பக்கம் எண் :

படையெழுச்சிச் சருக்கம் 295

உடை -(யாவராலும்) புகழப்படும் பெயரையுடைய, சேர செம்பியருடன்-
சேரசோழ மன்னவருடனே, பாண்டியன் முதலோரும்-பாண்டியராசன்
முதலானவர்களும், குரா நறுபொழில் - குரவ மலர்களின் பரிமளத் தையுடைய
சோலைகளையுடைய, கேகயம் - கேகய நாட்டின், தலைவரும் - அரசர்களும்,
குந்திபோசரும் - குந்திபோச தேசத்து அரசர்களும், வந்தார்-; (எ - று.)

    விராடபூபன், சதாநீகந்ருபன், ஆதிவராககேது, உத்தரகுமாரன் -
இருபெயரொட்டுப் பண்புத் தொகைகள்.  பூபன் - பூமியைக் காப்பவன்,
சதாநீகன் - நூறு [மிகப்பல] பெருஞ்சேனையை யுடையான்; சத அநீகம் அன்
எனப் பிரியும்.  நிருபன் - மனிதர்களைக் காப்பவன்.  சதாநீகனும்,
வராககேதுவும் - விராடனுடைய உறவினர்.  சுவேதன் - விராடனது மூத்த
குமாரன்: இளையவன் - உத்தரன். மேல் பாண்டவர்க்கு
முதற்சேனாதிபதியாதற்கேற்ற சிறப்புத்தோன்ற, 'விறற்சிவேதன்' என
விசேடித்தது.  வராககேது -பன்றியின்வடிவ மெழுதப்பெற்ற கொடியை
யுடையவன். அநீகம், குமாரன்என்பன - இங்குக் குறுகின.  குமாரன்
என்பதற்கு மன்மதனையும் குற்சிதரூபமுடையவனாக்கவல்ல கட்டழ குடையா
னென்று பொருள்; கு - குத்ஸிதம்,மாரன் - மன்மதன், நீர்வள மிகுதியால்
எங்கும் மீன்கள் மலிந்திருத்தல்பற்றி,மத்ஸ்யதேசமெனப் பெயர்போலும்.
தமிழ்நாட்டு மூவேந்த ராதலின், சேரசோழ பாண்டியரை 'பராவுபேருடை'
எனச் சிறப்பித்துக் கூறினார்.  செம்பியன்சைப்யனென்னும் வடசொல்லின்
சிதைவுபோலும்; சிபி சக்கரவர்த்தியின் மரபிற்பிறந்தவனென்று பொருள். 
ஒரு [சூரிய] குலத்தவராதலின், சோழனைச்செம்பியனென்பது, மேற்
பதினேழாம் போர்ச்சருக்கத்தில்"விறலுடைப்புலிக்கொடிவீரன் மெய்யெலாம்,
புறாவினுக் கரிந்தநாட்போலமேல்விடுந், திறலுடைய வாளியாற்
சிவப்பித்தானரோ" எனச் சோழனிடத்துச்சிபியின் தன்மையை ஏற்றிக்
கூறிவாறுங் காண்க.  குரா - ஓர்மரம்.குந்திபோசர் - பாண்டவர் தாயாகிய
குந்தியின் சுவீகாரத் தந்தைமரபினர்.                       (328)

5.

அரக்கிதந்தருள்  கடோற்கசக்காளையு  மபிமனோடிராவானும்,
விரிக்கும் வெண்குடை விந்தனுஞ் சோமனும்வீரகீர்த்தியும்
                                          போரிற்,
செருக்குநெஞ்சுடைப்புண்டலன்செயசெனன்செருவிடைத்
                                     தெவ்வோடத்,
துரக்கும்வெம்பரித் துரௌபதரைவருஞ்சூழ்படையுடன்வந்தார்,

     (இ -ள்.) அரக்கி - (இடிம்பியென்னும்) இராக்கதப்பெண், தந்து
அருள் -பெற்றுவளர்த்த, கடோற்கசன் காளையும் - கடோத்கசனென்னும்
வீரனும்,அபிமனோடு - அபிமந்யுவும், இராவானும் - இராவா னென்பவனும்,
விரிக்கும்வெள் குடை - விரித்துப்பிடிக்கும் வெண் கொற்றக்குடையையுடைய,
விந்தனும்-, சோமனும்-, வீர கீர்த்தியும்-, போரில் - யுத்தத்தில், செருக்கு -
மிகக்களிப்புக்கொள்ளும், நெஞ்சு உடை - மனத்தையுடைய, புண்டலன் -
புண்டலனும்,செயசெனன் - ஜெயசேனனும், (ஆகிய), செரு இடை தெவ் ஓட
துரக்கும்வெம்பரி துரௌபதர் ஐவரும் - போரில் பகைவர்கள் (முன்
நிற்கமாட்டாமல்)தோற்றோடும்படி துரத்தும் உக்கிர வேக