(இ - ள்.)போன - (இவ்வாறு) புறப்பட்டுச்சென்ற, வெம் - (பகைவர்க்குக்) கொடிய, பலபத்திரன் - பலராமன், பொரு பூசலில் புகுதேன் எனா மானம் வெம் சிலை முன் இறுத்த விதுரனோடு - 'எதிர்க்கிற யுத்தத்தில் (எவர்பக்கத்துஞ்) சேர்ந்து போர் செய்யமாட்டேன்' என்று (தன்போலவே) கூறிப் பெருமையையுடைய கொடியவில்லை முன்னமே முறித்துப்போகட்ட விதுரனுடனே, மகிழ்ந்து போய் - மனமுவந்து சென்று, கான் அகங்களில் வரையில் வாழ் முனி கணம் விரைந்து எதிர்கொள்ள - காட்டினிடங்களிலும் மலைகளிலும் வசிக்கிற முனிவர்கூட்டம் (ஆங்காங்கு) விரைந்து வந்து (தம்மை)எதிர்கொண்டு உபசரிக்க, எங்கணும் நானம் ஆடுவான் - எல்லாவிடங்களிலும்[புண்ணிய தீர்த்தங்களிலெல்லாம்] ஸ்நாநஞ் செய்யும்பொருட்டு, இரு நாலுதிக்கினும் நண்ணினான் - எட்டுத்திக்குகளிலுஞ் சேர்ந்தான்; (எ - று.) பலபத்திரன் என்பதற்கு - வலிமையாற் சிறந்தவனென்று பொருள்; பத்ரன்- சிரேஷ்டன். கீழ்க் கிருட்டினன் தூதுசருக்கத்தில் கூறியபடி, "வில்லிரண்டினுமுயர்ந்த வில்"லாதலால், 'மான வெஞ்சிலை' எனப்பட்டது. கானகங்களில்வரையில் வாழ்முனிகணம் விரைந்து எதிர்கொள்ள- "மலர்தலையுலகமேத்துமாதவக் கிழவ ரெல்லாம், இலை விரி சாலை நின்று மெழுந்தனரெதிர்கொண்டாரால்" எனப்பாகவதத்துக் கூறுமாறுங் காண்க. வரையென்னுங்கணுவின் பெயர், அதனையுடைய மூங்கிலுக்குச் சினையாகுபெயராய், அது பின்அம் மூங்கில் விளையும் மலைக்குத் தானியாகுபெயராதலால்,இருமடியாகுபெயர். (366) 6.-இதுமுதல் நான்குகவிகளால்,பாண்டவர்பக்கத்தில் அணிவகுக்கப்பட்டு நின்ற சதுரங்கசேனைகளை முறையே வருணிக்கிறார்: அவற்றுள், இது - யானை வருணனை. இடிபடப்படவருமுகிற்குலமெனநிரைக்கடலெனநெடுங் கடிபடப்படவதிர்பணைக்குலமெனவதிர்ப்பனகறைகள்போ லடிபடப்படவுரகர்பைத்தலையணிமணிக்கணமடையவும் பொடிபடப்படவுடனடப்பனபுகர்முகக்கரிநிகரமே. |
(இ -ள்.) புகர் முகம் - செம்புள்ளிகளையுடைய முகத்தையுடைய, கரி -யானைகளின், நிகரம் - கூட்டம்,- இடி பட பட வரும் முகில் குலம் என -இடிகள் மிகுதியாகஉண்டாக (நீருண்டு மழை பெய்ய) வருகிற காளமேகங்களின்கூட்டம் போலவும், நிரை கடல் என - வரிசையாகப் பொங்கிவருகிற கடல்கள்போலவும், நெடு கடி பட பட அதிர் பணை குலம் என - மிக்க ஓசைமேன்மேல் உண்டாக முழங்குகிற வாத்தியங்களின் கூட்டம் போலவும்,அதிர்ப்பன-பிளிறுவன; கறைகள்போல் அடி பட பட - உரல்கள்போன்ற(தமது) கால்கள் (அடியெடுத்துவைக்குந்தோறும்) மேன்மேற்படுதலால், உரகர்பை தலை அணி மணி கணம் அடையவும் பொடி பட பட -(கீழுலகத்திலுள்ள) நாகரது படத்தையுடைய தலையிற் பொருந்தி |