விண்ணின்றமரர் மிகத்துதிக்கவிதுரன்மனையின்மேவியபின் திண்ணங்கடவுட்குலவரசன்வருமாறறிந்துசிந்தித்தான். |
(இ -ள்.) தண் அம் துளபம் முடியோனும் - குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையையணிந்த முடியையுடைய கண்ணனும்,- இளையோன் தனக்கு விடை நல்கி - அசுவத்தாமனுக்குச் செலவு கொடுத்தனுப்பி, (அதன்பின்), தனித்து அங்கு இருந்து-அங்கு ஓரிடத்தில் தனியனாயிருந்து, தன்மனத்தின் எண்ணம் பலித்தது என மகிழ்ந்தே - தன்மனத்திற் கருதிய முழுவதும் நிறைவேறிவிட்டதென்று மகிழ்ச்சிகொண்டே, விண் நின்று அமரர் மிக துதிக்க விதுரன் மனையில் மேவிய பின் - ஆகாயத்திலே வந்து நின்று தேவர்கள் மிகுதியாகத் துதிசெய்யாநிற்க விதுரனதுமாளிகையில் எழுந்தருளிய பின்பு, திண்ணம் கடவுள்குலம் அரசன் வரும் ஆறு அறிந்து சிந்தித்தான் - கலங்காத மனவுறுதி யையுடைய தேவர்கூட்டத்துக்கு அரசனான இந்திரன் அருகில் வரும்படி ஆலோசித்து நினைத்தான்; (எ - று.) 'அங்குத் தனித்திருந்து' என்பதை 'விதுரன் மனையின் மேவியபின்' என்றதன்பின் எடுத்துக்கூட்டினும், 'திண்ணம்' என்பதை 'பலித்தது' என்பதனோடு கூட்டினும் அமையும். 'பலித்தது' என்றது, சாதியொருமையாம். (290) 231.-கண்ணன் அங்குவந்தஇந்திரனை நோக்கிக் கூறத்தொடங்குதல். அந்தக்கணத்தில்வந்திறைஞ்சுமாகண்டலனைமுகநோக்கிக் கந்தத்துளபமுடியோனுங்கண்ணுங்கருத்துங்களிகூரத் தந்தத்தொழிலினரிசுமந்ததவிசினிடையேயுடனிருத்தி முந்தக்கருதுகின்றவினைமுடிப்பானுபாயமொழிகின்றான். |
(இ -ள்.) அந்த கணத்தில்-அங்ஙனம் வரும்படிநினைத்த அந்த நிமிஷத்திலேயே, வந்து-, இறைஞ்சும்-வணங்கின, ஆகண்டலனை- இந்திரனை,முகம்நோக்கி - முகத்தைப் பார்த்து, கந்தம் துளபம் முடியோனும் -நறுமணத்தையுடைய திருத்துழாய்மாலையைத் தரித்த திருமுடியையுடையவனான கண்ணனும், கண்ணும் கருத்தும் களிகூர - (தனது) கண்களும்மனமுங் களிப்பு மிக, தந்தம் தொழிலின் அரி சுமந்த தவிசின் இடையே உடன்இருத்தி - யானைத்தந்தத்தாலமைந்த விசித்திர வேலைபாட்டையுடையசிங்கஞ்சுமந்த வடிவமாகச் செய்யப்பட்டதொரு ஆசனத்தினிடத்திலே உடனே(அவனை) வீற்றிருக்கச் செய்து, முந்த கருதுகின்ற வினை முடிப்பான் -பிரதானமாகத் தான் நினைக்கின்ற காரியத்தை நிறைவேற்றுதற் பொருட்டு,உபாயம் மொழிகின்றான்-தந்திரத்தைக் கூறுகின்றவனானான்; (எ - று.) மைந்தனுக்கு நன்மைசெய்யும்பொருட்டுத் தந்தையான இந்திரனை வரவழைத்தான். 'ஆகண்டலன் - (நன்றாகப் பகைவரைத்) துணிப்பவன். கண்களிகூர்தல், பார்த்தலால். கருத்துக் களிகூர்தல், |