பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 275

யாசித்துச்சொன்னதையும், அவ்வளவு ஈந்ததும் - அம்மாத்திரத்தில் (அவன்
தனக்குக்) கொடுத்ததையும், ஆங்கு அவற்கு இசைத்தான் - அவ்விடத்தில்
[அப்பொழுது] அக்கண்ணனுக்குக் கூறினான்; வரம் தரும் திருமால் -
(வேண்டிய) வரங்களையெல்லாங் கொடுத்தருளுகிற திருமகள் கொழுநனான
கண்ணன், அதை வினவி-அந்த இந்திரன் வார்த்தையைக்கேட்டு, அவ்வாசவன்
தனக்கு உரை வழங்கும் - அந்த இந்திரனுக்குத் தான் ஒருவார்த்தை
கூறுவான்;(எ - று.)

       புயல்வண்ணன் இருந்தவுழி - விதுரன்மாளிகை.  மனம் மிக
மகிழ்தற்குக் காரணம், கண்ணன் கட்டளைப்படியும் தான் விரும்பின படியும்
அருச்சுனனுக்கு அபாயமுண்டாகாதவாறு கன்னனிடம் கவச
குண்டலங்களைப்பெற்றுவிட்டது.  'அவ்வளலீந்ததும்' என்ற பாடத்துக்கு -
வரையாதுகொடுப்பவனாகிய அக்கர்ணன் கொடுத்ததையுமென்க; வளல் -
வள்ளல்.  எல்லாவரங்களையும் எல்லோருக்குந்தர வல்ல எம்பெருமான்
இங்குத் தான் ஒருவனை இரந்ததும் மற்றொருவனை யிரக்கும்படி
பிறனைத்தூண்டியதும் ஆகிய இவையெல்லாம், மனிதனாக அவதரித்ததற்
கேற்றதிருவிளையாடலேயா மென்பது தோன்ற, இங்கு 'வரந்தருந்திருமால்'
என்றார்.                                              (305)

246.- கண்ணன்இந்திரனுக்குச் சில கூறுதல்்.

உண்மையாகவெஞ்சமர்முகத்தெறிபடையொன்றும் வந்துடலுற
                                      வொட்டாத், 
திண்மையாலுயர்கவச  குண்டலங்களைச்  சென்றிரந்தவற்கிவன்
                                      கொடுத்தான்,
எண்மையாயினுங்கிளைஞரேயேற்பினுமியல்பிலாப்புன்செல்வரீயார்,
வண்மையாளர்தம்மாருயிர் மாற்றலார்கேட்பினுமறுக்கிலாரென்றே.

இதுவும், மேற்கவியும் - குளகம்.

        (இ- ள்.) வெம் சமர் முகத்து - கொடிய போர்முனையிலே,
எறிபடை ஒன்றும் வந்து - (பகைவர்) வீசுகிற ஆயுதமொன்றும் வந்து
உண்மைஆக உடல் உற ஒட்டா - மெய்யாக உடம்பிற் படுதற்கு
இடங்கொடாத,திண்மையால் - வலிமையினாலே, உயர்-சிறந்த,
கவசகுண்டலங்களை -கவசத்தையுங் குண்டலங்களையும், சென்று
இரந்தவற்கு-போய் யாசித்தவனுக்கு,இவன் கொடுத்தான் - இக்கர்ணன்
கொடுத்திட்டான்; இயல்பு இலா புல்செல்வர்- இயற்கையில் நற்குண மில்லாத
இழிவான செல்வமுடையவர்கள், எண்மைஆயினும் - (இரக்கப்படும் பொருள்
தம்மாற் கொடுக்கப்படுதற்கு மிக) எளியதாயிருந்தாலும், கிளைஞரே ஏற்பினும்
- அதனையிரப்பவர் (நெருங்கிய)உறவினர் (அல்லது நண்பர்களே) ஆனாலும்,
ஈயார் - (ஒன்றையும்)கொடுக்கமாட்டார்கள்; வண்மையாளர் -
கொடையாளிகளோ வெனின், தம்ஆர் உயிர் - (இரக்கப்படுவது) தமது அரிய
உயிரேயானாலும், மாற்றலார்கேட்பினும் - (அதனைப்) பகைவர்கள் வந்து
இரந்தாலும், மறுக்கிலார் -தடுத்துக்கொடாதொழியார்கள்,