முடைய,கோபாலா - கோபாலனென்னுந் திருநாமமுடையவனே! இன்று எனதுபிறப்பு உணர்ந்தேன் - இப்பொழுது (நீ சொல்ல) என்னுடைய பிறந்தவரலாற்றை யறிந்தேன், என்று - என்ற காரணத்தால், அன்பு உருகி - அன்பாய் மனங்கரைந்து, எம்பியர்பால் - என் தம்பியரான அப்பாண்டவரிடம்,சென்றால் - (இப்போது துரியோதனனை விட்டு நான்) போனால், நீ அறிய-,செகத்தார் - நிலவுலகத்துச் சனங்கள், என்றும் - எப்பொழுதும், என்னை -,சிரியாரோ - (பரிகாசஞ்செய்து) சிரிக்க மாட்டார்களா, [நன்கு சிரிப்பரேஎன்றபடி]; கழை -மூங்கில்; அதனாலாகிய குழலுக்குகக்ருவியாகுபெயரும், அதனிசைக்கு முதலாகுபெயருமாக இருமடியாகுபெயராம். பகல் முழுவதும் முல்லைநிலத்திற் பரவிச்சென்று மேய்ந்த பசுக்களை மாலைப்பொழுதில் ஒன்றுசேர்த்தற்கு இனிதாக வேய்ங்குழலூதுதல் இயல்பு; அக்கீதத்தின் இனிமையைப்பசுக்கள் அறிந்து நன்குகேட்டற்கு அருகில்வந்து திரளு மென்க. பின்னே'கணம்' என வந்ததனால், முன்னே 'நிரை' - பசுக்கூட்டத்தையுணர்த்தாமல்,பசுமாத்திரத்தை யுணர்த்திற்று. இதுமுதற் பதினேழு கவிகள் - பெரும்பாலும் மூன்று ஆறாஞ் சீர்கள் காய்ச்சீர்களும், மற்றை நான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள். (281) 222. | ஆரென்றறியத்தகாதவெனையரசுமாக்கிமுடிசூட்டிச் சீருந்திறமுந்தனதுபெருந்திருவுமெனக்கேதெரிந்தளித்தான் பாரின்றறியநூற்றுவர்க்கும்பழிதீர்வென்றிப்பாண்டவர்க்கும் போரென்றறிந்துஞ்செய்ந்நன்றிபோற்றாதவரிற்போவேனோ. |
(இ -ள்.) (துரியோதனன்), ஆர் என்று அறிய தகாத எனை - இன்னானென்று அறிந்துகொள்ளுதற்குந் தகுதியில்லாத என்னை, அரசும் ஆக்கி - இராசகுலத்தவனாகவும் வைத்து, முடி சூட்டி - கிரீடாபிஷேகஞ் செய்வித்து, தனது சீரும் திறமும் பெரு திருவும் - தனக்குரிய சிறப்புக்களையும்அதிகாரத்தையும் மிக்கசெல்வத்தையும், எனக்கே தெரிந்து அளித்தான் -எனக்கு ஒருவனுக்கே தன் மனமறிந்து கொடுத்தான்; (அங்ஙனமிருக்க), இன்று- இப்பொழுது, பார் அறிய - உலகத்தார்யாவரும் அறியும்படி, நூற்றுவர்க்கும்- (துரியோதனாதியர்) நூறுபேருக்கும், பழி தீர் வென்றி பாண்டவர்க்கும் -பழிப்புக்கிடமில்லாத சயத்தையுடைய பாண்டவர்களுக்கும், போர் என்று -சண்டை நேர்வதென்று, அறிந்தும் - தெரிந்திருந்தும், செய் நன்றிபோற்றாதவரின் - (ஒருவர்) செய்த உபகாரத்தை நினையாது மறப்பவர் போல,போவேனோ - (துரியோதனனைவிட்டுப் பாண்டவரிடத்துச்) செல்வேனோ?[செல்லமாட்டேன் என்றபடி]; ஆர் -யார்; மரூஉ. இங்கே, கர்ணனது வார்த்தையில் பாண்டவர்க்கு 'பழிதீர்வென்றி' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதனால், அவன் பாண்டவர்பக்கல் சிறிது அபிமானங் கொண்டா னென்பது விளங்கும். பழி தீர்வென்றி - தருமயுத்தத்தாற் சயித்தல்; புகழ் தரும் வெற்றி. (282) |