பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 271

                                     லென்று,
சொன்னவேலையி னகைத்துனக்களிப்பனீ சொன்னவை
                           யாவையுமென்றான்.

     (இ -ள்.) (கர்ணன் நமஸ்கரித்தபின் அவ்வந்தணனைப் பார்த்து),
'நீர் -,ஈண்டு - இவ்விடத்தில், பரிந்து - அன்புகொண்டு, எழுந்தருளுதற்கு -
கருணையோடு வருவதற்கு, என்ன மா தவம் புரிந்தனன் - (நான்) என்ன
பெருந்தவத்தைச் செய்துள்ளேனோ', என்று - என்று (உபசாரவார்த்தை) கூறி,
பொன்னின் ஆசனத்து இருத்தி - (அப்பிராமணனைப்) பொன்மயமானதொரு
ஆசனத்திலே யெழுந்தருளப் பண்ணி, மெய் அருளுடன் - உண்மையான
கருணையுடனே, பூசையும் - (அதிதியாகவந்த அந்தணனுக்குச் செய்தற்குரிய)
உபசாரங்களையும், முறை முறை புரிய - நூல் முறைமைப்படி செய்ய,
(அப்பொழுது), அன்ன வேதியன் - அந்தப் பிராமணன், 'தளர்ந்த என்
நடையினால் - மிகத் தளர்ச்சி பெற்றுள்ள எனது நடையினாலே, பின் பகல்
ஆனதே - (இங்கு நான் வந்து சேர்வதற்குப்) பிற்பகற்பொழுதாய்விட்டது,'
என்று சொன்ன வேலையின் - என்று சொன்னபொழுது, (கன்னன்), நகைத்து-
சிரித்து, 'நீ சொன்னவை யாவையும் உனக்கு அளிப்பன் என்றான் -
(காலங்கடந்தாலும் இப்பொழுது) நீ விரும்பிய பொருள்களையெல்லாம்
(உனக்குநான்) கொடுப்பேன்' என்று கூறினான்; (எ - று.)

    முற்பகல் கழிந்துவிட்டது காரணமாக இவன் வேண்டிய பொருளைக்
கொடுக்கமாட்டான் என்று தன்பக்கல் இந்திரன் இகழ்ச்சியான கருத்துக்
கொண்டமையை நோக்கிக் கர்ணன் சிரித்தான்; மிகுந்த அன்பால் முக
மலர்ந்துசிரித்தா னென்றுமாம்; அன்றி, பரிகாசமாகச் சிரித்தானெனக்
கொள்ளலாகாது;அது வள்ளன்மைக்குக் குறைவுபாடாதலால்.  இரப்பானது
சிறுமையும் ஈவானதுபெருமையுந் தோன்ற, 'மெய்யருளுடன்' எனப்பட்டது.
மூப்புடைய பூதேவனதுசிறப்பை நோக்கி, 'பூசை' என்றார்.         (300)

241.-கர்ணனது சபதமொழி.

அருத்தியீதல்பொற் சுரதருவினுக்குமற் றரிதுநீயளித்தியோ
                                       வென்று,
விருத்தவேதியன் மொழிந்திடநகைத்துநீ மெய்யுயிர்விழைந்
                                    திரந்தாலுங்,
கருத்தினோடுனக் களித்திலேனெனி னெதிர்கறுத்தவர்
                               கண்ணிணைசிவப்ப,
வுருத்தபோரினிற் புறந்தரு நிருபர்போயுறுபத முறுவ
                                னென்றுரைத்தான்.

     (இ -ள்.) 'அருத்தி ஈதல் - (எனக்கு) விருப்பமான பொருளைக்
கொடுத்தல், பொன் சுர தருவினுக்கும் - பொன்மயமான தேவதருவாகிய
கற்பகவிருட்சத்துக்கும், அரிது - அருமையானதாம்; (அங்ஙனமிருக்க), நீ
அளித்தியோ - நீ கொடுத்திடுவையோ?' என்று -, விருத்த வேதியன் -
அந்தக்கிழப் பிராமணன், மொழிந்திட - சொல்ல,- (கர்ணன்),- நகைத்து -
சிரித்து,'மெய் உயிர் நீ விழைந்து இரந்தாலும் - எனது உடம்பிலுள்ள
உயிரை நீவிரும்பிக்கேட்டாலும், கருத்தினோடு - மனச் சம்மதியுடனே,
உனக்குஅளித்திலேன் எனின் - உனக்குக் கொடாமற் போவேனானால்,
(யான்), -எதிர்