஞ்சினம் - விரைவுந் தெளிவும் பற்றிய காலவழுவமைதி; வழா நிலையாயின், இன்று துஞ்சுகின்றனம் என நிற்கும். (252) 193. | மல்லரரக்கர்குலத்தொடுபப்பரர்வாளினர்வேலினர்போர் வில்லினரிப்படிதுற்றநிலத்தறைமேவியவீரரெலாந் தொல்லையிடிக்கயர்வுற்றுயிரிற்றுறுசுடிகையராவெனவே கல்லெனவுட்கினர்தத்தமுடற்பலகால்கொடுதைத்திடவே. |
(இ -ள்.) (அப்பொழுது), -மல்லர் - மற்போர்வீரர்களும், அரக்கர் குலத்தொடு - இராக்கதர் கூட்டமும், பப்பரர் - பப்பரநாட்டு வீரர்களும், வாளினர் - வாள்வீரர்களும், வேலினர் - வேல்வீரர்களும், போர் வில்லினர் -போர் செய்தலில் வல்ல வில் வீரர்களும், (ஆக), இப்படி - இவ்வாறு, துற்ற -நெருங்கியுள்ள, நிலத்து அறைமேவிய வீரர் எலாம் - நிலவறையினுட் பொருந்தியிருந்த வீரர்களெல்லோரும், தத்தம் உடல் பல கால் கொடு உதைத்திட - தங்கள் தங்கள் உடம்பைக் (கண்ணன் தனது) அநேகங் கால்களைக்கொண்டு உதைத்திடுதலால், தொல்லை இடிக்கு அயர்வுற்று உயிர் இற்று உறு சுடிகை அரா என - பழமையான [முதிர்ந்த] பேரிடிக்குச் சோர்வடைந்து உயிரொழிந்து கழிகின்ற உச்சிக்கொண்டையையுடைய பாம்புகள்போல, கல் என உட்கினர் - கல்லென்ற ஒலிபட அஞ்சினார்கள்; (எ- று.)
இடியோசைக்குப்பாம்புகள் அஞ்சியொடுங்கியழியுமென்று நூற் றுணிபு; "விரிநிற நாகம் விடருளதேனும், உருமின்கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்" என்ற நாலடியாரிலுங் காண்க; நிலத்தின் கீழ்ப்பிலத்தில் தங்குதல்பற்றி மல்லர் முதலியோர்க்கு நாகங்களும், இவரையஞ்சுவித்து அழித்தல் பற்றித் திருமால் திருவடிகளுக்கு இடியும் உவமையாதற்கு மிக ஏற்கும். கல்லென என்றது, அப்பொழுது அவர்கள் அச்சத்தால் நடுங்கி வாய்குளறிப் பேரிரைச்சலிட்டதை. பல கால் - விசுவரூபத்திற் கொண்டவை. துற்ற - இறந்தகாலப் பெயரெச்சம்; துறு - பகுதி; இரட்டித்துக்காலங் காட்டிற்று. தொல்லை யிடி - துன்பந்தரும் இடியுமாம். (253) |