யில் வல்லதுரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமா, தனிவந்து அகலும் தூதனை - தனியே வந்து செல்கிற தூதனான கிருஷ்ணனை, தானே போய் அணுகி-தானாகவே போய்ச்சேர்ந்து, மோதிரம் தொட்டு - (அவனது) மோதிரத்தைக் கையில்வாங்கி, முன்னர் - எதிரில், அரு சூள் - அருமையான பிரதிஜ்ஞையை, மொழிகின்றான் - சொல்லுகிறவனானான்; (ஆகையால்), இனி வந்து-உறவுஆய் நின்றாலும் - (இவன்) இனிமேல் (நம்மிடம்) வந்து நட்புடையவனாய் நின்றாலும், இவனை எங்கன் தெளிவது - இவனை எவ்வாறுநம்புவது?' என - என்று, சொன்னான்-: (எ - று.)
தூரத்திலிருந்து பார்த்த துரியோதனனுக்குக் கண்ணன் அசுவத்தாமனைக்கூப்பிட்டதும், அசுவத்தாமன் பூமியினின்று மோதிரத்தை யெடுத்ததும்முதலியன தெரியாவாதலால், இங்ஙனங் கூறினான். இனி, தானே யணுகிஎன்பதற்கு - நமது கட்டளையில்லாமல் தானே சென்று என்றும் உரைக்கலாம்.மேல் வீட்டும பருவத்தில் "வீரசாபமுட னுரைக்கும் வெய்ய சாபம் வல்லவத்தீரன்" என்றபடி துரோணன் சாபாநுக்கிரக சக்தியு முடையவனாதலால்,'தடஞ்சாப முனிவன்' என்பதற்குப் பெரிய சாபங் கொடுக்கவல்ல முனிவனென்றுமாம்; இரட்டுறமொழிதல். உறவு - சேர்தல்; உறவினனுக்குத்தொழிலாகுபெயர். ஏறு - ஆண்பாற்பெயர்; பெரியதையுஞ் சிறந்ததையும்ஏறென்றல் மரபு; பெரிய அலையை ஆணலையென்றலுங் காண்க. (288) 229.- அதுகண்டு அசுவத்தாமன்வருந்துதல். துளியார்மதுவின்வலம்புரித்தார்த் துரியோதனன்றான்சொல்லியதும் ஒளியாரவையில்வாள்வேந்தரொருவர்க்கொருவருரைத்தனவுங் களியானையனான் செவிப்படலுங்கலங்கிச்சித்தமிவரென்னைத் தெளியாவண்ணம் பேதித்தான்றிருமாலென்றே சிந்தித்தான். |
(இ - ள்.) துளி ஆர் - துளித்தல் பொருந்திய, மதுவின் - தேனையுடைய, வலம்புரி தார்-நஞ்சாவட்டைப் பூமாலையையுடைய, துரியோதனன்-, தான்-, சொல்லியதும்-சொன்ன வார்த்தையும், ஒளி ஆர் அவையில்- விளக்கம்பொருந்தின அச்சபையிலே, வாள்வேந்தர்-ஆயு தங்களையுடைய அரசர், ஒருவர்க்கு ஒருவர் உரைத்தனவும்-ஒருத்தருக்கு ஒருத்தர் சொன்ன வார்த்தைகளும், களி யானை அனான் செவி படலும்-மதக்களிப்பையுடைய ஆண்யானையைப் போன்ற அசுவத்தாமனது காதுகளிற் கேள்விப்பட்டவளவிலே,- (அவன்), சித்தம் கலங்கி - மனம் நிலைகுலைந்து, 'இவர் என்னை தெளியாவண்ணம் - இவர்கள் என்னை நம்பாதபடி, திருமால்- கண்ணன், பேதித்தான் - மாறுபாடு செய்தான்', என்றே சிந்தித்தான்-என்று எண்ணினான்; (எ - று.) (289) 230.- கண்ணன் விதுரன்மாளிகையிற்சென்று இந்திரனை நினைத்தல். தண்ணந்துளப முடியோனுந்தனித்தங்கியிருந்து தன்மனத்தின் எண்ணம்பலித்த தெனமகிழ்ந்தேயிளையோன்றனக்குவிடைநல்கி |
|