223.-கண்ணன் கர்ணனுக்குவிடைகொடுத்து அனுப்பிவிட்டு, அசுவத்தாமனை அழைத்தல். இரவிக்குரியதிருமதலையிவ்வாறுரைக்கவிசைவண்டு விரவிப்பயிலுந்துழாய்முடியோன்வேறோர்மொழியும்விளம்பாமல் உரவிற்றடந்தோளுரவோனையேகென்றருளியொருசார்வெம் புரவித்தாமாநின்றானைவருகென்றழைத்துப்புகல்கின்றான். |
(இ -ள்.) இரவிக்கு உரிய திரு மதலை - சூரியனுக்குஉரிய செல்வப் புதல்வனான கர்ணன், இ ஆறு உரைக்க - இந்தப்படி சொல்ல, (அதன் பின்பு),இசை வண்டு விரவி பயிலும் துழாய் முடியோன் - கீதம்பாடுகிற வண்டுகள்கலந்து மொய்க்கப்பெற்ற திருத்துழாய் மாலையையணிந்த திருமுடியையுடையகண்ணன், வேறு ஓர் மொழியும் விளம்பாமல் - வேறொரு வார்த்தையெதையுஞ் சொல்லாது விட்டு, உரம் வில் தட தோள் உரவோனை -வலிமையையுடைய வில்லை ஏந்திய பெரியதோள்களின் வலிமையுடையஅக்கன்னனை, ஏகு என்று அருளி - நீ செல்வாயென்று அன்போடுஅனுப்பிவிட்டு, ஒருசார் வெம்புரவித்தாமா நின்றானை - (அங்கு) ஒருபக்கத்தில்நின்றிருந்தவனாகிய (போரிற்) கொடிய அசுவத்தாமனை, வருக என்றுஅழைத்து - வருவாயாகவென்று அருகிற்கூப்பிட்டு, புகல்கின்றான் -இரகசியமாக (ச் சிலவார்த்தை) கூறுகிறவனானான்; (எ - று.) - அதனை,மேலிரண்டு கவிகளிற் காண்க.
திருமதலை யென்பதற்கு - சிறந்தகுமார னென்றும், உரவோன் என்பதற்கு- புத்திபலமுடையவ னென்றுங் கூறலாம். புரவி, அசுவம் என்பன -குதிரையாகிய ஒரு பொருளைக் குறிப்பன வாதலால், அசுவத்தாமாவைப்புரவித்தாமா வென்றார்; பரித்தாமா, இவுளித்தாமா என்றுங் கூறுவர். துரோணர்மனைவியாகிய கிருபியின் அழகைக்கண்டு மிகக்காமுற்ற சிவபிரானதுஅருளினாற் குதிரையினிடம் பிறந்தவனிவனென்று அறிக. அசுவத்தாமன் -குதிரையைப் பிறப்பிடமாக வுடையவன். 'வேறோர்மொழியும் விளம்பாமல்'என்றது, கர்ணனிடத்து நாகாஸ்திரத்தைப்பற்றிக் குந்தி கூறவேண்டுமென்றுநினைத்துத் தான்கூறாமல் விட்டதை. (283) 224.-இதுமுதல் நான்குகவிகள்- கண்ணன் அசுவத்தாமனை மித்திரபேதஞ்செய்தல். போயேகானம்பலதிரிந்துபுகன்றவிரதம்பொய்யாதோ ராயேவந்தபாண்டவர்களைந்தூர்வேண்டமறுத்ததற்குச் சேயேயனையசிலைமுனிவன்சேயேநாளைச்செருக்களத்தில் நீயேகரியென்றெடுத்துரைத்தானெடியோன்றுளபமுடியோனே. |
(இ -ள்.) 'சேயே அனைய - முருகக்கடவுளையே ஒத்த, சிலை முனிவன்சேயே - வில்லாசிரியனாகிய துரோணாசாரியனது புத்திரனே! கானம் பலபோயே திரிந்து - காடுகள் பலவற்றிற் சென்று கொண்டே அலைந்து, புகன்றவிரதம் பொய்யாதோர் ஆயே - (வன |