அடையவல்ல,கடோற்கசன் என்னும் வீரனும்-, நண்ணும் அர்த்தரதர்க்கு நாயகர் ஆக - பொருந்தின அர்த்தரதத் தலைவர்களாகவும், மண் அகத்து மகீபர்தம்மை - நிலவுலகத்து அரசர்களையெல்லாம், அணி அணிகள் ஆக வகுத்துளான்-இனமினமாகப் பிரித்திட்டான்; (யாவனெனில்), விண் அகத்து அணி விபுதர் சேனையில் வேளொடு ஒத்தனன் வீரன் - சுவர்க்கலோகத்திற்குப்பொருந்தின தேவர்களுடைய சேனையில் தலைவனாகவுள்ள சுப்பிரமணியக்கடவுளோடு ஒத்த பலபராக்கிரமசாலியான சுவேதராசன்; (எ - று.) எண்ணும் வெற்றி பெறும் - தான் மனத்தில் நினைக்குஞ் சயத்தை நினைத்தவாறே பெறத்தக்க என்றுமாம். விபுதர் - விசேஷ புத்தியுடையோர்: தேவர்க்குப் 'புலவர்' என்றதொரு தமிழ்ப்பெயருங் காண்க. மஹீ - பூமி; பெரியது. வேள் என்னும் பகுதிக்கு - விரும்புதலென்று பொருளாதலால், யாவராலும் விரும்பப்படுங் கட்டழகுடைய மன்மதனுக்கும், முருகனுக்கும், வேள் என்பது - காரணப்பெயர். இங்கே காமவேளை விலக்குதற்கு, 'விபுதர் சேனையில் வேள்' என்றார். தேவாமிசமான பாண்டவரது சேனைக்குத் தலைவனா தலால் சுவேதனுக்குத் தேவசேனாதிபதியை உவமை கூறினார். (364) 4.-பாண்டவரும் கண்ணனும்போர்க்குச் சித்தஞ் செய்ய, பலராமன் தீர்த்தயாத்திரை செல்லத் தொடங்குதல். நெருங்குவெம்படைகண்டுவந்தபினைம்புலன்களுநெஞ்சமும் ஒருங்குசென்றெனமன்னரைவருமாலும்வெஞ்சமமுன்னவே மருங்குநின்றவிராமனும்பின்மதித்தபோர்முடிவளவும்யான் பொருங்கடும்புனனதிகளாடுவனென்றுநண்பொடுபோயினான். |
(இ -ள்.) நெருங்கு வெம் படை கண்டு - (இங்ஙனம் அணிவகுக்கப்பட்டு) நெருங்கின உக்கிரமான சேனையைப் பார்த்து, உவந்தபின்- மகிழ்ந்த பின்பு, ஐம்புலன்களும் நெஞ்சமும் ஒருங்கு சென்று என - பஞ்சஇந்திரியங்களும் மனமும் ஒருமித்துப் போனாற்போல, மன்னர் ஐவரும் மாலும்- பஞ்சபாண்டவர்களுங் கண்ணனும், (ஒருமித்து), வெம் சமம் உன்ன -கொடிய போரைக் குறித்து நிற்க,- மருங்கு நின்ற இராமனும் - பக்கத்திலேயிருந்த பலராமபிரானும், பின்-பின்பு, 'மதித்த போர் முடிவு அளவும்- (நீங்கள்) நினைத்த யுத்தம் முடிகிற வரையிலும், யான்-, பொரும் கடு புனல்நதிகள் ஆடுவன் - (அலை) மோதும் விரைவான புண்ணிய தீர்த்தத்தையுடையஆறுகளிலே (சென்று) நீராடுவேன்,' என்று - என்று சொல்லி, நண்பொடுபோயினான் - (யாவரிடத்துஞ்) சினேகமாகவே போயருளினான்; (எ - று.) "நளியிரு முந்நீ ருடுத்தமா நிலமு நானிலம் பொறுத்தவாளரவு, நெளியமாகடலந் தானைவந் தீண்ட நெய்ம்முகங் கமழும்வேலைவர்க், களையுறையரவமுயர்த்தவ னொடுபோ ரடுத்திட நடுநிலை யமைந்த, வளைமருள் மேனியொருகுழை யொருவன் வண்புனலாட்டின் மேலெழுந்தான்" என்றார்,ஸ்ரீபாகவதத்தும். பலராமன் - கண்ணனுக்குத் தமையன்: திருமாலின் எட்டாம்அவதாரம்; இவனிடத்து ஆதி |