(இ -ள்.) (துரியோதனாதியரது), பொரு படை - போர்செய்ய வல்ல (நடுவிலுள்ள) சேனைகளும், கொடி படை - முன்னனிச் சேனைகளும், புறம் படு பெரு படை - பின்னே வருகிற பெரிய [பின்னணிச்] சேனைகளும், குரு பூமி - குருசேக்ஷத்திரத்தில், புகுந்து உற - போய்ச் சேர, (இவ்வாறு), இருபடையும் - (பாண்டவகௌரவரது) இருதிறச் சேனைகளும், சுர அசுரர் எதிர்ந்து பொரு பூசல் என - தேவர்களும் அசுரர்களும் (தம்மில்) எதிரிட்டுச்செய்யும் போர்போல, உடன் ஒத்து நெருங்கின - விரைவாக ஒருங்குஅடர்ந்தன; (இங்ஙனம்), ஏழு உலகமும் வரு படை - ஏழு தீவுகளிலும்பொருந்தின சேனைகள், ஒரு படை என - ஒரே திரளாக, உரகன் படம் ஓர்ஆயிரமும் நொந்து உரம்நெரிய - (கீழிருந்து பூமியைத் தாங்கும்) ஆதிசேஷன்(பாரமிகுதியால்) தனது ஆயிரம் படங்களும் வருந்தி மார்புஞ் சிதையும்படி,நிலத்தினிடை வந்த அளவில் - குருசேஷத்திரத்திலே [யுத்தக்களத்திலே]வந்தமாத்திரத்தில், உததி வையம் - உவர்க்கடல் சூழ்ந்த இந்தச் சம்பூத்துவீபம்,வேறு எனது ஆய்முடியும் - வேறே எத்தன்மையதாய் முடியும்? (எ - று.) என்றது, ஏழுதீவுச் சேனைகளும் ஒரு தீவில் ஓரிடத்தில் ஒருங்கு திரளவே அப்பூமி அதிபாரத்தால் மிகத்தளர்ந்தது என்றவாறாம். பாண்டவரது சேனைக்குத் தேவசேனையும், துரியோதனாதியரது சேனைக்கு அசுர சேனையும் உவமையாம். உரம் நெரிய - வலிமை யொழிய என்றுமாம். உததி - நீர் தங்குமிடம்; உதம்-நீர்; உதக மென்பதன் விகாரம். 'வந்தளவிலேயுததி' என்றும் பாடம். (391) 31-இருதிறத்துச் சேனைமுழுவதையும்அழிக்க எவ்வளவு நாள்செல்லும் என்று துரியோதனன் வீடுமனை வினாவுதல். எண்ணறுபரப்பினிடையோசனைகளத்தினிடையிருபடையு நிற்பவெவருந், துண்ணெனவெருக்கொள முனின்றருள்பகீரதிசுதன்றனை வியாளதுவசன், கண்ணெதிர்நிரைத்தபடையாவையுமுருக்கியுயிர்கவரவெதுநாள் செலுமெனப், பண்ணளிநெருக்கொழிய மாதரிருகண்ணளிபடாததொடைமீளி பகர்வான். |
(இ-ள்.) (இவ்வாறு) களத்தினிடை - போர்க்களத்திலே [குருசேக்ஷத்திரத்திலே], எண் அறு யோசனை பரப்பினிடை - அளவில்லாத [மிகப்பலவான] யோசனையளவுகொண்டபரந்தஇடத்திலே, இருபடையும் - இருதிறத்துச் சேனைகளும், நிற்ப - (போருக்குச் சித்தமாய்) நிற்க, (அப்பொழுது), வியாள துவசன் - பாம்பையெழுதின கொடியையுடைய துரியோதனன், எவரும் துண்ணென வெருகொள முன் நின்றருள் பகீரதி சுதன்தனை - (கண்டவர்) எல்லோரும் திடுக்கிட்டு அச்சமடையும்படி (தனது சேனையின்) முன்னிடத்திலே (தன்னிடத்துக்) கருணையோடு (முதற்சேனாதிபதியாய்) நிற்கின்ற கங்கையின் குமாரனான வீடுமனைநோக்கி, கண்எதிர் - (நமது) கண்ணுக்கு எதிரிலே, நிரைத்த - அணிவகுக்கப்பட்டுத் திரண்டுள்ள, படையாவையும் - சேனைகளெல்லா வற்றையும், முருக்கி - அழித்து, உயிர் கவர - உயிரை வாங்குவதற்கு [கொல்ல], எதுநாள்செலும் - |