கொடுவெந்நோய், கண்டுள நெக்கானஞ் சலையஞ்சேல் களிறென்னா" என(க் காஞ்சிபுராணத்து)ப் பிற சமயத்தார் கூறியவாறு முணர்க. நாரணன் - நாராயணன் என்பதன்திரிபு. சிருஷ்டிப் பொருள்களுக்கெல்லாஞ் சேர்விடமானவனென்று பொருள்; சிருஷ்டிப்பொருள்களைத் தனக்கு இருப்பிடமாகவுடையவனென்றும், பிரளய காலத்து நீரைத் தனக்கு இருப்பிடமாகவுடையவனென்றும் பொருள்படும். நாகம் - சுவர்க்கம். முனியேல் முனியேல் - அடுக்கு, அன்பு பற்றியது. வாரணமே, ஏ - அசை, சிறப்புமாம். (269) 210. | மாதவனேமுனியேலெமையாளுடைவானவனேமுனியேல் யாதவனேமுனியேலிதயத்திலிருப்பவனேமுனியேல் ஆதவனேமுனியேன்மதிவெங்கனலானவனேமுனியேல் நீதவனேமுனியேன்முனியேலெனநின்றுபணிந்தனரே. |
(இ -ள்.) 'மாதவனே - திருமகள்கொழுநனே! முனியேல் - கோபித்தருளாதே; எமை ஆள் உடை வானவனே - எம்மை அடிமை யாகவுள்ள கடவுளே! முனியேல்-; யாதவனே - யதுகுலத்தில் திருவவதரித்தவனே! முனியேல்-; இதயத்தில் இருப்பவனே - (எல்லோருடைய)மனதிலும் எழுந்தருளியிருப்பவனே! முனியேல்-; ஆதவனே - சூரியசொரூபியானவனே! முனியேல்-; மதி வெம் கனல் ஆனவனே - சந்திரன்வெவ்விய அக்கினி இவர்களின் சொரூபமானவனே! முனியேல் -; நீதவனே -நீதிமுறைமை யுடையவனே! முனியேல் முனியேல் -, என - என்று கூறி,நின்று பணிந்தனர் - (முனிவர்கள் எங்கும்) நின்று வணங்கினார்கள்; (எ - று.) கீழ்"மாயிருஞாலம்" என்ற கவியில், தேவர்களும் முனிவர்களும் புகழ்ந்தனரெனக் கூறியதில், தேவர்கள் புகழ்ந்த விதத்தை அடுத்த "ஆரணனேயரனே" என்ற கவியாற் கூறி, முனிவர்கள் புகழ்ந்த விதத்தை அதற்கு அடுத்தஇக்கவியாற் கூறுகிறாராதலின், 'முனிவர்' எனத் தோன்றாஎழுவாய்வருவிக்கப்பட்டது. இனி கீழ்க்கவியில் 'நாகர்' என்பதற்கு - பாதாளலோகவாசிகளென்று உரைத்து, மூவுலகத்தாருள் மேலுலகத்தாருங் கீழுலகத்தாரும்துதித்து வணங்கியமை கீழிரண்டுகவிகளிலும் கூறப்பட்டதெனக்கொண்டு,இக்கவிக்கு நிலவுலகத்தாரென்று எழுவாய் வருவித்தலுமொன்று. அன்பால்நினைவாரது உள்ளக்கமலத்தின்கண் அவர் நினைத்த வடிவோடு கடவுள்விரைந்துசென்று வீற்றிருத்தலின், 'இதயத்திலிருப்பவனே' என்றார். (270) 211. | கங்கைமகன்கதிரோன்மகனம்பிகைகாதன்மகன்றனயர் அங்கவையின்கணிருந்தநராதிபரடையவெழுந்தடைவே செங்கைகுவித்தசிரத்தினராயுணர்வொன்றியசிந்தையராய் எங்கள்பிழைப்பினையின்றுபொறுத்தருளென்றுபணிந்தனரே. |
(இ -ள்.) கங்கை மகன் - கங்காபுத்திரனான வீடுமனும், கதிரோன்மகன் - சூரியபுத்திரனான கர்ணனும், அம்பிகை காதல் மகன் - அம்பிகையினது விருப்பமுள்ள புத்திரனான திருதராட்டிரனும், |