னுக்கேஉரியதாய்விடும்; (அன்றியும், அருச்சுனன் இறந்தால்), ஒழிந்தோர்தாமும் மடிந்திடுவார் - மற்றைப்பாண்டவரும் இறந்து விடுவார்கள்: (இங்ஙனம்), முன்னம் சூதில் மொழிந்த பகை முடியாது இருக்கின் - முன்னே சூதுபோர் நிகழ்ந்த பொழுது (அருச்சுனன் முதலியோர் கன்னன் முதலியோரைக் கொல்வதாகக்) கூறின சபத வார்த்தை நிறைவேறாமலிருந்தால், அவர்க்கு அன்று - (அருச்சுனன் முதலிய) அப்பாண்டவர்க்கு மாத்திரமே பழியாகாது; நின் நெஞ்சு அறிய யான் அறிய-உன் மனம் அறியவும் நான் அறியவும், நினைக்கே வசையும் நிலை ஆம்ஏ - (அருச்சுனனது தந்தையான) உனக்கே பழிப்பும் (என்றும் அழியாது) நிச்சயமாய் நிலைநிற்பதாகும்; (எ -று.)- ஈற்றேகாரம் - தேற்றம்.
இங்ஙனம் கண்ணன் இந்திரனைத் தந்திரமாகத் தன் வழிப்படுத்தற்குக் கூறுகிறான். வசையும் என்ற உம்மை - புத்திரசோகம் மாத்திரமேயன்றி என்ற பொருளை விளக்குதலால், எச்சப்பொருளதென்னலாம். (293) 234. | கவசங்கனககுண்டலமென்றிரண்டுபுனையிற்கற்பாந்த, திவசம் பொரினுங் கன்னனுயிர்செகுப்பார்மண்ணிற் சிலருண்டோ, அவசங்கிளைஞருறத் துணைவரரற்றக்களத்திலடுகுரங்குத், துவசம் படைத்தோன்படும்பயந்ததுணைவாவின்னே சொன்னேனே. |
(இ -ள்.) (தான்பிறந்தபொழுதே உடம்புடன் பிறந்த), கவசம் - கவசமும்,கனக குண்டலம் - பொன்மயமான குண்டலமென்னுங் காதணியும், என்றஇரண்டு - என்று சொல்லப்பட்ட இவ்விரண்டையும், புனையின் - தரித்திருப்பானானால், கற்ப அந்த திவசம் பொரினும் - கல்பகாலத்தின் முடிவுநாள் வரையிற் போர்செய்தாலும், கன்னன் உயிர் செகுப்பார் - கர்ணனதுஉயிரை ஒழிப்பவர், மண்ணில் சிலர் உண்டோ - பூமியில் (எவரேனுஞ்)சிலருளரோ? (எவருமில்லை யென்றபடி); (ஆதலால்,) கிளைஞர் அவசம் உற -பந்துக்கள் (சோகத்தாற்) பரவசத்தை யடையவும், துணைவர் அரற்ற - உடன்பிறந்தவர்கள் கதறிப்புலம்பவும், களத்தில் - போர்க்களத்தில், அடு குரங்குதுவசம் படைத்தோன் - (பகையை) அழிக்கவல்ல குரங்கின் வடிவத்தையெழுதின கொடியைப் பெற்ற அருச்சுனன், படும் - (கன்னனால்) இறப்பான்;பயந்த துணைவா - (அவனைப்) பெற்றவனும் (எனக்குச்) சினேகிதனுமாகியஇந்திரனே! இன்னே சொன்னேனே - (அதனை முன்சாக்கிரதையாக)இப்பொழுதே (உன்னிடங்) கூறி விட்டேன்; (எ - று.)
குரங்குக்கொடி - தேருடன் காண்டவதகனகாலத்தில் அக்கினி தேவனால்அருச்சுனனுக்கு அளிக்கப்பட்டது; பின்பு வீமசேனன் புட்பயாத்திரையாகஅளகாபுரிக்குச் சென்றபொழுது, இடையில் அநுமானைக்கண்டு வணங்கிவேண்டிப் போர்க்களத்தில் அருச்சுனன் தேர்க்கொடியில் வந்து நின்றுமகிழ்ந்து கூத்தாடும்படி வரம்பெற்றான். கல்பம் - பிரமனாயுள். கவசகுண்டலங்களுக்கு இத்தன்மை - சூரியனது வரத்தினால் அமைந்தது. ந+வசம்= அவசம். (294) |