பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 287

தும்மரியாதை பற்றிய முன்னிலைப் பன்மையாகக் கூறியவற்றோடு
மாறுகொள்ளுமென விடுக்க.  கைவருந்துணைவன் - கையையொத்து உதவும்
நண்ப னென்றுமாம்.                                (321)

262.-குந்தி கண்ணனிடம்சேர்தல்.

என்றலுமதுகேட்டீன்றதாயொக்குமென்றுகொண்டிவ்வரநேர்ந்து,
வன்றுயர்மேன்மேல்வளரயான்றளராவகையுயிருனக்குமுற்பெயர்வ,
தென்றினியெனத்தன்கண்கணீர்சொரிய வினைந்து நைந்தழு
                                        தழு திரங்கி,
யென்றருண்மதலைதனைத்தழீஇநிறுத்தியாதவனிருந்துழிச்
                                          சென்றாள்.

     (இ -ள்.) என்றலும் - என்று (கன்னன்) சொன்னவளவிலே, அது
கேட்டு-, ஈன்ற தாய் - (அவனைப்) பெற்ற தாயாகிய குந்தி, ஒக்கும் என்று
கொண்டு - (இவை) தகுமென்று உடன்பட்டு, இ வரம் நேர்ந்து - இந்த
இரண்டுவரங்களையுங் கொடுத்து, வல்துயர் மேன்மேல் வளர - கொடிய
துன்பம்மேலே மேலே அதிகப்பட்டுவளர, 'யான் தளரா வகை - நான்
தளர்ச்சியடையாதபடி, உனக்கு முன் உயிர் பெயர்வது - உனக்கு முன்னே
(நான்) உயிர் நீங்குவது, இனி என்று - இனி எக்காலத்திலோ?' என - என்று
சொல்லி, தன் கண்கள் நீர் சொரிய - தனது கண்கள் நீரைப் பெருக்க,
இனைந்து - சோகித்து, நைந்து - வாடி, அழுது அழுது - மிகப்புலம்பி,
இரங்கி- இரக்கமுற்று, என்று அருள் மதலை தனை தழீஇ - சூரியன் பெற்ற
பிள்ளையான அக்கன்னனைத் தழுவி, நிறுத்தி - (அங்கே அவனை)
நிறுத்திவிட்டு [விடைபெற்று], யாதவன் இருந்த உழி சென்றாள் - கண்ணன்
இருந்த இடத்துக்குப் போனாள்; (எ - று.)

    என்று- ஒளியையுடையதெனக் காரணப்பெயர்; எல் - ஒளி; பகுதி.(322)

263.-கண்ணன் மகிழ்ந்துமீண்டு பாண்டவரிடம் வருதல்.

கண்ணனுங்குந்திகன்னனோடுரைத்தகருத்தெலாந்திருத்தமாக்
                                      கேட்டாங்,
கெண்ணமுமுடிந்ததெனமகிழ்ந்தந்தவணங்கையுமில்லிடை
                                       யிருத்தித்,
தண்ணளியுடன்றன்பின்வருநிருபர்தம்மையுமுறைமுறை நிறுத்திப்,
பண்ணமைதடந்தேர்மீதுகொண்டன்றேபாண்டவருறை
                                    நகரடைந்தான்.

     (இ -ள்.) கண்ணனும்-, குந்தி கன்னனோடு உரைத்த கருத்து எலாம் -
குந்தி கர்ணனுடன்சொன்ன எண்ணங்களையெல்லாம், திருத்தம் ஆ கேட்டு -
செவ்வையாக்கேட்டு, ஆங்கு எண்ணமும் முடிந்தது என மகிழ்ந்து - அக்
கன்னனிடத்திலுந் தான் எண்ணிய எண்ணம் நிறைவேறிற்றென்று
சந்தோஷித்து,அந்த அணங்கையும் இல்லிடை இருத்தி - சிறந்தமகளாகிய
அக்குந்தியையும்வீட்டிலிருக்கச்செய்து, தண் அளியுடன் தன் பின் வரும்
நிருபர் தம்மையும்முறை முறை நிறுத்தி - குளிர்ச்சியான அன்புடனே தன்