னால்,இந்தப் புவியில் அவன் ஒன்றும் மறுத்து அறியான் - இந்த வுலகத்தில் அக்கன்னன் ஒரு பொருளையும் (கொடுக்க இயலாதென்று சொல்லி) மறுத்தறியமாட்டான்; உயிரே எனினும் ஈந்திடுவான் - (இரக்கப்படுவது தனது) உயிரேயானாலும் (அதனையுந் தவறாது) கொடுத்திடுவான்; (எ - று.) கொடுப்பானது உயர்வும் பெறுவானது இழிவுந் தோன்ற 'ஈந்திடுவான்' என்றது; இங்கே "ஈதாகொடுவெனு மூன்று முறையே, இழிந்தோனொப்போன் "மிக்கோ னிரப்புரை" என்றதைக் காண்க. தாநாகரன் - தீர்க்கசந்திபெற்ற வடசொற்றொடர். உரையும் பாட்டும் என இருவகைப்பட்ட புகழில், பாட்டின் புகழ் இவனுக்குச் சிறப்பாக அமைந்துள்ளவாற்றை 'சந்தப்பனுவலிசை மாலை' என்ற அடைமொழி விளக்கும்; இந்த அடைமொழிக்கு - பல சந்தங்களையுடைய நூல்களாகிய கவிமாலைகளை யேற்ற என்று உரைப்பாரு முளர். உயிரினும் இனிதாய் இன்றியமையாதது எவர்க்கும் வேறொன்று இன்றாதலால், 'உயிரேயெனினும்' என்று ஏகாரமும் உம்மையும் - உயர்வு சிறப்பு. அந்தணர்க்குரிய அறுவகைத் தொழிலில், இரத்தலும் ஒன்றாதலால், அதற்குரிய அவ்வடிவமாகப் போகச் சொன்னான். (296) 237. | இரண்டுமவன்பானீகவரினிருந்தேரூர்ந்திப்படியரசர் திரண்டுவரினும்வெஞ்சமரிற்றிண்டேர்விசயனெதிர்நில்லார் முரண்டுபொருவிற்கன்னனுந்தன்முன்னேயெய்திமுடிசிதறிப் புரண்டுமறியுமெனவணங்கிப்புத்தேளரசன்போகின்றான். |
(இ -ள்.) இரண்டும் - (மேற்கூறிய கவச குண்டலமாகிய) இரண்டு பொருளையும், அவன்பால் நீ கவரின் - அக்கன்னனிடத்தினின்று நீ பெற்றுக்கொண்டு வந்தால், இப்படி அரசர் - இந்தப் பூலோகத்திலுள்ள அரசர்களெல்லோரும், இருந் தேர் ஊர்ந்து - பெரியதேரின்மேலேறிச் செலுத்தி,திரண்டுவரினும் - (தொகையாகக்) கூடிவந்தாலும், வெம் சமரில் - கொடியயுத்தத்தில், திண்தேர் விசயன் எதிர் நில்லார் - வலிய இரதத்தையுடையஅருச்சுனனுக்கு எதிரில் நிற்கமாட்டார்கள்; முரண்டு பொரு வில் கன்னனும் -பகைத்துப் போர்செய்கிற வில்லில்வல்ல அக் கர்ணனும், தன் முன்னே எய்தி -அவ்வருச்சுனனுக்கு எதிரில் வந்து, முடி சிதறி - (அவ்வருச்சுனனுக்கு எதிரில்வந்து, முடி சிதறி - (அவனம்பால் தன்) தலை சிதறப்பெற்று, புரண்டு - கீழ்விழுந்து உருண்டு, மறியும் - இறப்பான், என - என்று (ஸ்ரீகிருஷ்ணமூர்த்திஉபாயங்) கூற, (உடனே) புத்தேள் அரசன் - தேவர்களுக்கு அரசனானஇந்திரன், வணங்கி - (கண்ணபிரானை) நமஸ்கரித்து, போகின்றான் -(கன்னனிடஞ்) செல்பவனானான்; (எ - று.)
கவரின் - தந்திரமாகக் கிரகித்துவிட்டால், முரண்டு என்னுந் தெரிநிலை வினையெச்சத்தில், முரண் - வினைப்பகுதி. புத்தேள் - தேவன்; இதன் பன்மை - புத்தேளிர். (297) |