13.- இது - முரசம், குடை,கொடி, ஆயுதம் என்பவற்றின் வருணனை. சதியெனைப்பலவெனமுழக்கினசதவிதப்பணைதவளமா மதியெனைப்பலவெனநிழற்றினமகிபர்பொற்குடைமழைகொள்வான் நதியெனைப்பலவெனநிரைத்தனநவமணிக்கொடிநளினவெம் பதியெனைப்பலவெனவெறித்தனபலவகைப்படைகுலவவே. |
(இ -ள்.) (அந்தச் சேனையில்), சதம் விதம் பணை - நூறு வகைப்பட்டவாத்தியங்கள், எனை பல சதி என - மிகப்பலவான தாள வகைகளை யொத்து,முழக்கின - ஒலித்தன: மகிபர் பொன் குடை - அரசர்களது அழகிய குடைகள்,தவளம் மா மதி எனை பல என - வெண்ணிறமான பெரிய பூர்ண சந்திரன்மிகப்பல என்னும்படி [அனேக சந்திரர் இருந்தாற்போல], நிழற்றின -நிழலைச்செய்தன; நவ மணி கொடி - நவரத்தினங்களிழைக்கப்பெற்றகொடிகளின் சீலைகள், மழை கொள் வான் நதி எனை பல என -குளிர்ச்சியைக்கொண்ட ஆகாச கங்காநதி மிகப்பல என்னும்படி [பலகங்கைகள் இருந்தாற்போல], நிரைத்தன - ஒழுங்காய் நிறைந்தன;பலவகைப்படை - அநேக வகை ஆயுதங்கள், நளினம் வெம்பதி எனை பலஎன - தாமரைக்கு விரும்பப்படுந் தலைவனான சூரியன் அநேகமென்னும்படி[பல சூரியர் ஒருங்கு விளங்கினாற்போல], குலவ எறித்தன - விளங்க ஒளிவீசின; (எ - று.) இரண்டுமுதலிய மூன்றடிகள் - இல்பொருளுவமை. மேலே வரிசை வரிசையாக அசைந்து நெடுந்தூரம் தொடர்பட்டு நிற்றலால், கொடி வரிசைக்கு வான்நதி உவமையாம். தாமரை சூரியனொளியைக் கண்டவிடத்து மலர்தலும், அதனைக் காணாதவிடத்துக் குவிதலுமாகிய இயல்புபற்றி, தாமரையாகிய பெண்ணுக்குச் சூரியனைக் கணவனென்றல் மரபு. பலவகைப்படை-எய்வன வெட்டுவன குத்துவனவாகிய அம்பு வேல் வாள் ஈட்டி முதலியன. தாளங்கள் நூற்றெட்டு வகையாதலால், 'சதியெனைப்பல' என்றது. நூறென்னும் பொருளைத் தருகின்ற சதமென்னும் சொல், இங்கே மிகப்பல வென்ற மாத்திரமாய் நின்றது. பணை-பறைப்பொது. பொன் குடை - பொற்காம்பிட்டகுடை யென்றுமாம்; பொன் - கருவியாகுபெயர். நவமணி- கோமேதகம், நீலம்,பவழம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன. வெம்மை என்பது - பண்புச்சொல்லாய் வெப்பத்தை யுணர்த்துவதேயன்றி,உரிச்சொல்லாய் விருப்பத்தையும் உணர்த்துதலை 'வெம்மை வேண்டல்'என்னுந் தொல்காப்பியத்தால் அறிக. (374) 14.- இது - சேனைப்பொதுவர்ணனை. பிடர்வலிக்கடகரிகளிற்செறிபிடிகளிற்புனைமுடிகளிற் படர்நிழற் கவிகையின்மிசைத் துகள்பரவிமொய்த்தெழுபுரவியிற் சுடர்விதப்படை களினிரைப்படுதுகிலுடைக் கொடிகளின் விராய் அடர்பொருப்பினமிடையிடைப்பயிலடவியொத்ததுபுடவியே. |
|