வெயிலெறிக்கவுடனே, யிடையிடையெடுத்தகொடிநிரையிருளெறிக்கயெழுதுகளிருளெறிக்க வெழுபா, ரடையவொர்தினத்தின்வலம்வருதிகிரியொத்தனர்களவனிபரெனைப் பலருமே. |
(இ- .ள்.) குடை-, நிலவு எறிக்க - சந்திரகாந்திபோன்ற ஒளியை வீசவும், இருபுறமும் அசை பொன் கவரி - இரண்டு பக்கத்திலும் வீசுகிற அழகிய சாமரமும், குளிர் நிலவு எறிக்க - குளிர்ந்த சந்திரகாந்திபோன்ற காந்தியை வீசவும், எறி கை படை - (பகைவர்மேற்) பிரயோகித்தற்கு உரிய கையிலுள்ள ஆயுதங்கள், வெயில் எறிக்க - சூரியகாந்திபோன்ற காந்தியை வீசவும், அணிமுடியுடன் மணிபணிகள் பல - அழகிய கிரீடத்தோடு இரத்தினங்கள் பதித்த பிற ஆபரணங்கள் அநேகமும், வெயில் எறிக்க-சூரிய காந்திபோன்ற காந்தியை வீசவும், உடனே - (இவற்றோடு) கூட, இடை இடை எடுத்த கொடி நிரை - நடுவிலே நடுவிலே தூக்கிப்பிடிக்கப்பட்ட துவச வரிசைகள், இருள் எறிக்க - இருளைச் செய்யவும், எழு துகள் - (சேனைகளால்) எழுப்பப்பட்ட தூளிகளும், இருள் எறிக்க - இருளைச் செய்யவும், அவனிபர்எனை பலரும் - அரசர்களெல்லோரும், எழு பார் அடைய ஒர் தினத்தின் வலம்வரு திகிரி ஒத்தனர்கள் - ஏழுதீவுகளாகிய பூமிமுழுவதையும் ஒருநாளிலே பிரதக்ஷிணமாகச் சுற்றி வருகிற காலசக்கரத்தைப்போன்றார்கள்; (எ - று.)
காலம்சக்கரம்போல் மாறிமாறிச் சுற்றிவருதல்பற்றி, காலசக்கர மெனப்படும். பொற் கவரி - பொற்காம்பையுடைய சாமரமென்றுமாம்; பொன் -கருவியாகுபெயர். கவரி - சமரீயென்பதன் திரிபு: இப்பெண்மானின் பெயர்,அதன் வால்மயிரினாற் செய்யப்பட்டதொரு இராசசின்னத்துக்கு இருமடியாகுபெயர். 'உடனே' என்றது, நிலவு வெயில்களுக்கும் இருளுக்கும் உள்ள மாறுபாட்டை நன்கு விளக்க வந்தது. எழு பார் - ஜம்பு, பிலட்சம், குசம், கிரௌஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம்என்பன. (387) 27.- இது - வாத்தியகோஷவரணனை. முழவுமுதலெற்றுவன கடிபடுபணைக்கருவி முழுமணிமுதற்கருவி பைங், குழன்முதலமைத்தபல வகைபடுதுளைக்கருவி குலவளை நரப்பு நிரையா, லுழைமுதலெழுப்புவனவிசைபடுமிசைக்கருவி யுழையுழை யதிர்த்தவுடனே, யெழுகடல் கொதித்ததெனவெழுபுவிமறித்ததெனவெழுமுகிலிடித்த தெனவே. |
(இ -ள்.) முழவு முதல் - மத்தளம் முதலாக, எற்றுவன - அடிக்கப்படுவனவான, கடிபடு - ஒலி மிக்க, பணை கருவி - பறைகளாகிய தோற்கருவிகளும், முழு மணி முதல் - பெரிய அடிக்கும் மணி முதலான, கருவி - கஞ்சக்கருவிகளும், பைங்குழல் முதல் - பசுமையான வேய்ங்குழல் முதலாக, அமைத்த - ஒழுங்காகச்செய்யப்பட்ட, பலவகை படு - அநேகவகைப்பட்ட, துளை கருவி - துளையுடைக் கருவிகளும், குலம் வளை- சிறந்த சங்குகளும், நரம்புநிரையால் - நரம்புகளின் வரிசையால், உழை முதல் எழுப்புவன இசை படும் - உழை முதலாக எழுப்பப்படுகிற (ஏழுவகைச்) சுரங்கள் பொருந்தின, இசை |