சகுனி முதலிய இனத்தவரை உளப்படுத்தியென்க; இதற்கு நீயாவது உன் இனத்தவராவது சென்று கேட்க வென்று கருத்து; இது - ஒருமைப் பன்மை மயக்கத்தின்பாற்படும். (350) 3. | ஒன்றநம்படைகளெல்லாமொருபகற்பொழுதிற்கொல்வான் நின்றனனிராவானென்பானீயவன்றன்னைவேண்டிற் கொன்றெனைப்பலிகொடென்றுகூறுமக்குமரற்கொன்றால் வென்றுனக்கரசும்வாழ்வுமெய்தலாம்விரைவினென்றான். |
(இ - ள்.) '(எதிர்ப்பக்கத்தில்),இராவான் என்பான் - இராவா னென்பவன், நம் படைகள் எல்லாம் ஒன்ற ஒரு பகல் பொழுதில் கொல்வான் -நமது சேனைக ளெல்லாவற்றையும் ஒருசேர ஒருதினத்துப் பகற்பொழுதினுள்ளேகொல்ல, நின்றனன் - (உறுதிகூறி) நின்றுள்ளான்; அவன் தன்னை நீவேண்டின் - அந்தச்சுத்த வீரனை நீ (போய்ப்) பிரார்த்தித்தால், 'எனைகொன்று பலிகொடு' என்று கூறும் - (அவன் சம்மதித்து) என்னைக் கொன்றுபலிகொடுப்பாய் என்று (உன்னை நோக்கிச்) சொல்வான்; அக்குமரன்கொன்றால் - அந்த இளவீரனைக் கொன்று பலிகொடுத்துவிட்டால், விரைவின்வென்று அரசும் வாழ்வும் எய்தல் உனக்கு ஆம் - துரிதத்தில் (பாண்டவரைச்)சயித்து அரசாட்சி யையும் நல்வாழ்க்கையையும் அடைதல் உனக்குக்கைகூடும்,' என்றான் - என்றும் [துரியோதனனை நோக்கிக்] கூறினான்(வீடுமன்); (எ - று.) "அரவமின்மகன் தெவ்வர், கொற்ற வெம்படை யனைத்துமோரம்பினாற் கொல்வனோர் தினத் தென்றான்" எனக் கீழ்ச்சருக்கத்து வந்தமையுங் காண்க. என்பானெனச் செயப்படுபொருள் வினைமுதல்போலக் கூறப்பட்டது: "இல்வாழ்வா னென்பான்" என்ற திருக்குறளிற் போல: இது செய்வினை செயப்பாட்டுவினைப்பொருளில் வந்த வழுவமைதி யென்றும், இதில் அகரச்சாரியையும் படுவிகுதியுந் தொக்குநின்றனவென்றுங் கூறுவர். "ஊரெனப்படுவது உறையூர்" என்ற விடத்துப்போல, இங்கே என்பா னென்பது - என்றுசிறப்பித்துக் கூறப்படுவானென உயர்வு தோன்ற நிற்கு மென்க. 'குமரற்கொன்றால்' என்பதை, கீழ்க்கவியில் 'அவற்கேண்மின்' என்றதுபோலக்கொள்க. (351) 4.-சகதேவன் களப்பலிக்கு முகூர்த்தம்நிச்சயித்தல். என்றலுமவனுமாங்கோரியந்திரவெகினமூர்ந்து சென்றனனவனுங்கேட்டுச்சிலையில்வெங்கதிரைத்திங்கள் ஒன்றியபகலிராவிற்களப்பலியூட்டினல்லால் வென்றிடலரிதென்றிட்டான்கிளைஞரைவேறிடாதான். |
(இ -ள்.) என்றலும் - என்று (வீடுமன்) சொன்னவுடனே, அவனும் - அத்துரியோதனனும், ஓர் இயந்திரம் எகினம் ஊர்ந்து - |