வாசஅஞ்ஞாதவாசங்களைப்பற்றிக்) கூறிய விரதமொழியைத்தவறாமல் நிறைவேற்றினவர்களாகியே, வந்த - (மீண்டு) வந்த, பாண்டவர்கள் - பாண்டுபுத்திரர்களுக்காக, ஐந்து ஊர் வேண்ட - (யான்) ஐந்துஊரையாயினும் (கொடுத்திடும்படி) பிரார்த்திக்க, மறுத்ததற்கு - (துரியோதனன் சிறிதுங் கொடுக்கமாட்டேனென்று) தடுத்துச் சொன்னதற்கு, நாளை செரு களத்தில் - இனிவிரைவில் நடக்கும் போர்க்களத்தில், நீயே கரி - நீயே சாட்சியாவாய்,' என்று-, எடுத்து உரைத்தான் - (அசுவத்தாமனை நோக்கி) எடுத்துக் கூறியருளினான்; (யாரெனில்),- நெடியோன் - எல்லாப்பெருமையையு முடையவனும், துளபம் முடியோன் - திருத்துழாய் மாலையை யணிந்த திருமுடியையுடையவனுமாகிய கண்ணபிரான்; (எ - று.) அசுவத்தாமனுக்குச் சுப்பிரமணியன் உவமை - பலபராக்கிர மங்களால் மாத்திரமேயன்றி, சிவனருளாற் பிறந்தவனாதலாலும் ஏற்கும். இங்கு அசுவத்தாமனை, 'சேயேயனைய' எனக் கண்ணன் உவமைகூறி விளித்ததனால்,முருகக்கடவுள் தேவசேனாதிபதியானதுபோல இவன் துரியோதனாதியர்சேனைக்குத் தலைவனாயின் அவர்களை வெல்லுதல் அரிதென்ற கருத்தால்இவனிடஞ் சிறிது பேதஞ் செய்யலுற்ற கருத்தும் புலப்படும். கரி -சாட்சியென்னும் பொருளதாதலை "இந்திரனே சாலுங்கரி", "உய்த்தீட்டும்தேனீக்கரி" எனத் திருக்குறள் நாலடியார்களிலுங் காண்க. மறுத்ததற்குக் கரி -இங்கே நான்கனுருபு, தகுதிப்பொருளது. "பிது: சதகுணம்புத்ர:" என்றபடிதந்தையினும் பலமடங்கு கல்வி கேள்வி அஸ்திரசஸ்திர சாஸ்திரப்பயிற்சிமுதலியவற்றிற் சிறந்தவனென்பது விளங்க, 'சிலைமுனிவன்சேயே' என்றார்.'நீயேகரி' எனப் பிரிநிலையேகாரங் கொடுத்துக் கூறியதனால், பிறரெவரும் இங்குஉன்னளவு தகுதியுடையவரில்லையெனப் புகழ்ந்தவாறு. விரதம் -கொள்கைதவறாமல் ஒழுகுதல். சிரஞ்சீவி யாதலால் இவன் அழியா - னென்றுஇவனைக் கரிபோக்கியது. ஏகாரங்களுக்கு ஏற்றபடி பொருளுணர்க. (284) 225. | ஆனாவுனதாண்மைக்குநகிரவனிதலத்தில்வேறுண்டோ ஞானாதிபனேபோர்க்களத்தினாகக்கொடியோன்பணிந்துன்னைச் சேனாபதியாகென்றாலுஞ்செலுத்தேனென்றுநீமறுத்தி யானாலுய்வரைவருமற்றவர்பாலுனக்குமன்புண்டே. |
(இ -ள்.) ஞான அதிபனே - அறிவுக்குத் தலைவனாகவுள்ளவனே! ஆனா - (எப்பொழுதும்) நீங்காத, உனது ஆண்மைக்கு - உனது பராக்கிரமத்துக்கு, நிகர் - சமானமாக, அவனிதலத்தில் - பூலோகத்தில், வேறுஉண்டோ - வேறு யாருடையதேனும் பராக்கிரமமுள்ளதோ? [எதுவுமில்லை];போர் களத்தில் - யுத்தகளத்திலே, நாகம் கொடியோன் - பாம்புக்கொடியையுடைய துரியோதனன், உன்னை-, பணிந்து - வணங்கி, சேனாபதிஆகு என்றாலும் - சேனைத்தலைவனாவாயென்று சொன்னாலும், செலுத்தேன்என்று - அச்சேனைத்தலைமையை நடத்தமாட்டேனென்று, நீ மறுத்தி ஆனால் - நீ தடுத்து விடுவாயானால், ஐவரும் - பாண்டவரைந்து பேரும், உய்வர் - பிழைத் |