எப்பொழுதும் வேகமாகவே சென்று கொண்டிருந்தாலுஞ் சிறிதும் இளைப்புறாத தன்மையில்இரவி புரவி, உவமை. உவமையணியும் உயர்வுநவிற்சியணியும்விரவியது. கதத்தினொடும் - வலிமையோடும் என்றுமாம்: இமைப்பொழுது - இயற்கையில் மனிதன் ஒருகால் கண்ணிமைகளை மூடித்திறக்குங் காலம். அண்டத்துக்கு உள்ளேயிருக்கும் ஏழுகடல்களன்றி அண்டத்துக்கு வெளியே எல்லா அண்டங்களுக்கும் ஆதாரமாகஇருப்பதொரு பெரு வெள்ளத்துக்குப் பெரும் புறக்கடலென்று பெயர்; புணரி -(நதிகளோடு) புணர்வது எனக் காரணப்பெயர்; புணர்தல் - கலத்தல். நதிகளாகிய பெண்களுக்குக் கடலைக் கொழுநனென்றல், கவிமரபு. துகிர்ப்ப -தூர்ப்ப என்பதன் மரூஉ; தனித்தனி ஒவ்வொரு நிறமுடையனவும், ஒவ்வொன்றே பலநிறங் கலந்துள்ளனவும் ஆகிய எல்லாம் அடங்க, 'பல வகைநிறத்த' என்றார். இனி யவன, சவனத்தினிடை வளர்வன என்பதற்கு- யவனக்குதிரை களுள்ளும் ஜவனக்குதிரைகளுள்ளும் வளர்ந்த தோற்றமுடையனவென்றும் உரைக்கலாம்; யவநம் - யவநதேசத்துக் குதிரை: ஜவநம் - ஜவத்தால் மிக்கது; ஜவம் - வேகம். (384) 24.-இது இரத வருணனை. நடுநிலமுரைக்கிலுயரவனிதலமொக்குமிசை நவமணியழுத்தி யனவா, னுடுநிகரமொக்குமுருளுருளைகளருக்கனுடனுடுபதியையொக் குமகுடங், கொடிமுடிகளொக்குமிவுளிகடிசையனைத்துமெறிகுரைப வனமொக்குமடைவே, யிடுதுகினிரைத்தகொடிசொரியருவியொக்குமெழுகுலகிரிகளொக் குமிரதம். |
(இ -ள்.) (அங்குள்ளதேர்களின்), நடு நிலம் - நடுவிடத்தை, உரைக்கில்- கூறத்தொடங்கினால், உயர் அவனி தலம் ஒக்கும் - (அது) உயர்ந்த பூமியின்பரப்பை ஒத்திருக்கும்; மிசை அழுத்தியன நவ மணி - மேலே பதித்துள்ளஒன்பது வகை இரத்தினங்கள், வான் உடு நிகரம் ஒக்கும்- ஆகாயத்திற்பொருந்திய நட்சத்திரங்களின் கூட்டத்தைப்போலும்; உருள் உருளைகள் - சுழலுந்தன்மையனவான சக்கரங்கள், அருக்கனுடன் உடுபதியை ஒக்கும் - சூரியமண்டலத்தோடு சந்திரமண்டலத்தையும் போலும்; மகுடம் - சிகரங்கள், கொடி முடிகள் ஒக்கும் - மலைச்சிகரங்களைப்போலும்; இவுளிகள் - (பூட்டிய) குதிரைகள், திசை அனைத்தும் ஏறி - எல்லாத்திக்குகளிலும் வீசுகிற, குரை பவனம் - ஒலிக்கின்ற காற்றை, ஒக்கும் -; அடைவே இடு - வரிசையாகக் கட்டப்பட்ட, துகில் நிரைத்த - சீலைகள் ஒழுங்கமையப் பெற்ற, கொடி - துவசங்கள், சொரி அருவி ஒக்கும் - (மலைச்சிகரத்தினின்று) பெருகுகிற நீர்ப் பெருக்கைப்போலும்; இரதம் - (இவற்றோடு கூடிய) தேர்கள், எழு குலகிரிகள் ஒக்கும் - ஏழு குலபருவதங்களையும் போலும்; (எ - று.) தேர்க்குக் குலகிரி உயர்வு வலிமைகளுக்கு உவமை: உவமையணி. இக்கவியிலுள்ள 'ஒக்கும்' என்ற முற்றுக்கள் பலவற்றுள் இறுதியிலுள்ள தொன்றொழியப் பிறவற்றையெல்லாம் 'ஒப்ப' என |