பக்கம் எண் :

முகூர்த்தங்கேள்விச் சருக்கம் 315

ஒரு ஹம்ஸயந்திரத்தின்மேல் ஏறி, ஆங்குசென்றனன் - அச்சக தேவனிடம்
போனான்; கிளைஞரை வேறு இடாதான் - (தனது) சுற்றத்தாரைப் பேதமாகக்
கொள்ளாதவனாகிய, அவனும் - அச்சகதேவனும், கேட்டு - (துரியோதனன்
வந்த காரியத்தை) விசாரித்து, (உடனே), 'சிலையில் - தநுர் [மார்கழி]
மாசத்தில், வெம் கதிரை திங்கள் ஒன்றிய பகல் - சூரியனைச் சந்திரன் கூடிய
நாளில் [அமாவாசையில்], இராவில் - இராத்திரியில், களம் பலி ஊட்டின்
அல்லால் - போர்க்களத்துக்குரிய பலியைக் கொடுத்தாலல்லாமல், வென்றிடல்
அரிது - (பகையைச்) சயித்திடுதல் அரியதாம்,' என்றிட்டான் - என்று
உண்மைகூறினான்; (எ - று.)

     தனதுதாயாதிகளான துரியோதனாதியரை அபேதமாக நினைக்குந் தூய
நெஞ்சுடையவ னாதலால் இங்ஙனம் உள்ளபடி கூறினானென்பார்,
'என்றிட்டான்கிளைஞரை வேறிடாதான்' என்றார்.  இயந்திரவெகினம் -
அன்னப்பறவையின்வடிவமைத்துச் செய்யப்பட்ட யந்திர வாகனம்.  சிலை -
வில்வடிவமானதோர்இராசி;  அதிற் சூரியன் பிரவேசிக்கும் மாதம் அதனாற்
பெயர்பெறும்.  வெங்கதிர் - உஷ்ணமான கிரணங்களை யுடையது;
பண்புத்தொகையன்மொழியென்றாவது அடையடுத்த சினையாகுபெய
ரென்றாவது இதற்கு இலக்கணங்கூறுக.  சந்திரன் தனது பதினாறுகலைகளுள்
இரண்டு கலைமாத்திரம்மிகுந்தவனாய்ச் சூரியகிரணங்களில் மறைகிற தினமே
அமாவாசையாதலால்,'வெங்கதிரைத் திங்க ளொன்றிய பகல்' என்றார்.  பலி
யூட்டுதல் - ஒருவனைக்கொய்து பலியாகத் தேவதைக்கு நைவேத்தியஞ்
செய்தல்; பலி - தேவர்க்குஇடும் உணவு.  கீழே "இன்றே யுற்றவற்
கேண்மின்" என்று வீடுமன்கூறியதற்கு ஏற்ப, விரைந்து செல்லவேண்டி,
இயந்திரவெகினமூர்ந்துசென்றனனென்க.  'இந்திர விமானமூர்ந்து' என்றும்
பாடம்; துரியோதனன்அன்றிரவிலேயே நள்ளிருளில் எவருமறியாமல்
உபப்பிலாவியம் புக்குச்சகதேவனைக் கண்டு நன்முகூர்த்தங் கேட்டு
மீளவேண்டித் தேவசில்பியானவிசுவகருமாவைத் தியானித்து வரவழைத்துப்
பிரார்த்தித்துஆகாசத்திலேயோடவல்லதொரு மாயத்தேரைப் பெற்றுச்
சென்றான் என்றுபெருந்தேவனார் பாரதத்து உரைநடை.       (352)

5.-இராவான் தன்னைப் பலியிட உடன்படுதல்.

ஐவரிலிளையோன்றன்பான்முகூர்த்தங்கேட்டவர்சேயான
பைவருமுடியோன்றன்பாற்சேறலும்பணிந்துதாதை
உய்வருவரங்கேட்டென்னையூட்டுகபலிநீயென்றான்
எய்வருசிலையினானும்பெற்றனனென்றுமீண்டான்.

     (இ - ள்.) (இவ்வாறு துரியோதனன்),ஐவரில் இளையோன் தன்பால்
முகூர்த்தம் கேட்டு - பஞ்சபாண்டவர்களுள் இளையவனான சகதேவனிடம்
(களப்பலியூட்டுதற்கேற்ற) நல்முகூர்த்தத்தை விசாரித்தறிந்துகொண்டு, அவர்
சேய் ஆன பை வரு முடியோன் தன்