பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 285

என்றுசொல்லி ஒரு வரத்தைக் குறிப்பிட்டு வேண்டினாள்; 'வாய்த்த
மற்றவர்கள் - பொருந்தின மற்றைப் பாண்டவர்கள் நால்வரை, இளைஞர்
என்று - தம்பிமார்களெனக் கொண்டு, அவரை மலையல் - அவர்களைக்
கொல்லாதே,' என்று ஒருவரம் குறித்தாள்-: மூத்தவன் - தமையனான கர்ணன்;
காதல் இளைஞர்தம் பொருட்டு - அன்புக்கு உரிய தனது தம்பியர்களுக்காக,
மொழிந்தமை - (தாய் இங்ஙனஞ்) சொன்னதை, கேட்டு-, இவை மொழிவான்-
இவ்வார்த்தைகளைக் கூறுவான்; (எ - று.)

    அம்பகழி - பகழிக்கு அழகு, குறித்த இலக்குத் தவறாமை; இனி, அம்-
அல்வழிச்சாரியை யெனவுமாம்.  கோறல், மலையல் - எதிர்மறை யொருமை
ஏவல்கள்.  மலையல் என்பதற்கு - போர்செய்யாதே என்று கூறுதல் மேல்
யுத்த பருவங்களோடு மாறுபடுமென விடுக்க.  ஆல் - அசை.      (318)

259.-கர்ணனது மறுமொழி.

தெறுகணையொன்று தொடுக்கவுமுனைந்துசெருச்செய்வோன்
                            சென்னியோடிருந்தான்,
மறுகணைதொடுப்பதாண்மையோவலியோமானமோ
                                மன்னவர்க்கறமோ,
வுறுகணையொன்றேபார்த்தன்மேற்றொடுப்பனொழிந்துளோருய்
                                வரென்றுரைத்தான்,
தறுகணரலர்க்குந்தறுகணானவர்க்குந்தண்ணளிநிறைந்த
                                   செங்கண்ணான்.

     (இ -ள்.) 'தெறு கணைஒன்று தொடுக்கவும் - அழிக்கவல்ல
அஸ்திரத்தை ஒருமுறை பிரயோகிக்கவும், முனைந்து செரு செய்வோன்
சென்னியோடு இருந்தால் - எதிர்த்துப் போர்செய்யும் பகைவன்
தலைதுணிக்கப்படாமல் அதனோடு பிழைத்திருந்தால், மறு கணை
தொடுப்பது -(அவன்மேல் அந்த அஸ்திரத்தை) இரண்டாம்முறை விடுப்பது,
மன்னவர்க்கு -அரசர்களுக்கு, ஆண்மையோ - பராக்ரமமாகுமோ? வலியோ
 - வல்லமையோ?மானமோ - பெருமையோ? அறமோ - தருமமாகுமோ?
[ஆகாதென்றபடி];உறுகணை ஒன்றே பார்த்தன்மேல் தொடுப்பன் - (நான்)
அடைந்துள்ளநாகாஸ்திரத்தை ஒருதரமே அருச்சுனன்மேற் பிரயோகிப்பேன்;
ஒழிந்துளோர்உய்வர் - அவனொழிந்த பாண்டவர் நால்வரும் (என்னாற்
கொல்லப்படாமற்)பிழைத்திடுவார்கள்,' என்று உரைத்தான் - என்று
கூறினான்; (யாவனெனில்), -தறுகணர் அலர்க்கும் - கொடியவரல்லாத
நல்லவர்க்கும், தறுகண்ஆனவர்க்கும் - கொடுமையையுடையோர்க்கும்,
(வேறுபாடின்றி), தண் அளிநிறைந்த - குளிர்ச்சியான கருணை நிரம்பின,
செம் கண்ணான் - சிவந்தகண்களையுடைய கர்ணன்; (எ - று.)    (319)

260.-இதுவும், மேற்கவியும்ஒருதொடர்: கர்ணன் குந்தியை
நோக்கிக் கூறுவன.

பெருவரமிரண்டும்பெற்றபின் றன்னைப்பெற்றதாயினைக் கரங்
                                        குவித்துத்,
தருவரமெனக்குமிரண்டுளவுலகிற்சராசரங்களுக்கெலாந் தாயீர்,
வெருவருமமரிற்பார்த்தனாலடியேன் வீழ்ந்தபோதவனிபரறிய,
மருவருமுலைப்பாலெனக் களித்துந்தமகனெனும் வாய்மையு
                                        முரைப்பீர்.