படை,கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்றார் பரிமேலழகர், தேர், யானை, குதிரை, வில்வீரர், வாள்வீரர், வேல்வீரர்எனினுமமையும்: "வேற்றானை வாட்டானை விற்றானை மேலோர், தேர்த்தானை பரித்தானை களிற்றுத் தானையென, ஆற்றல் சான்ற வறுவகைத்தானை" என்பது திவாகரம் இனி, தானை யாறொடு என்பதற்கு - சேனைகளாகிய நதிகளோடு என்று உரைத்தல் சிறவாமை காண்க. சல்லியன்- (பகைவர்க்கு) அம்புநுனிபோல் (வருத்தஞ்செய்) பவன்; சல்யம் - அம்புமுனை. தான் - அசை. சகுனி - காந்தாரதேசத்தரசன்; திருதராட்டிரனது மனைவியானகாந்தாரியின் உடன்பிறந்தவன். ஆதலால், துரியோதனாதியர்க்கு மாமன்.இவன் வஞ்சகச்சூதில் வல்லவனாதலால் 'மாயச் சகுனி' என்றார். கடகம் - ஓர்வகைக் கைவளை. விந்தன் அனுவிந்தன் என இருவர் அவந்திதேசத்தரசர்கள்என்பது வியாசபாரதம். (341) 18. | கலிங்கர்கோன்சோமதத்தன்கௌசிகன்காம்பிலீசன் தெலுங்கர்கோன்போசனாதிகேகயன்றிகத்தபூபன் வலங்கொள்வேற்கவுடராசன்மாளவன்வளவன்சேரன் துலங்குநீரோகனீகனெனும்பலவேந்தர்தொக்கார். |
(இ -ள்.) கலிங்கர்கோன் சோமதத்தன் - கலிங்கநாட்டார்க்கு அரசனானசோமதத்தனென்பவனும், கௌசிகன் காம்பிலி ஈசன் - காம்பிலிதேசத்தரசனானகௌசிகனென்பவனும், தெலுங்கர்கோன் - தெலுங்கதேசத்தார்க்கரசனும்,போசன் - போசதேசத்தரசனும், ஆதி கேகயன்- முதன்மையானகேகயதேசத்தரசனும், திகத்த பூபன் - திரிகர்த்ததேசத்தரசனும், வலம்கொள்வேல் - வெற்றியைக் கொள்ளும் வேலாயுதத்தை யேந்திய, கவுடராசன் -கௌடதேசத்தரசனும், மாளவன் - மாளவதேசத்தரசனும், வளவன் - சோழனும்,சேரன் - சேரனும், துலங்குநீர் ஓகனீகன் - விளங்குகின்ற குணங்களையுடையஓகநீகனும், எனும் - என்கிற, பல வேந்தர் - பல அரசர்கள், தொக்கார் -வந்துகூடினார்கள்; (எ - று.)
கீழ்நான்கு ஆறாங்கவிகளிற் கூறிய தேயங்களுள் சிலவற்றையே மீண்டும்இங்குக் கூறியதனால், அந்தந்ததேசத்து அரசகுலத்தாருள் சிற்சிலர் பாண்டவர்பக்கத்தும் சிற்சிலர் துரியோதனாதியர்பக்கத்தும் வந்து கூடினரென்க. கௌசிகன் - குசிக குலத்தான்; தத்திதாந்த நாமம். நீர்வளநிலவளங்களிற்சிறந்த நாட்டையுடைமையின், சோழனுக்கு வளவனென்று பெயர்; வளவன் -எல்லாவளங்களையு முடையான். 'இலங்குநீ ரோதைவேலையெனும் பலவேந்தர்' என்றும் பாடம். (342) 19. | பங்களங்குகுரஞ்சீனம்பப்பரங்கொப்பம்வங்கஞ் சிங்களந்துளுவமங்கமாரியந்திகத்தஞ்சேதி கொங்கணங்கடாரங்கொங்கங்கூபகமிரட்டமொட்டம் எங்கணுமுள்ளவேந்தரியாவருமீண்டிமொய்த்தார். |
|