(இ -ள்.) பங்களம் குகுரம் சீனம் பப்பரம் கொப்பம் வங்கம் சிங்களம் துளுவம் அங்கம் ஆரியம் திகத்தம் சேதி கொங்கணம் கடாரம் கொங்கம் கூபகம் இரட்டம் ஒட்டம் -, (என்கிற இத்தேசங்கள் முதலாக), எங்கணும் - எல்லாவிடங்களிலும், உள்ள-, வேந்தர் யாவரும் - அரசர்களெல்லோரும், ஈண்டி மொய்த்தார்-கூடி நெருங்கினார்கள்; (எ-று.) பங்களம் - பங்காள மென வழங்கும். வேந்தரியாவர் - தன்னொழி மெய்ம்முன் யகரம் வர இகரந்தோன்றிற்று. (343) 20. | அண்ணலந்துரகத்தாமாவாதியாங்குமரராலும் எண்ணிருபத்துநூறாம்யாதவகுமரராலும் வண்வேற்பூரிகௌரிமாமுதற்குமரராலும் எண்ணருஞ்சேனைவெள்ளமெங்கணும்பரந்தமாதோ. |
(இ -ள்.) அண்ணல் - பெருமையையுடைய, அம் - அழகிய, துரகத்தாமா ஆதி ஆம் - அசுவத்தாமன் முதலான, குமரராலும் - இளவீரர்களாலும், எண் இருபத்து நூறு ஆம் - பதினாறாயிர மென்னுந் தொகையுள்ளவரான, யாதவ குமரராலும் - யதுகுலத்து இளவீரர்களாலும், வண்ணம் வேல் - அழகிய வேலாயுதத்தையுடைய, பூரி - பூரிச்ரவசு என்பவனும், கௌரிமா - கௌரிமா வென்பவனும், முதல் - முதலாக, குமரராலும் . இளவீரர்களாலும், (ஆகிய) எண் அரு சேனை வெள்ளம் - கணக்கிடமுடியாத [அளவிறந்த] சேனைகளின் கூட்டம், எங்கணும் பரந்த - எல்லாவிடங்களிலும் பரவின; (எ-று.)-மாது, ஓ - ஈற்றசை. எண்ணிரு பத்து நூறு - பண்புத்தொகைப் பன்மொழித்தொடர்; எண்ணிரண்டு - பதினாறு: பத்துநூறு - ஆயிரம் எண்ணிரண்டாகிய பத்து நூறென்க. யாதவர் - யதுவின் குலத்தவர்; தத்திதாந்தநாமம்; யது - சந்திரவமிசத்து ஓரரசன். எண்ணிருபத்து நூறாம் யாதவகுமார ரென்றது, கண்ணனுக்குப்பதினாறாயிரம் கோபஸ்திரீகளிடம் பிறந்தவர்களான நாராயணகோபாலர் முதலியோரை; கீழ்த் துரியோதனன் கண்ணனைப் படைத்துணையழைக்கப் போனபொழுது அவனால் துரியோதனனுக்குத் துணையாகக் கொடுக்கப் பட்டனர் இவரென அறிக. எண் அரு - (மனத்தால்) நினைத்துப் பார்ப்பதற்கும் முடியாத எனினுமாம். வெள்ளம் - ஓர்பெருந்தொகை; இனி, சேனை வெள்ளம் - சேனைகளாகிய பிரவாகங்களென்றுமாம். (344) 21. | தம்பியரனைவரும்துச்சாதனன்முதலாவுள்ளோர் வெம்பரிதடந்தேர்வேழம்வேல்சிலைவடிவாள்வல்லோர் அம்பரத்தளவுமுந்நீரம்பரமெழுந்ததென்ன வும்பருமிம்பராருமுரகரும்வெருவவந்தார். |
(இ -ள்.) வெம் பரி - வேகமான குதிரைகளைச் செலுத்துந் தொழிலிலும்,தட தேர் - பெரிய தேர்களை நடத்துந் தொழிலிலும், |