பக்கம் எண் :

அணிவகுப்புச் சருக்கம் 327

'இற்றைநாள் - இன்றைதினம், அதிரதர் மகாரதர் சமரதஆதியர் எவரொடும்-
அதிரதர் மகாரதர் சமரதர் முதலியோரான எல்லோரோடும், கொற்றம் வஞ்சி
மிலைச்சி - வெற்றியைக் கொடுப்பதான வஞ்சி மாலையைச் சூடி, குரு
நிலத்திடை எகுக - குருக்ஷேத்திரத்திற் (போருக்குப் புறப்பட்டுச்)
செல்வாயாக,'என்ன - என்று, இவை செப்பினான் - இவ்வார்த்தைகளைக்
கூறியனுப்பினான்;(எ - று.)

    வசுதேவன் கண்ணனைப் பெற்ற தந்தை; தேவகியின் கணவன்.
'ஆதியர்'என்றது, அர்த்தரதரை.  அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர்
எனத்தேர்வீரர் நால்வகைப்படுவர்.  அதிரதர் - முழுத்தேரரசர்; அவராவார்-
தாம்ஒரு தேரில் ஏறி நின்று தம் தேர் குதிரை சாரதிகளுக்கு அழிவுவராமற்
காத்துப்பலவாயிரந் தேர்வீரரோடு எதிர்த்து வேறு துணையில்லாமலே போர்
செய்துவெல்லும் வல்லமையுடையார்.  அவரிற் சிறிது தாழ்ந்தவர் - மகாரதர்
இவர்பதினோராயிரந் தேர்வீரரோடு பொருபவர்.  சமரதர் ஒரு தேர்
வீரனொடுதாமும் ஒருவராய் எதிர்க்க வல்லவர்.  அர்த்தரதர் - அவ்வாறு
எதிர்க்குமளவில் தம் தேர் முதலியவற்றை இழந்து போம்படியானவர்; இவர்
இருவர் சேர்ந்தால் ஒரு சமரதனுக்கு ஒப்பாவர்.  வஞ்சிப் பூ மாலை -
பகைவர்மேற்  பொரச் செல்வோர் அணிவதற்கு உரியது.  'இருந்து' என்றும்
பாடம்.

     இதுமுதற் பதினாறுகவிகள் - பெரும்பாலும் முதல் மூன்று ஐந்தாஞ்
சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள்.                             (362)

    2.- இதுவும், மேற்கவியும் -ஒருதொடர்: பாண்டவர்
    சேனைவீரரைச் சுவேதன்வகுத்தமையைக் கூறும்.

அதிரதாதிபர்தானும்வீமனும்விசயனுந்திறலபிமனுஞ்
சிதைவிலாதசிகண்டிசாத்தகிதிட்டத்துய்மன்விராடர்கோன்
மதுரமாமொழிதருமனோடிவாமாரதாதிபர்சமரதப்
பதிகளானவர்யாகசேனனுதாமனுத்தமபானுவே.

     (இ -ள்.) தானும் - சுவேதனும், வீமனும் - வீமசேனனும், விசயனும்-
அர்ச்சுனனும், திறல் அபிமனும் - போர் வல்லமையுடைய அபிமந்யுவும்,
(என்னும் இவர்), அதிரத அதிபர் - அதிரத் தலைவர்களாகவும், சிதைவு
இலாத- (போரில்) வலியழிதலில்லாத, சிகண்டி-, சாத்தகி-, திட்ட துய்மன்-
விராடர்கோன்-விராடராசன், மதுரம் ஆ மொழி தருமனோடு - இனிமையாகப்
பேசுகிற யுதிட்டிரனுடன், இவர் - இவர்கள், மாரத அதிபர் - மகாரதத்
தலைவர்களாகவும், யாகசேனன்-துருபதராஜன், உதாமன் - யுதாமந்யு,
உத்தமபானு - உத்தமோசா, (என்னும் இவர்), சமரதர் பதிகள் ஆனவர்-
சமரதத் தலைவர்களாகவும்; (எ - று) மேற்கவியிலுள்ள 'ஆக' என்பது,
ஈண்டும் ஆங்காங்கு எடுத்துக் கூட்டத்தக்கது.

   வீமன் -பீமன்; பகைவர்க்குப் பயங்கரனானவனென்று பொருள்.  விசயன்,
பற்குனன், பார்த்தன், கிரீடி, சுவேதவாகனன், பீபற்சு, கிருஷ்ணன், சவ்வியசாசி,
தனஞ்சயன், பாகசாஸநி, நரன், ஜிஷ்ணு