பது புறக்குஎன அத்துச்சாரியையின்றிவந்தது. 'பிறக்கிடுவது, என்ற பாடத்துக்குப் பிறகு இடுவது என்பது தன்னொற்றிரட்டிற்று என்னலாம்: இனி 'பிறக்கு' என ஒரு தனிச் சொல்லுங் கொள்ளலாம்: 'புறத்திடுவது' என்றும் பாடம். கருடனென்னும் சொல்லுக்கு - (பெரிய) சிறகுகளாற் பறப்பவனென்று பொருள். (389) 29.-இது -சேனையாலெழுப்பப்பட்டதூளியின் வருணனை.
உயர்முறைமைதப்புமவர்குடைநிழலிலிற்றையளவுளகுறையகற்றி யினிநா, னியல்புடைநெறித்தருமனொருகுடைநிழற்றவவனிடையினிலிருக் குவனெனா, வியனதிமுழுப்புனலின்முழுகிவருதற்கவனிமிசையுற நடப்பதெனவே, பயில்படைநடக்கவதன்முகடுறநிறைத்தரியபகலையுமறைத்ததுகளே. |
(இ -ள்.) 'உயர் முறைமை தப்புமவர் - சிறந்த இராசநீதி தவறுந்தன்மையுள்ள துரியோதனாதியரது, குடை நிழலில் - அரசாட் சியின்கீழே, இற்றை அளவு உள - இன்றைத்தினமளவும் (நான்) இருந்த குறை - குற்றத்தை, அகற்றி - ஒழித்து, இனி -, நான்-, இயல்பு உடைய நெறி தருமன்- முறைமை தவறாமலுள்ள நீதிமார்க்கத்தையுடைய யுதிட்டிரன், ஒரு குடை நிழற்ற - ஒப்பற்ற அரசாட்சியைச் செய்ய, அவன் இடையினில் - அவனது குடை நிழலினிடத்திலே, இருக்குவன் - இருப்பேன்', எனா - என்று எண்ணி, அவனி - பூமியானது, வியன் நதி முழு புனலில் முழுகிவருவதற்கு- பெரிய தேவகங்கா நதியினது மிக்கநீரிலே நீராடிவரும்பொருட்டு, மிசை உற- மேலேபொருந்த [மேல்நோக்கி யென்றபடி], நடப்பது என - செல்வதுபோல, பயில்படை நடக்க - (போரைப்) பயில்கிற[பழகிய] சேனைகள் செல்லுகையில், துகள் - புழுதிகள், அதன் முகடு உற நிறைத்து - அவ்வாகாயத்தின் மேலி டத்தை அளாவ மிக்கெழுந்து, அரி பகலையும் மறைத்த - மறைப்பதற் கருமையான சூரியனொளியையும் மறைத்து விட்டன; (எ - று.) சேனைகள் ஒருங்கே பூமியின்மேல் நடத்தலால் மேலெழும்பின புழுதிகள்இயல்பாக ஆகாயத்தைநோக்கிச் செல்லுதலை, துரியோதனனாளுகையின் கீழ்தான் இருந்த தோஷத்தை நிவிருத்திசெய்தற்கு ஆகாசகங்காநதியில்நீராடும்பொருட்டுப் பூமிதேவி மேலே சென்றதாகக் கற்பித்துக் கூறினதனால்,இதுவும் ஏதுத்தற்குறிப்பேற்றவணி. வியனென்னும் உரிச்சொல் விசாலமென்னும்பொருளுணர்த்தும். "வியனென் கிளவி யகலப்பொருட்டே": வியல் எனப்பதம் பிரித்தாலும் பொருள் இதுவே; இனி, வியனதி, வியத் - வானத்திலுள்ள,நதி - ஆகாசகங்காநதி யென்க. (390) 30.- இது - இருதிறத்துச்சேனைத்தொகை வருணனை. பொருபடைகொடிப்படை புறப்படுபெரும்படைபுகுந்து குருபூமியுறவே, யிரபடையுமொத்துடனெருங்கினசுராசுரரெதிர்ந்துபொருபூசலெனவே, யொருபடையெனப்படமொராயிரமுநொந்துரகனுரநெரியவேழுலகமும், வருபடைநிலத்தினிடை வந்தளவில் வேறுததிவைய மெனதாய்முடியுமே. |
|